| |||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|||||
| |||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||
|
|
மற்ற பொது வகை புத்தகங்கள் : |
பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் : |
You must be logged in to post a comment.
Jeeva Puthakalayam |
Information/Help |
Customer Care |
Follow us |
|
About Us Contact Us Terms and Conditions Tamil books blog Link to Us |
Frequently Asked Questions(FAQ) How to buy tamil books online? Tamil books online shopping - Top sellers Free Tamil E-Books for download Tamil books tags Tamil book news Tamil book Reviews Tamil book Release |
Help Desk: Customercare email : Write to us ccare@noolulagam.com Phone : Call us +91-7667-172-172 Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders Give Feedback |
![]() ![]()
|
டாலர் நகரம்
வந்தாரை வாழவைத்த திருப்பூர் நகரம், இப்போது விரக்தியால் திருப்பி அனுப்பி வருகிறது. ‘திருப்பூருக்குப் போனா எப்படியும் பிழைக்கலாம்’ என்று நம்பி ஊரை விட்டு ஓடிவருவார்கள். ஆனால் இன்று, அந்த ஊரை விட்டு பலரும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட திருப்பூரின் கதை இது. இங்குள்ள ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் எழுத்தாளர் ஜோதி கணேசன், தன்னுடைய அனுபவங்களின் மூலமாக திருப்பூரின் வரலாற்றைச் சொல்கிறார்.
” ‘வேலையிருந்தா போட்டுக் கொடுங்கண்ணே..?’ எனக் கேட்டபடி சட்டென என் அறையின் உள்ளே நுழைந்தவனைக் கண்டு திடுக்கிட்டு நிமிர்ந்தேன். செய்துகொண்டிருந்த வேலை மீதான கவனம் சிதறியது. அனுமதி பெறாமல், கண்ணாடிக் கதவை எப்படித் திறக்க வேண்டும் என்றுகூடத் தெரியாமல், உடைப்பதுபோல் திறந்து, உள்ளே வந்து நின்ற அவனுக்கு வயது அதிகபட்சம் 14 இருக்கலாம். செம்பட்டைத் தலையுடனும் மேல் பட்டனை ஊக்கு வைத்து இழுத்து நிறுத்தியிருந்த அழுக்கான சட்டையுடனும் நின்றான்…” – என்று இவர் வர்ணிக்கும் காட்சி, திருப்பூரில் நித்தமும் நடப்பது. இத்தகைய சின்னஞ்சிறுவர்கள் எப்படியெல்லாம் உழைக்கின்றனர் என்பதை ஜோதி கணேசன் சொல்லும்போது ஆச்சர்யமாக இருக்கிறது.
”திருப்பூருக்கு நான் உள்ளே நுழைந்த காலத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த நிறுவனத்தில், நண்டும் சிண்டுமாய் உள்ளே ஒரு பெரிய கூட்டமே இருந்தது. இடுப்பு அளவுக்குக்கூட இல்லாதவர்கள் சிங்கமாய் நடு இரவு வரை பணிபுரிந்துவிட்டு, மறுநாள் காலை எட்டு மணிக்கு மீண்டும் வந்து வேலைபார்த்துக்கொண்டிருந்தனர்” என்கிறார். வறுமை, அவர்களது வாழ்க்கையின் ஒவ்வொரு மணி நேரத்தையும் உழைத்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் செய்தது.
பெண்கள் இரவுகளில் பட்ட பாலியல் கஷ்டங்களையும் கண்ணீருடன் சொல்கிறார்.இதனால்தான் பழைய தொழிலாளிகள் ஓடிப்போய்விட்டு, அந்த இடத்துக்கு புதிய தொழிலாளிகள் வந்துவிடுகிறார்கள். கடைசி வரை தொழிலாளியாகவே இருந்தவர்கள் கதை, மனதை ரணம் ஆக்குகிறது.
மின்வெட்டு, சாயப் பட்டறைகள் மூடல், ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் உள்ள தேக்கம், டாலர் வீழ்ச்சி… என ஏதோ ஒரு காரணத்தை வைத்து திருப்பூரின் வர்த்தகம் சமீபகாலமாக பெரும் சரிவை அடைந்தது. திருப்பூரை விட்டு இரண்டு லட்சம் மக்கள் வெளியேறி விட்டனர். வெளியேற முடியாதவர்கள் வெளிறிப்போய் நிற்கின்றனர். வெள்ளி, சனி ஆகிய இரண்டு நாட்களும் சம்பள நாள் என்பதால் முன்பெல்லாம் தீபாவளி மாதிரி பணப்புழக்கம் இருக்கும். இன்று எல்லா நாளும் ஞாயிற்றுக்கிழமையைப்போல வெறிச்சோடி கிடக்கிறது. புதிய பொருளாதாரக் கொள்கையின் பூமராங் என்ன ஆகும் என்பதற்கு உதாரணம் திருப்பூர். தொழில் நகரங்களின் கதைகளை நாம் எப்படி எழுத வேண்டும் என்பதற்கு உதாரணமாகவும் இந்தப் புத்தகம் இருக்கிறது!
– புத்தகன்