| |||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|||||
| |||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||
You must be logged in to post a comment.
Jeeva Puthakalayam |
Information/Help |
Customer Care |
Follow us |
|
About Us Contact Us Terms and Conditions Tamil books blog Link to Us |
Frequently Asked Questions(FAQ) How to buy tamil books online? Tamil books online shopping - Top sellers Free Tamil E-Books for download Tamil books tags Tamil book news Tamil book Reviews Tamil book Release |
Help Desk: Customercare email : Write to us ccare@noolulagam.com Phone : Call us +91-7667-172-172 Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders Give Feedback |
![]() ![]()
|
இரவீந்தரநாத் தாகூர் ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
மகத்தான மகாத்மா பட்டத்தை
காந்தியடிகளுக்குத் தந்தவர்
தாகூர்
கற்பனைக் கடலில் மூழ்கி
கவிதை முத்துக்களை எடுத்தவர்
தாகூர்
கதைகள் கேட்டு வளர்ந்தவர்
கீதாஞ்சலி படைத்தவர்
தாகூர்
மாணவனாக இருந்தபோதே
மட்ட ற்ற கவிதை வடித்தவர்
தாகூர்
பகுத்தறிவு இன்பச்சோலை
மூட நம்பிக்கை பாலைவனம்
தாகூர்
போரை வெறுத்த புத்தர்
பாடல் பாடிய சித்தர்
தாகூர்
அன்பின் சின்னம்
பண்பின் சிகரம்
தாகூர்
உலகம் சுற்றிய கவிஞர்
உலகம் போற்றும் கவிஞர்
தாகூர்
டயரின் கொடுமைக்கு
சர் பட்டத்தை துறந்தவர்
தாகூர்
கவிதை கதை கட்டுரை நாடகம்
வடித்திட்ட வல்லவர்
தாகூர்
மரணத்திற்கு அஞ்சாதவர்
பணி முடிக்காமல் துஞ்சாதவர்
தாகூர்
இயற்கையின் இனிய நேசர்
இனிய கலைகளின் தாசர்
தாகூர்
எழுதியதோடு நில்லாமல்
ஏழைகளின் கண்ணீர் துடைத்தவர்
தாகூர்
உலகப் புகழ்க் கவிஞர்
ஒப்பற்றக் கவிக் கடல்
தாகூர்
நோபல் நாயகன்
அன்றே உலக நாயகன்
தாகூர்
—
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
தாகூர் கவிஞர் இரா .இரவி
மறுமலர்ச்சி நாயகர்
அரசியலை வெறுத்தவர்
தாகூர்
கவிஞர்களின் கவிஞர்
எழுத்தாளர்களின் எழுத்தாளர்
தாகூர்
கல்வியில் சீர்திருத்தம்
செயல்படுத்திக் காட்டியவர்
தாகூர்
நரபலியைச் சாடி
கவிதை கதை வடித்தவர்
தாகூர்
ஓவியமாக கவிதையும்
கவிதையாக ஓவியமும் படைத்தவர்
தாகூர்
உன்னை நீ அறிவாய்
உலகிற்கு உணர்த்தியவர்
தாகூர்
விளக்குகளை ஏற்றும்
ஆசிரிய விளக்கு
தாகூர்
தேசிய கீதங்கள் இயற்றியவர்
தேசியக் கவியாகத் திகழ்ந்தவர்
தாகூர்
பதினான்காவதாகப் பிறந்து
பார் போற்றும் கவிறானவர்
தாகூர்
மாதிரிப் பள்ளி தொடங்கி
முன் மாதிரியானவர்
தாகூர்
இந்திய வரலாறு எழுதி
உலக வரலாறு ஆனவர்
தாகூர்
யுகங்கள் கடந்து வாழும்
யுகம் வென்ற கவி
தாகூர்
—
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!