-
தேவாரப் பாடல்களை நினைத்தாலே திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆகியோரின் இறை தொண்டுதான் நமது நெஞ்சை ஆட்கொள்ளும். ஈசன் திருவடிகளில் பணிந்து, அவன் உணர்வில் கலந்து உருகிஉருகி அந்த மகான்கள் பாடிய தேவாரப் பாடல்கள், தமிழ் இசையை தெய்விக இசையாக உலகம் முழுவதும் பறைசாற்றின! ஈசன் குடிகொண்ட கோயில்கள் அருள் கொடை வழங்குவதைப் புரிந்துகொண்ட மகான்கள், அந்தச் சிறப்பை மேலும் அறிந்துகொள்வதற்காகவே தேடித்தேடிச் சென்று ஆலய தரிசனம் செய்தனர். அந்த ஆலயங்களில் தாம் பெற்ற தெய்விக உணர்வைப் பிறரும் பெறவேண்டும் என்பதற்காகவே இறைவனின் பெருமைகளைப் பாடியும் கொடுத்தனர்.
சக்தி விகடன் இதழில் தொடராக வந்துகொண்டிருக்கும் 'தேவாரத் திருவுலா!' இப்போது புத்தக வடிவில் முதல் பாகமாக வருகிறது.
தேவாரப் பாடல்கள் பாடப்பெற்ற திருத்தலங்களுக்கு பக்தி சிரத்தையோடு சென்று வணங்கி, ஈசன் நடத்திய திருவிளையாடல் கதைகளை அருள்மழையாகப் பொழிந்திருக்கிறார் டாக்டர் சுதா சேஷய்யன். ஒவ்வொரு திருத்தலங்களாகப் பாடிக்கொண்டே சென்ற மகான்கள் பற்றியும், சமய பேதங்களால் பிரிந்து கிடந்த மக்களை ஒன்றாக இணைக்கத் தங்களின் பாடல்களையே பயன்படுத்தியுள்ள விதத்தையும் ஒரு கதாகாலட்சேபத்தின் சுவையோடு வடித்துக் காட்டியுள்ளார். அக்கால தமிழகத்தின் சமுதாய மேன்மை பற்றி, அந்தக் கதைகளும் பாடல்களும் நம்மை ஆழமாகச் சிந்திக்கத் தூண்டுகின்றன.
இந்தப் புத்தகம், அடுத்தடுத்த பாகங்களை எதிர்பார்க்க வைத்து உங்களை ஈர்க்கும் என நம்புகிறேன்.
-
This book Devarath thiruvila(part 1) is written by Dr,Sudha Seshyan and published by Vikatan Prasuram.
இந்த நூல் தேவாரத் திருவுலா (பாகம் 1), டாக்டர். சுதா சேஷய்யன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Devarath thiruvila(part 1), தேவாரத் திருவுலா (பாகம் 1), டாக்டர். சுதா சேஷய்யன், Dr,Sudha Seshyan, Aanmeegam, ஆன்மீகம் , Dr,Sudha Seshyan Aanmeegam,டாக்டர். சுதா சேஷய்யன் ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Dr,Sudha Seshyan books, buy Vikatan Prasuram books online, buy Devarath thiruvila(part 1) tamil book.
|