-
இளம் வயதிலேயே, தனக்குத் தெரிந்த
சார்ந்த கருத்துக்கள் மற்றும் தமிழ்மொழி போன்ற அனைத்தையுமே விஷ்ணுசித்தர் கோதைக்குச்
சொல்லிக் கொடுத்தார். இதனால் கோதை இளம் வயதிலேயே மீது மிகுந்த
பக்தியுணர்வு கொண்டவராயும் தமிழில் நல்ல திறமை கொண்டவராகவும் இருந்தார். சிறு வயதிலேயே கண்ணன் மீதிருந்த அளவற்ற அன்பு காரணமாக அவனையே மணம்
செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணத்தையும் வளர்த்துக்கொண்டார். தன்னைக் கண்ணனின் மணப்பெண்ணாக நினைத்துப் பாவனை செய்துவந்தார். கோயிலில் இறைவனுக்கு அணிவிப்பதற்காக விஷ்ணுசித்தர்
தொடுத்து வைத்திருக்கும் மாலைகளை ஒவ்வொரு நாளும் அவருக்குத் தெரியாமல் தான்
அணிந்து கண்ணனுக்கு ஏற்றவளாக தானிருக்கிறோமா என்று கண்ணாடியில் பார்த்து மகிழ்ந்து
பின்னர் திரும்பவும் கொண்டுபோய் வைத்துவந்தார். இதனால்
கோதை சூடிய மாலைகளே இறைவனுக்கும் சூடப்பட்டன. ஒருநாள் இதனை
அறிந்து கொண்ட விஷ்ணுசித்தர் கோதையைக் கடிந்துகொண்டார். அவள் சூடிய மாலையை ஒதுக்கிவிட்டுப் புதிய மாலை தொடுத்து இறைவனுக்கு
அணிவித்தார். அன்றிரவு இறைவன் அவரது கனவில் தோன்றி கோதை
அணிந்த மாலைகளே தனக்குப் உகப்பானவை எனவும் அவற்றையே தனக்குச் சூடவேண்டுமென்றும்
கேட்டுக்கொண்டார். இதனாலேயே "சூடிக்கொடுத்த
சுடர்க்கொடி" என்றும் "இறைவனையே
ஆண்டவள்" என்ற பொருளில் ஆண்டாள் என்றும்
போற்றப்படுகிறார்.
-
இந்த நூல் ஆண்டாள் அருளிச் செய்த நாச்சியார் திருமொழி மூலமும் விளக்க உரையும், அரிமா இளங்கண்ணன் அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஆண்டாள் அருளிச் செய்த நாச்சியார் திருமொழி மூலமும் விளக்க உரையும், அரிமா இளங்கண்ணன், Arima Ilankannan, Aanmeegam, ஆன்மீகம் , Arima Ilankannan Aanmeegam,அரிமா இளங்கண்ணன் ஆன்மீகம்,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy Arima Ilankannan books, buy Saratha Pathippagam books online, buy tamil book.
|