iyarkai__82438_zoomஅடுக்களையிலேயே இருக்கிறது அழகுக்கலை’ என்பதுதான் நம் முன்னோர்களின் சித்தாந்தம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களான பழங்கள், காய்கறி மற்றும் பூ வகைகளைக் கொண்டே அழகைப் பாதுகாக்கும் அற்புதக் கலையை அறிந்துகொள்ள யாருக்குதான் ஆசை இருக்காது? இயற்கையாகக் கிடைக்கும் உணவுப் பொருட்களைக் கொண்டே அகத்துக்கும் புறத்துக்கும் வேண்டிய ஆரோக்கியம் மற்றும் தற்காப்பு முறைகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். மா, பலா, வாழை, பேரீச்சை, ஆரஞ்சு, தர்பூசணி… போன்ற பழ வகைகள், மல்லிகை, ரோஜா, சம்பங்கி… போன்ற பூ வகைகள், துளசி, மரிக்கொழுந்து… போன்ற மூலிகை வகைகளின் சிறப்புகளையும், அதில் ஒளிந்துள்ள சத்துகளையும், அவை நமது உடலின் அழகை எப்படிப் பாதுகாக்கிறது என்கிற விவரங்களை விளக்கும் விதமாக ‘இயற்கை தரும் இளமை வரம்’ என்கிற தலைப்பில் ‘அவள் விகடன்’ இதழ்களில் வெளியான கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல்.