-
குணங்குடி மஸ்தான் சாகிபு (1792 - 1838: சென்னை) ஒரு இசுலாமிய
தமிழ் அறிஞர். இவர் பல இசை உணர்வு மிக்க பாடல்களை எழுதியுள்ளார். இவர்
தமிழ் சித்த மரபினரில் ஒருவராகவும் கருதப்படுகிறார்.[1]
வரலாறு
குணங்குடி மஸ்தான் சாகிபு இராமநாதபுரம் தொண்டிக்கு வடமேற்கில் பத்து மைல் தொலைவிலுள்ள குணங்குடி என்னும் சிற்றூரில் 1792 ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் 'சுல்தான் அப்துல் காதிர்' என்பதாகும். இளமையிலேயே குர்ஆன் மற்றும் இசுலாமிய சமய சாத்திரங்களைக் கற்றுணர்ந்து 'ஆலிம்' (சமயக் கல்வி அறிஞர்) என்னும் பட்டம் பெற்றார்.
பற்றறுத்த உள்ளத்துடனும், தந்தையின் ஆசியுடனும் தம்முடைய பதினேழாவது வயதில் ஞானபூமியாகத் திகழ்ந்த கீழக்கரை
சென்று அங்கு 'தைக்காசாஹிபு' என்று அழைக்கப்பட்ட ஷைகு அப்துல்
காதிரிலெப்பை ஆலிம் ஞானியிடம் மாணாக்கராக இருந்து சமய ஞானத்தையும், தவ
வழிமுறைகளையும் கற்றுத் தெளிந்தார். 1813
ஆம் ஆண்டில் அவர் திரிசிரபுரம் சென்று அங்கே மௌலவி ஷாம் சாஹிப் என்பவரிடம்
தீட்சை பெற்று ஞானயோக நெறியில் ஆழ்ந்தார். பின்னர் சிக்கந்தர் மலையென
அழைக்கப்படும் திருப்பரங்குன்றம் சென்று அங்கே நாற்பது நாட்கள் 'கல்வத்' எனப்படும் யோக நிட்டையில் ஆழ்ந்தார். பின்னர் அறந்தாங்கிக்கு
அருகிலுள்ள கலகம் என்ற ஊரில் ஆறு மாதங்களும், தொண்டியில் அவருடைய
தாய்மாமனாரின் ஊரான வாழைத்தோப்பில் நான்கு மாதங்களும் தங்கி நிட்டை
புரிந்தார். இவ்வாறே சதுரகிரி, புறாமலை, நாகமலை, ஆனைமலை போன்ற மலைகளிலும்,
காடுகளிலும், நதிக்கரைகளிலும் தங்கித் தவம் புரிந்தார்.
இறைகாதலால் முற்றும் கவரப்பட்டவராகவும், தெய்வீகக் காதல் போதையில்
வெறியேறியவராகவும் அவர் இருந்ததால் உலகநடை நீங்கி பித்தநடை கொண்டார்.
குப்பைமேடுகள் கூட அவர் குடியிருக்கும் இடங்களாகின. அவருடைய பித்தநடையையும்
அற்புத சித்துகளையும் கண்ட மக்கள் அவரை 'மஸ்தான்' என அழைக்கலாயினர்.
அப்பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது. (மஸ்த் என்ற பாரசீகச் சொல்லுக்கு
போதைவெறி என்று பொருள். இறைகாதல் போதையில் வெறி பிடித்த ஞானியரை 'மஸ்தான்'
என அழைப்பது மரபு)
-
This book Niramayakanni Paraparakanni Moolamum Uraiyum Kunangudi Masthan Saagib Paadalgal is written by Munnaivar Kamala Murugan and published by Saratha Pathippagam.
இந்த நூல் நிராமயக்கண்ணி பராபரக்கண்ணி மூலமும் உரையும் குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்கள், முனைவர் கமலா முருகன் அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Niramayakanni Paraparakanni Moolamum Uraiyum Kunangudi Masthan Saagib Paadalgal, நிராமயக்கண்ணி பராபரக்கண்ணி மூலமும் உரையும் குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்கள், முனைவர் கமலா முருகன், Munnaivar Kamala Murugan, Ilakiyam, இலக்கியம் , Munnaivar Kamala Murugan Ilakiyam,முனைவர் கமலா முருகன் இலக்கியம்,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy Munnaivar Kamala Murugan books, buy Saratha Pathippagam books online, buy Niramayakanni Paraparakanni Moolamum Uraiyum Kunangudi Masthan Saagib Paadalgal tamil book.
|