-
பதினான்கு வருடங்களுக்கு முன் எழுதிப் பிரசுரமான முதலாவது சிறுகதைக்கே ஆண்டின்
சிறந்த கதைக்கான 'இலக்கிய சிந்தனை' விருது பெற்றவர் போப்பு.
அதைத் தொடர்ந்த நீண்ட இடைவெளியில் எழுதி, செதுக்கியும் இழைத்தும் செம்மையுறச்
செய்து இந்தப் புத்தம் புதிய கதைகளை வழங்கியுள்ளார். தமிழின் பாரம்பரியச்
செழுமையும் மொழி வளமும் கொண்ட இந்தக் கதைகள், அரசியல், கலாசாரம், மனித உணர்வுகள்,
தியாகங்கள், வீரம், சூழ்ச்சி எனப் பலவகைப்பட்ட குரல்களை கலாபூர்வமாக பதிவு செய்து
நம்மை சிந்திக்க வைக்கின்றன. இக்கதைகள் கிராமம் முதல் பெருநகரங்கள் வரை நம்
பார்வையை விரியச் செய்து வெவ்வேறு உணர்வு நிலைகளில் பயணிக்கச் செய்கின்றன.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மட்டுமல்லாது சிங்கப்பூரிலும் சில காலம் வாழ
நேர்ந்த இவரது அனுபவங்கள் இதற்கு கை கொடுத்துள்ளன; களம் கொடுத்துள்ளன.
விகடன் பிரசுரத்திலிருந்து வெளிவரும் இந்தச் சிறுகதைத் தொகுப்பில் நீங்கள்
வாசிக்கப் போகும் கதைகள் இதுவரை எந்த இதழ்களிலும் வெளிவந்திராதவை.
அறியப்பட வேண்டிய எழுத்தாளரை இந்நூல் வாயிலாக தமிழ் கூறும் மக்களுக்கு அழுத்தம்
திருத்தமாகத் தெரியப்படுத்துவதில் பெருமை கொள்கிறேன்.
இக்கதைகளின் தனித்துவத்தையும் நுட்பங்களையும், கூடவே இவை தரும் அனுபவத்தையும்
நீங்கள் உணர்ந்து ரசிப்பீர்கள் என நம்புகிறேன்.
-
This book Nalaikku malai peyyum is written by Poppu and published by Vikatan Prasuram.
இந்த நூல் நாளைக்கு மழை பெய்யும், போப்பு அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Nalaikku malai peyyum, நாளைக்கு மழை பெய்யும், போப்பு, Poppu , Kathaigal - Tamil story, கதைகள் , Poppu Kathaigal - Tamil story,போப்பு கதைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Poppu books, buy Vikatan Prasuram books online, buy Nalaikku malai peyyum tamil book.
|