-
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் சிறப்பியல்புகள் இரண்டு. ஒன்று பாட்டு, மற்றொன்று பண்பு. இதுல் தனிசிறப்பு மூன்றரைக்கோடி தமிழ் மக்களுக்கும புரியும் விதத்தில், பாடும் வண்ணம் வரவேற்கும் வண்ணம் கல்யாண சுந்தரம் பாடினார். 29 ஆண்டுகாலம்மட்டுமே வாழ்ந்து, என்றும் நிலைத்து நிற்கும் எளிய பாடல்கள் மூலம் சமுதாயப் பிரச்சினைகளைப் பாடி, மக்கள் நெஞ்சங்களில் இணையிலாப் புகழ் படைத்த இனிய கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். ரொம்பப் புரட்சி பேசியவர்கள், விஞ்ஞானம் தந்த திரையைக் கண்டு மருண்டு, விலகி நின்றனர். இந்நிலையை மாற்றிக்காட்டினார். பட்டுக்கோட்டையார் தனித்தன்மையுடைய கவிஞர். சமுதாயத்திற்காகவே பாடிய கவிஞர். இருளில் பிறந்து தட்டுத்தடுமாறி, பொழுது விடியப் பாடினார்.தமிழின் தகுதிமிக்க கவிஞர்களான பாரதி, பாரதிதாசனுக்குப் பிறகு மக்களின் விடியல்களுக்காகப் பாடிய கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பொதுவுடமைத் த்த்துவங்களும், சமூக சீர்திருத்த சிந்தனைகளும் ஒப்பற்றவை. எளிமை மிகுந்த அவரது எழுத்துக்கள் மனித வர்க்கத்தை என்றைக்கும் உயர்த்தக் கூடியவை. கவிஞரின் கவிதைகளையும், திரை இசைப் பாடல்களையும் தொகுத்து நூலாக வெளியிடுவதில் கற்பகம் புத்தகாலயம் பெருமையும் , மகிழ்வும் கொள்கிறது.
-பதிப்பகத்தார்.
-
This book Patukotaiyaar Paadalgal is written by Pattukkottaiyar and published by Karpagam Puthakalayam.
இந்த நூல் பட்டுக்கோட்டையார் பாடல்கள், பட்டுக்கோட்டையார் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Patukotaiyaar Paadalgal, பட்டுக்கோட்டையார் பாடல்கள், பட்டுக்கோட்டையார், Pattukkottaiyar, Ilakiyam, இலக்கியம் , Pattukkottaiyar Ilakiyam,பட்டுக்கோட்டையார் இலக்கியம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Pattukkottaiyar books, buy Karpagam Puthakalayam books online, buy Patukotaiyaar Paadalgal tamil book.
|