துக்ளக்

என் உருவாகிறது புற்று நோய்?

நூல்: என் உருவாகிறது புற்று நோய்? ஆசிரியர்: பத்மஹரி, விலை: 175/- வெளியீடு: பிளாக் ஹோல் மீடியா

இந்நூலாசிரியர் ஜப்பானில் புற்றுநோய் ஸ்டெம்செல் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர். நவீன ஆய்வுகளின் சாராம்சத்துடன், புற்று நோய்கள் குறித்த பல்வேறு தகவல்களை இந்நூலில் எளிய தமிழில் விளக்கியுள்ளார். இந்நோய்க்கு புகையிலை மற்றும் சிகரெட் போன்ற பழக்கம் மட்டுமல்ல, வேறு பல காரணங்களும் உண்டு என்றும், இந்நோயை எதிர்கொள்வது எப்படி என்றும் ஆய்வு ரீதியாக இந்நூலில் கூறியுள்ளார்.

மேலும் படிக்க...


கவனம் நமது வீடுகளில்

நூல்: கவனம் நமது வீடுகளில், ஆசிரியர்: மௌலவி நூஹ் மஹ்ழரி. விலை: ரூபாய் 70/- வெளியீடு: இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்

பெரும்பாலான வீடுகளில் கணவன், மனைவி, பிள்ளைகள், பெற்றோர், சகோதர - சகோதரிகள், மாமனார் - மாமியார்... என்று ஒருவருக்கொருவர் பிரச்னைகளோடு அமைதியின்றி வாழும் நிலையே காணப்படுகிறது. இதற்கும் வழி கூறவே பல மதங்களும், மார்க்கங்களும் தோன்றின. அந்த வகையில் இஸ்லாம் மார்க்கமும் இதற்கு சிறப்பான தீர்வுகளைக் கூறுகிறது. அதாவது, எப்படி குடும்ப உறவுகளைப் பேசி வளர்க்க வேண்டும்;

மேலும் படிக்க...


மேடை நடை

நூல்: மேடை நடை, ஆசிரியர்: 'சொல் அரசு' ஹபீபுல்லா. விலை: ரூபாய் 150 வெளியீடு: காமா பதிப்பகம்

25 ஆண்டுகளுக்கும் மேலாக மேடைப் பேச்சுக் கலையில் சிறந்து விளங்கி வருவதால் இந்நூலாசிரியருக்கு, 'சொல் அரசு' என்ற கௌரவப்பட்டமும் அறிஞர்களால் வழங்கப்பட்டுள்ளது. இவர் பேச்சுக் கலையில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், பல சிறந்த பேச்சாளர்களின் அனுபவ உரைகளையும், தொகுத்து புதிய பேச்சாளரகளுக்கு வழிகாட்டும் வகையில் இந்நூலை எழுதியுள்ளார்.

மேலும் படிக்க...


உயர் இரத்த அழுத்தத்தினைக் கட்டுப்படுத்த 201 அருமையான ஆலோசனைக் குறிப்புகள்

நூல்: உயர் இரத்த அழுத்தத்தினைக் கட்டுப்படுத்த 201 அருமையான ஆலோசனைக் குறிப்புகள், ஆசிரியர்: டாக்டர் பிமல் சாஜர், எம்.டி. விலை: ரூபாய் 80/- வெளியீடு: சுரதா பதிப்பகம்

சயோல் இதய மையத்தின் பிரதான மருத்துவரான இந்நூலாசிரியர், இதய நோய் உருவாகுவதற்கான காரணிகளை இந்நூலில் பட்டியலிட்டு, அதில் முக்கியமான உயர் இரத்த அழுத்தத்தைப் பற்றி மிக விரிவாக விளக்கி, அதைத் கட்டுப்படுத்த 201 அருமையான ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.

மேலும் படிக்க...


மனச் சோர்வு நீக்கும் நடைப் பயிற்சி.

நூல்: மனச் சோர்வு நீக்கும் நடைப் பயிற்சி. ஆசிரியர்: வெங்கட்ராவ் பாலு. விலை: ரூபாய் 50 /- வெளியீடு: நர்மதா பதிப்பகம்.

உடல் உழைப்பு இன்மையாலும், முறையற்ற உணவுகளாலும் உடலுக்குள் உருவாகும் பல்வேறு கழிவுகள், உரிய முறையில் வெளியேற்றப்படாமல் உடலுக்குள் தங்கி விடுகின்றன. அது நாளடைவல் பல்வேறு வியாதிகளாக வெளிப்பட்டு, நம் உயிருக்கே உலை வைத்து விடுகிறது. அதிலிருந்து தப்பிக்க யோகா, தியானம், விளையாட்டு, ஜிம், நடைப்பயிற்சி... என்று பல்வேறு வழிகள் உருவாகியுள்ளன.

மேலும் படிக்க...


மகாகவி பாரதியின் இஸ்லாத்தின் மஹிமை.

