| |||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|||||
| |||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||
| ||||
| ||||
தொடர்புடைய புத்தகங்கள் : | ||||
ஆசிரியரின் (ம. வெங்கடேசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் : | ||||
| ||||
மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் : | ||||
பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் : | ||||
You must be logged in to post a comment.
Jeeva Puthakalayam |
Information/Help |
Customer Care |
Follow us |
|
About Us Contact Us Terms and Conditions Tamil books blog Link to Us |
Frequently Asked Questions(FAQ) How to buy tamil books online? Tamil books online shopping - Top sellers Free Tamil E-Books for download Tamil books tags Tamil book news Tamil book Reviews Tamil book Release |
Help Desk: Customercare email : Write to us ccare@noolulagam.com Phone : Call us +91-7667-172-172 Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders Give Feedback |
![]() ![]()
|
தான் மதம் மாறப் போகிறேன் என்பதை டாக்டர் அம்பேத்கர் 1935 அக்டோபர் மாதம் அறிவித்தார். ஆனால் எந்த மதத்திற்கு என்று சொல்லவில்லை. பின்னர் 1955 அக்டோபர் 14 ம்தேதி புத்தமதத்தில் சேர்ந்தார். ஏன் அவர் இதற்கு 20 ஆண்டுகள் எடுத்துக்கொண்டார்?
இந்த வரலாற்றை விரிவாக ஆராய்கிறார் ஆசிரியர் வெங்கடேசன்.
டாக்டர் அம்பேத்கர் மதம் மாறப்போகிறார் என்பது தெரிந்ததும் இஸ்லாமியர், கிறிஸ்துவர்கள், சீக்கியர், கம்யூனிஸ்டுகள் ஆகிய அனைவரும் அவரைக் கவர முயற்சித்தனர். இவர்களில் இஸ்லாமியர் பணபலமும் ஆள்பலமும் உள்ளவர்கள். கிறிஸ்தவர்கள் பணபலம் மிக்கவர்கள். இவர்கள் பணம் கொண்டு கொட்டத் தயாராக இருந்தனர். சீக்கியர்கள் சுமார் 40 லட்சம் மக்களைக் கொண்ட சிறிய சமுதாயம். பண வசதியும் அவ்வளவு இல்லை. ஆனால் கட்டுக்கோப்பான, ஏற்றத்தாழ்வில்லாத சமூகமாக இருந்தனர். இந்தியாவிடம் விஸ்வாசமும், ஹிந்துக்களுடன் நெருங்கிய தொடர்பும் உள்ளவர்களாக இருந்தனர். ஆனால் டாக்டர் அம்பேத்கர் நிதானமாக எல்லா மதங்களையும் பற்றி ஆழமாகப் படித்தறிந்து, தீர ஆலோசனை செய்து அவற்றின் சுய உருவத்தை- அவற்றின் கொள்கைகளையும், நடைமுறைகளையும்- நன்கு புரிந்துகொண்டார். சுருக்கமாகச் சொன்னால் :
– இஸ்லாம் இந்திய மண்ணில் தோன்றிய மதமல்ல. அது இந்திய கலாசாரத்திற்கு இயைந்தது அல்ல. அது இந்தியாவின் நலத்திற்குக் கேடு விளைக்கும். இஸ்லாமியர் இந்தியாவை என்றுமே தாயகமாகக் கருத மாட்டார்கள். ஹிந்துக்களுடன் இணங்கி வாழமாட்டார்கள். அவர்களுக்குள்ளும் ஜாதி வேறுபாடுகள் நிலவுகின்றன. அவர்கள் தலித்துக்களை ஆதரிப்பதில்லை, மதிப்பதில்லை, சமமாக நடத்துவதில்லை.
-கிறிஸ்தவர்களுக்கும் இந்தியா உண்மையான தாயகமல்ல. அவர்கள் மதமும் வெளியிலிருந்து வந்தது. அவர்களும் இந்தியக் கலாசாரத்தை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களுக் கிடையிலும் ஜாதிப் பிரிவுகள் தீவிரமாக இருக்கின்றன. அவர்களின் சொற்களை நம்பி அங்கு சென்ற தலித்துக்களை அவர்கள் கேவலமாக நடத்தினர்.
