-
மலர்கள் இல்லாத உலகத்தை யாராவது நினைத்துப் பார்க்க முடியுமா...? சுகமோ... சோகமோ... எதுவாக இருந்தாலும் அந்த இடங்களில் மலர்களுக்கு முக்கியத்துவம் கிடைத்துவிடும். பல சமயங்களில் நம்மை மனிதர்கள் என்று நினைவூட்டுவதே இந்த மலர்கள்தான். ஆம், மலர்களின் வாசனைக்கு மயங்காத மனிதர்களே இல்லை! உணவுப் பொருள்களைப் போலவே நம்முடைய வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட பல விஷயங்களில் ஒன்றுதான் இந்த வண்ண வண்ண மலர்கள். கத்தரிக்காய், முருங்கைகாய், நெல், கரும்பு என்கிற விவசாய விளைபொருள் வரிசையில் மலர்களும் விளைபொருட்கள்தான். என்றாலும், மலர்களின் விற்பனை என்பது தனித்தன்மை கொண்டது. நிறமும் மணமும் ஓரிரு நாட்களே உயிர் பெற்றிருக்கும் என்றாலும், திருமணம் மற்றும் பூஜைக்கான பொருளாக மதிக்கப்படுவதால் மலர்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மலர்ச் சந்தை என்பது உள்ளூரில் மட்டுமல்ல... உலக அளவிலும் மிகமிகப் பெரியது! இதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, மலர் சாகுபடியை கையில் எடுத்து, வெற்றி வாசம் வீசியபடி வலம் வரும் விவசாயிகள் தமிழக அளவில் நிறையவே இருக்கிறார்கள். அந்த விவசாயிகளின் சாகுபடி அனுபவங்கள் மற்றும் சாகுபடி தொழில்நுட்பங்கள் 'பசுமை விகடன்' இதழில் தொடர்ந்து இடம்பிடிக்கிறது. இந்த அனுபவங்கள், பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகள் உட்கார்ந்து படித்து பெறும் பயிற்சியைவிட பலமடங்கு மேலானவை என்பதில் சந்தேகமே இல்லை. அந்த வகையில், இந்த வெற்றி விவசாயிகளின் அனுபவங்கள் இங்கே புத்தகமாக விரிகிறது உங்களுக்காக! இதையே பயிற்சிக் களமாகக் கொண்டு, நீங்களும் வெற்றிபெற வாழ்த்துக்கள்!
-
This book Intha Pookal Virpanaikku is written by Vikatan Prasuram and published by Vikatan Prasuram.
இந்த நூல் இந்தப் பூக்கள் விற்பனைக்கு, விகடன் பிரசுரம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Intha Pookal Virpanaikku, இந்தப் பூக்கள் விற்பனைக்கு, விகடன் பிரசுரம், Vikatan Prasuram, Vivasayam, விவசாயம் , Vikatan Prasuram Vivasayam,விகடன் பிரசுரம் விவசாயம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Vikatan Prasuram books, buy Vikatan Prasuram books online, buy Intha Pookal Virpanaikku tamil book.
|
vairamuthu varikalil nan tholaithu pooi vittan.
வணக்கம், நான் வைரமுத்துவின் நிறைய கவிதைகள் வாசித்துள்ளேன், அனால் என்மனதை கவர்ந்த ஒரு சில கவிதைகள் என் மனதில் ஆணி அடித்ததுபோல இன்னும் இருக்கிறது. நானும் பல நூலகங்களில் தேடி கிடைக்கவில்லை அந்த கவிதை நூல். அந்த நூலின் தலைப்பை மறந்துவிட்டேன். ஆனால் அதில் உள்ள ஒரு இல கவிதைகள் மனதில் இன்னும் இருக்கிறது. அதில் முதல் பக்கத்தில் காதலித்து பார் என்ற கவிதை இருக்கு. மற்ற கவிதைகளின் தலைப்பு, ஐந்து பெரிதா ஆறு பெரிதா, இடைவேளை நிஜம்,நயாகரா இன்னும் பல தலைப்பை ஒட்டிய கவிதைகள் உள்ளன. யாரவது எனக்கு இது எந்த படைப்பு நூலின் தலைப்பு என்ன என்று சொல்ல முடியுமா? எங்கு கிடைக்கும் என்று சொல்ல முடியுமா? நான் மலேசியாவில் வசிக்கிறேன். நன்றி
இந்த பூக்கள் விற்பனைக்கு அல்ல…