-
"புதுமைப்பித்தனுக்கு முன்னாலும் பின்னாலும் தமிழில் சிறுகதை எழுதியவர்கள் உண்டு. எனினும், உலக இலக்கியத்தின் தரத்துக்கு இணையாக உயர்ந்து நிற்கும் சிறுகதைகளைப் படைத்தளித்தவர் புதுமைப்பித்தனே ஆவார். இக்கூற்று புகழுரை அன்று. எக்காலத்திலும் எவரும் பெருமிதத்தோடு நினைவுகூர வேண்டுமென்பதற்கு அடையாளமே இந்த நூல் என்பேன். இது வெறும் சிறுகதைத் தொகுப்பு அன்று; தமிழ் இலக்கியக் கரும்பின் நடுக்கணு. தமிழ் இலக்கிய வரலாற்றில் காலத்தால் கொள்ள முடியாத இலக்கியத் கருவூலம். இங்கே இருந்துதான் புதிய தமிழ் இலக்கியம் வீறுடன் பிறந்த மேனியோடு நாபிக்கொடியை இழுத்துத் தோள்மீது போட்டுக்கொண்டு சமூகத்தின் மீது கசையடி கொடுக்கும் போரினைத் தொடங்குகிறது. காவியத்துக்கு ஒரு கம்பன், கவிதைக்கு ஒரு பாரதி எனின், சிறுகதைக்கு ஒரு புதுமைப்பித்தன் என்று தமிழ் இலக்கிய சாம்ராஜ்யத்தில் பறை கொட்டிச் சொல்லுகின்ற படைப்புகளின் தொகுதி இது.
- த. ஜெயகாந்தன்"
-
This book Puthumaipithan Kathaigal Mulumaiyana Thoguppu is written by M.Vedasakayakumar and published by Pudumaipithan Pathippagam.
இந்த நூல் புதுமைப்பித்தன் கதைகள் முழுமையான தொகுப்பு, எம். வேதசகாயகுமார் அவர்களால் எழுதி புதுமைப்பித்தன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Puthumaipithan Kathaigal Mulumaiyana Thoguppu, புதுமைப்பித்தன் கதைகள் முழுமையான தொகுப்பு, எம். வேதசகாயகுமார், M.Vedasakayakumar , Kathaigal - Tamil story, கதைகள் , M.Vedasakayakumar Kathaigal - Tamil story,எம். வேதசகாயகுமார் கதைகள்,புதுமைப்பித்தன் பதிப்பகம், Pudumaipithan Pathippagam, buy M.Vedasakayakumar books, buy Pudumaipithan Pathippagam books online, buy Puthumaipithan Kathaigal Mulumaiyana Thoguppu tamil book.
|
இந்த புத்தகத்தில் மொத்தம் எத்தனை கதைகள் அடங்கியுள்ளன எனபதையும் சொல்லியிருந்தால் வாங்குபவர்க்கு வசதியாக இருக்கும்.
தயவு செய்து இதில் புதுமைப்பித்தனின் குறு நாவல்கள் மற்றும் கட்டுரைகளும் அடங்கி உள்ளதா என்று சொல்லவும்.இதில் புதுமைப்பித்தனின் அனைத்து சிறுகதைகளும் அடங்கி உள்ளதா என்று தெரிவிக்கவும்.