-சீக்கிய மதம் நல்ல மதம். ஆனால் அவர்கள் மிகச் சிறிய சமூகமாதலால் அவர்களால் உரிய பாதுகாப்பு அளிக்க இயலாது.
-கம்யூனிஸ்டுகள் வன்முறையாளர்கள், தொழிலாளர்களை வைத்துச் சுரண்டுபவர்கள். எதேச்சாதிகாரத்தில் நாட்டமுள்ளவர்கள்.
இவற்றையெல்லாம் கண்ட டாக்டர் அம்பேத்கர், புத்தமதத்தை நன்கு ஆராய்ந்தார்.அதன் அடிப்படை பிரஜ்ஞை, கருணை, சமத்துவம் ஆகிய சாத்வீக அடிப்படையில் இருப்பதைக்கண்டார். மேலும் பௌத்தம்-
– பாரத மண்ணில் தோன்றியது
-கருணையைப் போதிக்கிறது
-சமத்துவத்தைப் போதிக்கிறது
-சுதந்திரத்தைப் போதிக்கிறது
-பாரத கலாசாரத்திற்கு எதிரானது அல்ல.
-பாரத தேசீயத்திற்கு எதிரானது அல்ல.
எனவே பௌத்த தர்மத்தில் சேர்ந்தார்.
ஆசிரியர் வெங்கடேசன் அரிய ஆராய்ச்சிகள் செய்து டாக்டர் அம்பேத்கரின் எழுத்துக்களிலிருந்தும் பேச்சுக்களிலிருந்தும் ஒவ்வொரு இடத்திலும் ஆதாரம் காட்டுகிறார். இந்த நூலில் பல அரிய விஷயங்கள் பொதிந்திருக்கின்றன.
-டாக்டர் அம்பேத்கருக்கு பாரத பூமியின் மீதும், அதன் பண்பாட்டிலும் இருந்த தீவிரப் பற்று. உண்மையில், நமது அரசியல் சட்டத்தில் இந்தியாவை “பாரதம்” என்ற பெயரிட்டு அழைத்தது டாகடர் அம்பேத்கர்தான்!
-தலித்துகளுக்கு நன்மை என்ற பெயரில் பாரதத்திற்கு ஊறு நேர்ந்துவிடக்கூடாதே என்ற அக்கறை
-வரலாற்று அடிப்படையில் இஸ்லாமும் கிறிஸ்துவமும் நமக்கு கேடு செய்யும் என்ற தொலை நோக்குப் பார்வை.
உண்மையில், பாகிஸ்தான் பிரிந்தபோது, இந்தியாவிலுள்ள அனைத்து இஸ்லாமியரும் பாகிஸ்தானுக்கு அனுப்பப்படவேண்டும், அங்கிருந்த ஹிந்துக்கள் அனைவரும் இந்தியாவிற்கு வந்துவிடவேண்டும் என்பதை உலக சரித்திரத்தின் அடிப்படையில் சொன்னார். இஸ்லாமியரில்லாத இந்தியாவே உண்மை சுதந்திரத்துடன் இருக்க இயலும் என்று சொன்னார். அன்றைய காங்கிரஸ் கேட்கவில்லை, டாக்டர் அம்பேத்கரின் தீர்க்க தரிசனத்தை இன்று நாம் உணர்கிறோம். இவர் புத்தமதத்தில் சேர்ந்து பாரதத்திற்கு எவ்வளவு பெரிய நன்மை செய்திருக்கிறார் என்பதை அறியும்போது, இவர்மீதுள்ள மரியாதை பன்மடங்கு உயர்கிறது.
இது அரிய விஷயங்கள்/தகவல்கள் நிறைந்த அருமையான புத்தகம். இன்றைய தமிழகத்தில் ஒவ்வொருவரும் கவனமாகப் படிக்கவேண்டிய புத்தகம்.
இங்கு முதல் வரியில் , மதம் மாறிய ஆண்டு 1956 , அக்டோபர் 14 ம்தேதி என்று இருக்கவேண்டும். தவறுக்கு வருந்துகிறேன்.