| |||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|||||
| |||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||
You must be logged in to post a comment.
Jeeva Puthakalayam |
Information/Help |
Customer Care |
Follow us |
|
About Us Contact Us Terms and Conditions Tamil books blog Link to Us |
Frequently Asked Questions(FAQ) How to buy tamil books online? Tamil books online shopping - Top sellers Free Tamil E-Books for download Tamil books tags Tamil book news Tamil book Reviews Tamil book Release |
Help Desk: Customercare email : Write to us ccare@noolulagam.com Phone : Call us +91-7667-172-172 Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders Give Feedback |
![]() ![]()
|
பக்கவாதத்தை முன்னறிந்து தடுக்கலாம்
ஒரு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண் தனது கைகளில் வைத்திருந்த உணவுத் தட்டை தவறவிடுகிறார். இதை அங்கிருக்கும் அனைவரும் கவனிக்கின்றனர்.
உணவு தட்டு கீழே விழுந்து அதில் இருந்த உணவுப் பொருட்கள் தரையில் சிந்துகிறது. இதனால் தான் ஏதோ தவறு செய்துவிட்டதாக கருதிய அந்த பெண், ஒன்றும் இல்லை கை தவறிவிட்டது என்று கூறி அங்கிருந்து நழுவ முயன்றார்.
அப்போது அவரது நடையிலும் மாற்றம் தெரியவே உடன் இருந்தவர்கள் மருத்துவரை அழைக்கலாம் என்று கூற, அந்த பெண்ணோ புதிய காலணியின் காரணமாகத்தான் தனது நடையில் தடுமாற்றம் இருப்பதாகக் கூறி அங்கிருந்து சென்றுவிட்டார்.
மாலை 6 மணிக்கு விருந்தில் கலந்து கொண்டவர்களுக்கு தொலைபேசி அழைப்பு வருகிறது… அந்த பெண்ணின் கணவர் பேசுகிறார்… என் மனைவிக்கு பக்கவாதம் வந்து மருத்துவமனைக்குக் சென்று கொண்டிருக்கிறேன் என்கிறார் பதட்டத்துடன்.
ஆம் இது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் நிஜமானக் கதை. அந்த பெண் ஒரு வேளை விருந்து நிகழ்ச்சியின் போதே மருத்துவரை அணுகியிருந்தால் பக்கவாதத்தை நிச்சயம் தடுத்திருக்கலாம் உரிய சிகிச்சையின் மூலம்.
உடலில் ஏதேனும் ஒரு பகுதியோ அல்லது கை, கால்களோ செயலிழந்து போவதை பக்கவாதம் என்கிறோம். பக்கவாத நோயால் உயிரிழப்புகள் ஏற்படுவதில்லை என்ற போதிலும் படுத்த படுக்கையாகின்றனர் என்பதுதான் சோகம்.
மனிதனின் மூளையில் ஏற்படும் பாதிப்புகள்தான் பக்கவாதத்திற்குமூலக் காரணமாக அமைகிறது என்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் கூறுகின்றனர்.
மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டு, ரத்த ஓட்டத்தில் தடங்கல் ஏற்படும் போது மூளைச் செல்களுக்கு ஆக்சிஜன் கிடைப்பது தடைபடுகிறது. அப்போது அந்த மூளைப் பாகம் இயக்கும் உடல் பகுதி செயலிழந்து போகிறது. இதனை ஐசெமிக் ஸ்ட்ரோக் என்கிறார்கள்.
மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டு ரத்த போக்கு ஏற்படும்போது உண்டாகும் பக்கவாதத்தை ஹெமராஜிக் ஸ்ட்ரோக் என்கிறார்கள். இது உயிரையும் பறித்துவிடக்கூடியது.
தற்காலிகமாக உண்டாகும் பக்கவாதத்தை 24 மணி நேரத்தில் சிகிச்சை அளித்து குணமாக்காவிடில் அது ஐசெமிக் ஸ்ட்ரோக் ஆகிவிடும்.
பக்கவாதத்திற்கு பல அறிகுறிகள் உள்ளன. பக்கவாதம் வருவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்னர் இதற்கான அறிகுறிகள் தெரிந்து விடும். அப்போதே அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு வந்தால் அவர்களை பெரிய பாதிப்பில் இருந்து காப்பாற்றி விடலாம் என்றும் நம்பிக்கை அளிக்கின்றனர்.
அது என்ன அறிகுறிகள்… நமது உடலில் ஏதேனும் ஒரு பகுதியில் ஏற்படும் நடுக்கம், மரத்துவிடும்தன்மை போன்றவைதான் அவை என்கின்றனர்.
அதாவது ஒருவருக்கு திடீரென கைகள் மரத்துவிடுவது போன்றோ, கால்களில் நடுக்கம் மற்றும் நடக்க முடியாதத் தன்மை, வாய் குளறுதல், பக்கத்தில் நிற்பவர்களை சரியாக அடையாளம் காண முடியாதத் தன்மை, ஞாபக சக்தி குறைதல், கண் பார்வை மங்குதல் போன்ற பல அறிகுறிகள் 3 மணி நேரத்திற்கு முன்பே தெரிந்து விடும்.
அந்த சமயத்தில் அவர்களை நாமே பரிசோதிக்கலாம். அதாவது அவர்களிடம் சத்தமாக சிரிக்க சொல்லுங்கள், 1 நிமிடம் ஏதாவது பேசச் சொல்லுங்கள், இரண்டு கைகளையும் மேலே தூக்கச் சொல்லுங்கள்.
இதில் ஏதாவது ஒன்றில் அவர்களுக்கு பிரச்சினை இருந்தாலும் அவர்களை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுங்கள்.
தற்போது மற்றொரு அறிகுறியும் இருக்கலாம். அதாவது அவரது நாக்கை நீட்டச் சொன்னால் அது ஏதாவது ஒரு பக்கமாக மட்டுமே நீளும். நேராக நீட்ட முடியாமல் போவதும் உண்டு. இதுவும் பக்கவாதத்திற்கான அறிகுறி தான். எனவே பக்கவாதம் பற்றிய சந்தேகம் எழுந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்வது சிறந்தது.
பக்கவாதத்தை குணமாக்க மாத்திரைகளும், அறுவை சிகிச்சை முறைகளும் உள்ளன. செயலிழந்த பகுதிகளுக்குக் கொடுக்கப்படும் தொடர் பயிற்சிகளும் பக்கவாதத்தை குணப்படுத்த உதவும்.
சின்ன சந்தேகம் ஏற்பட்டாலும் தாமதிக்காமல் மருத்துவமனைக்கு வந்தால் ஒருவரது வாழ்க்கையையேக் காப்பாற்றிவிடலாம். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் வாழ்க்கையை மீட்டுத் தருவதில் அதிக சிக்கலை ஏற்படுத்தும்.