-
எல்லா நினைவுகளும் ஞாபக அடுக்குகளில் நிரந்தரமாக இருந்து விடுவதில்லை. காலத்தின் மாயக்கரம் அதைத் தொடர்ந்து அழித்துக் கொண்டே இருக்கிறது. அழுத்தமாகப் பதிந்தவை மட்டுமே அழியாமல் இருக்கின்றன. அப்படி அழியாமல் தப்பியவை எப்போது நம் கண்முன் முகம் காட்டும் என்று நமக்குத் தெரியாது. எதிர்பாராமல் ஒருநாள் பஸ் நிறுத்தத்தில் பார்த்துவிடும் பழைய நண்பன்போல் அவை திடீரென்று முகம் காட்டலாம் அல்லது ஏதாவது ஒரு சிறு நிகழ்வு தூண்டிவிடும் பொறியில் வெடித்துச் சிதறி நம் மனமெங்கும் யிரம் கரங்களோடு க்கிரமித்துக் கொள்ளலாம்.அதுபோன்ற நினைவுகளின் 20 கரங்களை சிறுகதைகளாக்கி இருக்கிறார் திரு.சை.பீர்முகம்மது. இவை 50 ண்டு கால நினைவுகளில் இருந்து அவதானித்தவை. கதைகளையும், தனி வாழ்வையும் மிக நெருக்கத்தில் வைத்துக் கொள்ளும் அதிர்ஷ்டம் பலருக்கும் வாய்ப்பதில்லை. அதற்கான தைரியமும் இருப்பதில்லை. நெஞ்சிலே தெளிவுண்டாயின், வாக்கிலே ஒளியுண்டாகுமன்றோ? வெவ்வேறு திசைகளில் வெளிச்சம் வீசும் கதைகள் திரு.சை.பீர்முகம்மதிடமிருந்து பிறந்திருக்கின்றன. வாசித்துப் போகும் வழி நெடுக அவை வெளிச்சம் வீசுகின்றன. ISBN எண்: 981-08-2280-4
-
This book Biascopekaranum Vankozhigalum is written by S.Peermohammed and published by Thangameen Pathippagam.
இந்த நூல் பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும், சை.பீர்முகம்மது அவர்களால் எழுதி தங்கமீன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Biascopekaranum Vankozhigalum, பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும், சை.பீர்முகம்மது, S.Peermohammed, Sirukathaigal, சிறுகதைகள் , S.Peermohammed Sirukathaigal,சை.பீர்முகம்மது சிறுகதைகள்,தங்கமீன் பதிப்பகம், Thangameen Pathippagam, buy S.Peermohammed books, buy Thangameen Pathippagam books online, buy Biascopekaranum Vankozhigalum tamil book.
|