நூல்: மகாகவி பாரதியின் இஸ்லாத்தின் மஹிமை. தொகுப்பாசிரியர்: செ. திவான், விலை: ரூபாய் 100/- வெளியீடு: சுஹைனா பதிப்பகம்,

ஹிந்து சமயத்தில் ஆழ்ந்த பற்று கொண்ட மகாகவி பாரிதாயர், இஸ்லாம் மார்க்கம் குறித்தும் கதை, கட்டுரை, கவிதைகளை எழுதியுள்ளார். அவற்றை பாரதியின் பல்வேறு படைப்புகளில் இருந்து தேடி எடுத்து, இந்நூலை தொகுத்துள்ளார் ஆசிரியர்.

மேலும் படிக்க...


ஆனந்த விகடன் காலப் பெட்டகம்

நூல்: ஆனந்த விகடன் காலப் பெட்டகம் தொகுப்பாசிரியர்கள்: ரவிபிரகாஷ், ராஜா. விலை: ரூபாய் 180/-

Old is gold என்ற ஆங்கிலப் பழமொழிக்கு ஏற்ப 1926 முதல் 2000 வரை - அதாவது 75 வருட 'ஆனந்த விகடனில்ய வெளியான செய்திகளில், மனதைக் கவரும் மிக முக்கிய தகவல்களைத் தேர்ந்தெடுத்து 'பொக்கிஷம்' என்ற தலைப்பில் வெளியிட்டனர். தற்போது வெளியிட்டு வருகின்றனர். அவற்றிலிருந்தும் சுவையானவற்றை இந்நூலில் தொகுத்துள்ளனர். அரசியல், ஆன்மீகம், சமூகச் சூழல்கள், மக்களின் மனோபாவங்கள், இலக்கியங்கள், பழைய அபூர்வமான புகைபடங்கள்.. என்று பல விஈயங்கள், அந்தந்தக் காலகட்டங்களை பிரதிபலிக்கும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க...


திருக்குறள் உரைகள் ஆராய்ச்சி

நூல்: திருக்குறள் உரைகள் ஆராய்ச்சி ஆசிரியர்: கே.சி. லட்சுமி நாராயணன், விலை: ரூபாய் 50/- வெளியீடு: எல்.கே.எம். ப்ப்ளிகேஷன்ஸ்

மூத்த பத்திரிகையாளரும், சம்ய இலக்கிய ஆய்வு அறிஞருமான இந்நூலாசிரியர், இந்நூலில் திருக்கறளுக்கு இதுவரை எழுதப்பட்ட உரைகள் குறித்து ஆய்வு ரீதியாக எழுதியுள்ளார்.  இதுவரை யாரெல்லாம் திருக்குறளுக்கு உரைகள் எழுதியுள்ளார்கள்ந  அவர்களைப் பற்றிய வரலாறு விபரங்கள்;  உரைகளுக்கு இடையே உள்ள கருத்தொற்றுமை மற்றும் வேறுபாடுகள் திருவள்ளுவரையும், திருக்குறளையும் உயர்த்திப் பிடிக்க உதவும் காரணிகள்: திருக்குறளை ஏற்றிப் போற்றி பண்டையப் புலவர்களால் பாடப்பட்ட பாடல்கள் 'திருவள்ளுவ மாலை' யாக தொகுக்கப்ப்ட்ட விபரங்கள்;

மேலும் படிக்க...


ஆதிசங்கரரின் ப்ரச்னோத்ர ரத்ன மாலிகா: ஞானத்தின் நுழைவாயில்,

நூல்: ஆதிசங்கரரின் ப்ரச்னோத்ர ரத்ன மாலிகா: ஞானத்தின் நுழைவாயில், தமிழாக்கம்: சிவராமகிருஷ்ண சர்மா. விலை: ரூபாய் 150/- வெளியீடு: நர்மதா பதிப்பகம்

ஆதிசங்கர்ர் இயற்றிய இந்நூலை தமிழாக்கம் செய்து, அதற்கு விளக்கவுரையும் எழுதியுள்ளார் ஆசிரியர். கேள்வி - பதில் வடிவில் அமைந்த ரத்னமணி மாலை என்பது இந்நூலின் பொருள். இறைவனை உணரத் துணை செய்யும் அரிய ஞானம் அடங்கியது இந்நூல். மொத்தம் இது 66 சுலோகங்களைக் கொண்டுள்ளது.

மேலும் படிக்க...


நாடகமும் சினிமாவும்

நூல்: நாடகமும் சினிமாவும் ஆசிரியர்: ஏ.எல்.எஸ். வீரய்யா, விலை: ரூபாய் 90/- வெளியீடு: திருவரசு புத்தக நிலையம்

சிறந்த சினிமா தயாரிப்பு நிர்வாகியாக விளங்கிய இந்நூலாசிரியர், 'சினிமாவும் நானும்' என்ற தனது முந்தைய புத்தகத்திற்குக் கிடைத்த நல்ல வரவேற்பைத் தொடர்ந்து இந்நூலை உருவாக்கியுள்ளார். தமிழகத்தில் நாடகத்துறையும், சினிமாத் துறையும் எப்படி உருவாகி, வளர்ச்சி பெற்றன என்ற வரலாற்றுப் பின்னணியை ஆசிரியர் இந்நூலில் தொகுத்துள்ளார்.

மேலும் படிக்க...