சென்னையில் ஞாயிற்றுக்கிழமை பவித்ரம் தொண்டு நிறுவனத்தின் சார்பில் சிறந்த அறிவியல் மற்றும் ஆன்மீக தமிழ் புத்தகங்களுக்கு ராமமூர்த்தி நினைவு விருது வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் (இடமிருந்து 3-வது). உடன் சிறப்பு விருந்தினர்கள் (இடமிருந்து) எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி, இந்தியா சிமெண்ட் நிறுவன துணைத் தலைவர் (நிதி) ஹரிஹர சுப்பிரமணியன், பவித்ரம் நிர்வாகி எஸ்.எஸ்.ஆர்.ராஜ்குமார், கௌரவ ஆலோசகர் டாக்டர் ஜெ.ஜாய்ஸ் திலகம், நாடக ஆசிரியர் சி.வி.சந்திரமோகன். விருது பெற்றவர்கள் கீழ்வரிசை (இடமிருந்து) ஆர்.வி.பதி (மனதை மயக்கும் கண்ணனின் கதைகள்), ஜெ.வீரநாதன் (எளிய தமிழில் இணையத்தை அறிவோம்), பி.முத்துகுமாரசுவாமி (நகரத்தார் கோயில்களில் ஒன்பது), வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் (எல்லோருக்கும் எப்போதும் உணவு) சார்பில் பேராசிரியர் ராமன், டாக்டர் முத்துசெல்லக்குமார்.
சிறந்த நூல் ஆசிரியர்களுக்கு பாராட்டு
No Comments Wednesday 07 Mar 2012 | Awards, செய்திகள் |

ஏனைய செய்திகள்