-
கர்நாடக இசை மீதான காதல் உலகம் முழுவதும் படர்ந்து பெருகிக்கொண்டிருக்கும் சமயம் இது. ஆயிரக்கணக்கான புது ரசிகர்கள் இந்த இசை உலகத்துக்குள் அனுதினமும் பிரவேசித்துக்கொண்டிருக்கிறார்கள். கற்றும், கேட்டும் இன்புறுகிறார்கள். அதே சமயம், கர்நாடக இசையின் அடிப்படைகள் தெரியாததால், அதன் இன்பத்தை முழுமையாக உணரமுடியவில்லை. அந்தக் குறையைப் போக்குகிறது இந்தப் புத்தகம். கர்நாடக இசையின் அடிப்படைகளில் இருந்து தொடங்கும் இந்தப் புத்தகம் படிப்படியாக இசை சமுத்திரத்தின் முக்கிய அம்சங்களை எளிமையாகவும் இனிமையாகவும் அறிமுகம் செய்துவைக்கிறது. பரவலான புரிதலுக்காக, மேற்கத்திய கீபோர்டின் அடிப்படைகள் வாயிலாக கர்நாடக இசை அறிமுகம் செய்யப்படுகிறது. ராகத்தையும் தாளத்தையும் புரியவைக்க எளிய உதாரணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த அடிப்படைகளை முழுமையாக உள்வாங்கிக்கொண்டு ரசிக்கும்போது, உங்கள் ரசனை இன்பம் பன்மடங்கு பெருகிப்போவதை உணர்வீர்கள். நூலாசிரியர் Dr. மகாதேவன் ரமேஷ், ஐ.ஐ.டி. கான்பூரில் படித்தவர். ஓஹாயோ ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்டி பட்டம் பெற்றவர். தற்சமயம் சென்னையில் பொறியியல் மற்றும் நிர்வாகவியல் ஆலோசகராகவும், நிர்வாகவியல் பேராசிரியராகவும்
-
This book Karnataka Sangeetham is written by Mahadevan Ramesh and published by Kizhakku Pathippagam.
இந்த நூல் கர்நாடக சங்கீதம் ஓர் எளிய அறிமுகம், மகாதேவன் ரமேஷ் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Karnataka Sangeetham, கர்நாடக சங்கீதம் ஓர் எளிய அறிமுகம், மகாதேவன் ரமேஷ், Mahadevan Ramesh, Iyal-Isai-Nadakam, இயல்-இசை-நாடகம் , Mahadevan Ramesh Iyal-Isai-Nadakam,மகாதேவன் ரமேஷ் இயல்-இசை-நாடகம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Mahadevan Ramesh books, buy Kizhakku Pathippagam books online, buy Karnataka Sangeetham tamil book.
|
sir,
i am in trichy, in trichy which book shop this book is available.
Thanks
Karthik
சென்ற மாதம், மகாதேவன் ரமேஷ் எழுதிய A Gentle Introduction to Carnatic Music என்ற புத்தகம் பற்றி என் வலைப்பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அப்போது இந்தப் புத்தகத்தை தமிழில் கொண்டுவர விருப்பம் என்று தெரிவித்திருந்தேன். ஆனால் அது இவ்வளவு விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.
அந்தப் பதிவைப் பார்த்த உடனேயே பிரிட்டனில் வசிக்கும் கிரிதரன் ராஜகோபாலன் எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். உடனேயே அவருக்கு மகாதேவன் ரமேஷின் புத்தகத்தை பி.டி.எஃப் கோப்பாக்கி அனுப்பிவைத்தேன். கிரிதரன் ஒவ்வொரு நாளும் ஒரு சாப்டராக மொழிமாற்றி எனக்கு அனுப்பிவைப்பார். நானும் அன்றன்றைக்கே அதனை எடிட் செய்துவிடுவேன்.
இப்படி இரண்டு வாரங்களுக்குள்ளாக அந்தப் புத்தகத்தை எடிட் செய்து முடித்து, தமிழ் வெர்ஷனை மகாதேவன் ரமேஷுக்கு பி.டி.எஃப் கோப்பாக அனுப்பினேன். ஃபோன் மூலமாகவே மாற்றங்களைச் செய்தோம்.
ஆங்கில வெர்ஷனில் கர்நாடக இசையின் சில நுட்பங்களை விளக்க, ‘பா பா பிளாக் ஷீப்’ பாடலையும், ‘ரூப்பு தேரா மஸ்தானா’ பாடலையும் பயன்படுத்தியிருப்பார். தமிழ் வெர்ஷனில் ரூப்பு தேராவுக்கு பதிலாக தமிழ்ப் பாடல் ஒன்று வேண்டும் என்று கேட்டிருந்தேன். அதற்காக ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே’ என்ற இளையராஜா இசையில் அமைந்த திரைப்பாடலைப் பயன்படுத்தினார். அதற்காக பல இடங்களில் மாற்றங்கள் செய்யவேண்டியதாயிற்று. அனைத்தையும் தொலைபேசி மூலமாகவே செய்தோம்.
இந்தப் புத்தகம் இப்போது அச்சாகிக்கொண்டிருக்கிறது. நாளை முதல் சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்.
கிழக்கின் தொழிலில் இணையம் எப்படிப் பயன்படுகிறது என்று ரவிசங்கர் கேட்டிருந்தார். இது ஓர் உதாரணம். இருவரும் சென்னையிலேயே இருந்தாலும், மகாதேவன் ரமேஷை நான் நேரில் சந்தித்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகின்றன. கிரிதரனை எனக்கு யார் என்று தெரியாது. வலைப்பதிவிலும் ட்விட்டரிலும் ‘பார்த்தது’தான். (ஆனால் அவர் என் மனைவி வழியில் எனக்கு உறவினர் என்று இப்போது கண்டுபிடித்துள்ளார்! ஆனாலும் அவர் முகம் எனக்கு ஞாபகத்தில் இல்லை.) கிரிதரனும் மகாதேவன் ரமேஷும் ஒருவரை ஒருவர் பார்த்ததில்லை. ஆனால் வெகு குறைவான காலகட்டத்தில் இந்தப் புத்தகத்தின் தமிழாக்கத்தைக் கொண்டுவந்திருக்கிறோம்.
நன்றி : http://thoughtsintamil.blogspot.com/2009/12/blog-post_7352.html