-
கடமையைச் செய்; பலனை எதிர்பார்க்காதே _ என்று, பகவத் கீதையில் அர்ஜுனனுக்கு கண்ணன் உபதேசித்தார். பெரும்பாலான ஆன்மிகப் பேச்சாளர்களும் இதையே விரிவாக எடுத்துரைத்து, ‘‘பலனை எதிர்பார்க்காத தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்’’ என்று சொல்வதுண்டு. ஆனால், அன்றாட வாழ்க்கையில் உழலும் சாமானியர்கள், எந்தவித பலனும் கிடைக்காமல் ஒரு செயலைச் செய்ய முடியுமா என்ன? விரும்புவது கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் பழங்காலம் முதலே, பூஜைகளும் பரிகாரங்களும் செய்து, வரம் என்னும் பலனைப் பெற்று வருகிறார்கள். சங்கல்பம் என்ற தீர்மானத்தை ஒவ்வொரு பூஜையின் தொடக்கத்திலும் சொல்லி, “... இந்த பலனை உத்தேசித்து, இந்த பூஜையைச் செய்கிறேன்...” என்று பிரார்த்திப்பது வழக்கம். அந்த வகையில், மழலைச் செல்வம் வேண்டுமா? சந்தான கணேசர் வழிபாடு உள்ளது; திருமணம் கைகூட வேண்டுமா? சுயம்வரா பார்வதி வேள்வி உள்ளது; கடன் தொல்லை நீங்க வேண்டுமா? ருண மோசன பூஜை உள்ளது; உடல்நலம் நன்றாகி, ஆயுள் அதிகரிக்க வேண்டுமா? இருக்கவே இருக்கிறது _ இப்படி ஒவ்வொரு பலனையும் உத்தேசித்து நாம் வேண்டிச் செய்யும் 21 பூஜைகளையும், செய்யும் முறைகளையும், எளிய மந்திரங்களையும், அவற்றின் தமிழ் வடிவங்களையும் இந்த நூலில் கொடுத்துள்ளார் நூலாசிரியர் கே.குமார சிவாச்சாரியார். அவள் விகடனில் தொடராக வெளியானபோது, பலராலும் பாராட்டப் பெற்ற இந்த பூஜை முறைகள் கைவசம் இருப்பின் உடனுக்குடன் பயன்படும்.
-
This book Venduvathu Ellaam Tharum Vishesha Poojaigal is written by K.Kumara sivachariyar and published by Vikatan Prasuram.
இந்த நூல் வேண்டுவது எல்லாம் தரும் விசேஷ பூஜைகள், கே. குமார சிவாச்சாரியார் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Venduvathu Ellaam Tharum Vishesha Poojaigal, வேண்டுவது எல்லாம் தரும் விசேஷ பூஜைகள், கே. குமார சிவாச்சாரியார், K.Kumara sivachariyar, Aanmeegam, ஆன்மீகம் , K.Kumara sivachariyar Aanmeegam,கே. குமார சிவாச்சாரியார் ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy K.Kumara sivachariyar books, buy Vikatan Prasuram books online, buy Venduvathu Ellaam Tharum Vishesha Poojaigal tamil book.
|