-
"தப்பி ஓடி ஒளிய வேண்டுமானால் ஆள் கூட்ட நெரிசலில் அமிழ்வதைவிட மேலானது எதுவும் இல்லை. சந்தைத் திடலின் நடுவே, திறந்த வெளியில் கண்ணுக்கு மறைவதுபோல எந்தக் காட்டிலும் மறையமுடியாது" - இவ்வாறு கூறுகிறான் குதூகல சுபாவமும் சமயோசித சாமர்த்தியமும் உள்ள குறும்பன்
- சின்னஞ்சிறு போக்கிரி. எத்தனையோ தடவை தன் கிருத்திமங்களுக்குப் பிறகு அவன் தலைதெறிக்க ஓடித் தப்ப நேர்ந்தது. எனவே அவன் இந்த விஷயத்தில் அனுபவசாலிதான்! இந்தக் குறும்புக்காரப் பையனின் கதையையே இந்நூல் ஆசிரியர் கூறுகிறார். அவர் தமது பிள்ளைப் பருவத்தை நினைவுகூர்கிறார்ர். எதனையோ ஆண்டுகளுக்கு முந்திய காலம் அது. அப்போது உஸ்பெகிஸ்தானில் வாழ்க்கை இப்போதைய வாழ்க்கைக்கு முற்றிலும் வேறாய் இருந்தது. சாதாரண மக்கள் பாடு மிக்க் கடினமாக இருந்த காலம் அது.
"குறும்பன்" என்னும் இந்தச் சுயசரிதை நவீனம் உஸ்பெகிஸ்தானின் மக்கள் கவிஞர் கஃபூர் குல்யாமின் (1903-1966) உரைநடைப் படைப்புக்கள் எல்லாவற்றிலும் மக்களால் பெரிதும் விரும்பப்படும் நூல் ஆகும்.
கஃபூர் குல்யாம் அரசாங்கப் பரிசு பெற்றவர், எத்தனையோ கவிதைத் தொகுப்புகள் இயற்றியவர்.
-
This book Kurumban is written by Pathippaga Veliyeedu and published by New century book house.
இந்த நூல் குறும்பன், பதிப்பக வெளியீடு அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kurumban, குறும்பன், பதிப்பக வெளியீடு, Pathippaga Veliyeedu, Kathaigal - Tamil story, கதைகள் , Pathippaga Veliyeedu Kathaigal - Tamil story,பதிப்பக வெளியீடு கதைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Pathippaga Veliyeedu books, buy New century book house books online, buy Kurumban tamil book.
|
வாழ்வில் மறுக்க… மறக்க… முடியாத புத்தகம் குறும்பன். அதன் வெகு நீளமான ஆலாபனைகள், நம்மை தாஷ்கண்டிலும், உஸ்பெக்கிலும் அலையவைக்கின்றன. கூடவே கொஞ்சம் தேனீரும் கொஞ்சம் வறட்டு ரொட்டியும் இருந்தால் போதும், நீங்கள் இந்தக் கதையின் பின்னால் அலைவீர்கள். அந்தக் கிருத்திமங்களுக்குக் குறும்பனைப் போல…..!