-
திப்புசுல்தான் மிகப்பெரிய இராணுவப்
படையினைக் கொண்டிருந்தார். இதில் குதிரைப்படை, ஒட்டகப்படை மட்டுமல்லாமல்,
போரில் பீரங்கிகளையும் பயன்படுத்தியுள்ளார். இதைத்தவிர, கடற்பயிற்சி
பள்ளிகள் உருவாக்கப்பட்டு, கடற்படையில் பீரங்கிகள் மற்றும் ஆங்கிலேயருக்கு
நிகராக நவீன ஏவுகணைகளை பயன்படுத்தினார் எனக் கூறப்படுகிறது. சக்தி வாய்ந்த
ராக்கெட் மற்றும் ஏவுகணை தொழில்நுட்பத்தை முதன்முதலில் பயன்படுத்தியவர்
திப்பு சுல்தான் எனப் பல வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
திப்புசுல்தான் ஆட்சியில், பெண்களுக்கு
மரியாதை கொடுத்தது மட்டுமல்லாமல், தேவதாசி முறையை முழுமையாக எதிர்த்தார்.
கோயில்களில் நரபலி கொடுப்பதைத் தவிர்த்து, முழுமையான மதுவிலக்கை
அமல்படுத்தினார். திப்பு, இஸ்லாமிய மதத்தில் முழு ஈடுபாடு கொண்டவராக
விளங்கினாலும், அவருடைய ஆட்சியில் இந்துக்கள் மற்றும் பிற மதத்தவரும்
சுதந்திரமாக செயல்பட்டனர். மக்களிடையே அமைதியை மட்டும் விரும்பிய அவர், மத
ஒற்றுமையை இறுதிவரை கடைப்பிடித்தார். மக்களுக்கு கடமை, உரிமை, பொறுப்பு
உள்ளதாக சட்டம் இருக்கவேண்டும் எனக் கருதி சட்டபடியான விசாரணையும்,
தண்டனையும் அமையவேண்டும் எனக் கருதினார். விவசாயத்தில் பல சீர்திருத்தங்கள்
கொண்டுவரப்பட்டு, தொழில் வளர்ச்சியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தினார்.
-
This book Tipusultan Oru Valarpiraiyin Varalaaru is written by S. Arshiya and published by Ethir Veliyedu.
இந்த நூல் திப்புசுல்தான் ஒரு வளர்பிறையின் வரலாறு, எஸ். அர்ஷியா அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Tipusultan Oru Valarpiraiyin Varalaaru, திப்புசுல்தான் ஒரு வளர்பிறையின் வரலாறு, எஸ். அர்ஷியா, S. Arshiya, Varalaru, வரலாறு , S. Arshiya Varalaru,எஸ். அர்ஷியா வரலாறு,எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy S. Arshiya books, buy Ethir Veliyedu books online, buy Tipusultan Oru Valarpiraiyin Varalaaru tamil book.
|