-
சீவகன் காவியத் தலைவன் அவனைச் சிந்தா மணியே என்று அவன் தாய் அவன்
பிறந்தபோது அழைத்தாள்; அதனால் இந்நூலுக்கு ‘சீவக சிந்தாமணி’ என்று பெயர்
வழங்குகிறது.
இதன் ஆசிரியர் திருத்தக்க தேவர் ஆவார். அவர் ஒரு சமணத் துறவி என்று
அவருக்கு முத்திரை குத்தப்பட்டிருக்கிறது. இந்தக் காவியத்தைப் பொருத்தவரை
அவர் இளங்கோவடிகள் போல ஒரு மாபெருங் கவிஞர் எனவே கொள்ள வேண்டி இருக்கிறது.
அவர் துறவு பற்றிக் கூறுவதால் அவரைத் துறவி என்று கூறிவிட்டனர் என்று
தோன்றுகிறது.
இந்த நூல் கம்பராமாயணத்துக்கும், பெரிய புராணத்துக்கும் முன்பு தோன்றியது.
வைணவ ஆழ்வார்களும் சைவப் பெரியார்களும் கடல் மடை திறந்தது போன்று பாமாலைகள்
பாடிவிட்டுச் சென்று இருக்கின்றார்கள்.
அவர்களுக்குப் பின் தோன்றிய மதிக்கத்தக்க நூல்களுள் இது தலையாயது ஆகும்.
கல்வியில் பெரியவர் கம்பர் என்று கூறுவர்; காவியத்தில் திருத்தக்கர்
முன்னோடி என்று கூற வேண்டியுள்ளது. கம்பருக்கும் இவர் முன் மாதிரியாக
விளங்கியுள்ளார். இதன் தனிச் சிறப்பு ஏற்கனவே வழங்கி வந்த கதையை இவர் தன்
கவிதையாற்றலால் அழகுபடுத்தியுள்ளமை, சங்க இலக்கியப் பாடல்கள் அவற்றின் உவமை
மரபுகள் வருணனைகள் இதில் மிகுதியும் இடம் பெற்றுள்ளன.
எனவே சீவக சிந்தாமணி பழந்தமிழ் இலக்கிய மரபுகளைக் காத்துத்தரும் ஒரு
பெட்டகம் என்று கூறலாம். காலத்தில் முற்பட்டது என்பதால் மொழி நடை சற்றுப்
பொருள் உணர அரியதாக இருக்கிறது. நச்சினார்க்கினியர் விளக்கவுரை
தந்துள்ளார்.
-
This book Vivega Chinthamani Moolamum Uraiyum is written by Doctor Kathir Murugu and published by Saratha Pathippagam.
இந்த நூல் விவேக சிந்தாமணி மூலமும் உரையும், டாக்டர் கதிர் முருகு அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vivega Chinthamani Moolamum Uraiyum, விவேக சிந்தாமணி மூலமும் உரையும், டாக்டர் கதிர் முருகு, Doctor Kathir Murugu, Ilakiyam, இலக்கியம் , Doctor Kathir Murugu Ilakiyam,டாக்டர் கதிர் முருகு இலக்கியம்,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy Doctor Kathir Murugu books, buy Saratha Pathippagam books online, buy Vivega Chinthamani Moolamum Uraiyum tamil book.
|