-
அரசியல், சமூக, பொருளாதார சீர்கேடுகளை, உணர்வற்று ஒதுங்கிக் கிடக்கும் மக்களிடம், குறிப்பாக இளைஞர்களிடம் எடுத்துரைக்க நல்ல எழுத்தாளர்களால்தான் முடியும். அந்த வகையில், தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் திகழும் தமிழருவி மணியன், அரசியல் வாழ்விலும் தனக்கென தனி அடையாளம் கொண்டவர்; தனி இயக்கம் கொண்டவர். நம் நாட்டில் வளர்ந்துவிட்ட சமூக சீர்கேட்டுக்கு காரணமான அரசியல், கட்சி, கொள்கை, கட்சித்தாவல், சந்தர்ப்பவாதம், வாக்குறுதி, இலவசம், மது, முகஸ்துதி, வன்முறை, லஞ்சம், ஊழல், விவாகரத்து... என பல பொருள்களில் ‘எங்கே போகிறோம் நாம்?’ என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரைகள் இளைஞர்களுக்கு நல்வழி காட்டுகின்றன. ஜூனியர் விகடனில் தொடராக வந்தபோதே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தக் கட்டுரைகள், இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில்! தன்னலம் கருதாமல் நாட்டு மக்களின் நலனில் அக்கறை கொள்வோரும், அறிவார்ந்த நிர்வாகத்திறமை மிக்கவர்களும், மாசற்ற தொண்டுள்ளம் கொண்டவர்களும் மட்டுமே அரசியலில் அடியெடுத்து வைத்து, நாட்டுக்கும் மக்களுக்கும் நல்வழி காட்ட முடியும் என்பதை ஆணித்தரமாக விளக்குகிறது இந்த நூல். அரசியல்வாதிகளின் கண்துடைப்பு சலுகைகளால் அடிமைகளாக ஏமாற்றப்படுகிறோம். பின்னால் நிகழப்போகும் விளைவுகளைப் பற்றிச் சிந்திப்பதில்லை. இப்படி, தரிகெட்டு கிடக்கும் சமுதாயத்துக்கு விடிவு காலம் பிறக்க அடித்தளம் அமைத்துள்ளது இந்த நூல். அனைவரும் படித்து விழிப்பு உணர்வு பெற வேண்டிய பயனுள்ள நூல் இது!
-
This book Enge Pogiroam Naam? is written by Tamilaruvi Manian and published by Vikatan Prasuram.
இந்த நூல் எங்கே போகிறோம் நாம்?, தமிழருவி மணியன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Enge Pogiroam Naam?, எங்கே போகிறோம் நாம்?, தமிழருவி மணியன், Tamilaruvi Manian, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Tamilaruvi Manian Suya Munnetram,தமிழருவி மணியன் சுய முன்னேற்றம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Tamilaruvi Manian books, buy Vikatan Prasuram books online, buy Enge Pogiroam Naam? tamil book.
|
அரசியல் திருத்தப்பட வேண்டும் என்றும் விரும்பும் அனைவரும் படிக்க, ஒருமுறை அல்ல பலமுறை படிக்க வேண்டிய நூல்.
தமிழருவி மணியன் திராவிட இயக்கங்களின் முக மூடிகளை கிழிக்கும் ஆவேச தொடர் தான் எங்கே போகிறோம் நாம்? புதிய தலைமுறையினருக்கு ,பழைய அரசியல் தடங்களை வெளிச்சம் போட்டு காட்டும் தொடர் படித்து பாருங்கள்…
எங்கே போகிறோம் நாம்? – தமிழருவி மணியன்; பக். 320: ரூ.135.
சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கக் காரணமாக இருந்த வர்கள் செய்த தியாகங்களும், அதிகார நாற்காலியில் அமர்ந்து கொண்டு பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய தலைவர்களின் வரலாறுகளும் நெஞ்சை உருக்கும் வகையில் விவரிக்கப்பட்டிருக்கின்றன. ஓர் அரசியல்வாதியும், அரசியல் கட்சியும் எப்படி இருக்க வேண்டும்? எப்படி இருக்கக் கூடாது? என்பதற்குப் பல உதாரணங்களை நூல் ஆசிரியர் விளக்கியிருப்பது பாராட்டுக்குரியது. அரசியல் தலைவர்கள் கட்சிகளை உருவாக்கியதன் பின்னணிகள், கட்சித் தாவல்கள், ஆட்சிக் கட்டிலில் அமர மக்களை ஏமாற்றிய விதங்கள், தேசத்தை உலுக்கிய ஊழல்களின் விவரங்கள் அனைத்தும் கட்டுரைகளாக நூலில் இடம் பிடித்திருக்கின்றன. இன்றைய அரசியல்வாதிகள் அனைவரும் அவசியம் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய அரிய கட்டுரைகளின் தொகுப்பு.
வார இதழ் ஒன்றில் வந்த கட்டுரைத் தொடர் அழகிய நூலாக, உயர்ந்த தாளில், சிறந்த அச்சில், வண்ணப்படங்களுடன் வெளிவந்துள்ளது. நூலின் அமைப்பே நூலைப் படிக்கத் தூண்டுகிறது.அரசியல், அரசு, கட்சி, கொள்கை, கட்சித்தாவல், தடைச்சட்டம், சந்தர்ப்பவாதம், தேர்தல், வாக்குறுதி, இலவசம் என்று, நம்முடன் நம் வாழ்வில் தொடர்பு கொண்ட எல்லா தலைப்பிலும் அருமையான கட்டுரைகள் வடித்துள்ளார். அழுக்கு வார்த்தைகளால் யாரையும் அசிங்கப்படுத்தாத சமூக நலன் சார்ந்த படைப்பு என்று ஆசிரியர் கூறியிருப்பது நிஜம் தான்.
அந்தப் பிரபல அரசியல்வாதியின் மகள் இந்து மருத்துவக் கல்லூரி இறுதித் தேர்வு எழுதியிருந்தார். நன்றாகப் படிக்கக் கூடிய மாணவி. முதல் வகுப்பில் தேறுவார் என எதிர்பார்த்திருக்க – முடிவு வெளியாகிறது அவர் தேர்வில் தவறிவிட்டதாக. சக மாணவிகளெல்லாரும் திகைக்க, மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க முடிவெடுக்கிறார் இந்து. தந்தையிடம் பேசியபோது – அனுமதி கிடைக்கவில்லை அவரிடமிருந்து!
‘மறு மதிப்பீடு செய்து, நீ உரிய மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சியடைந்தாலும் நான் அதிகார துஷ்பிரயோகம் செய்துவிட்டதாக உல்கம் பழி சொல்லும். ஆகவே அடுத்த தேர்வுக்கு நீ தயாராகு’ என்கிறார் அவர். மனமுடைந்த இந்து தற்கொலை செய்து கொண்டார்!
அதன் பின் இந்திய நிதியமைச்சராக, பிரமராகவெல்லாம் பணியாற்றிய அவர் பதவிக்காலம் முடிந்து ஒரு அடுக்கு மாடிக் கட்ட்த்தில் வசித்து வந்து, அந்த அடுக்கு மாடிக் கட்ட்ட உரிமையாளர் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் அவரை வெளியேறுமாறு தீர்ப்பளிக்க, மனமுடைந்த மருமகள் மன்நிலை பாதிக்கப்பட்டு மரித்தார்.
அந்த அரசியல்வாதி யார்?
மொரார்ஜி தேசாய்!
இந்தத் தகவலை நான் படித்தது தமிழருவி மணியன் எழுதிய ஊருக்கு நல்லது சொல்வேன் என்ற நூலில். இதுபோல இப்போது கேட்டால் ‘இப்படியெல்லாம் இருந்திருக்காங்களா?’ என்ற அதிர்ச்சியில் நமக்கே மாரடைப்பு வந்துவிடும் போல பல சம்பவங்களை சொல்லியிருக்கிறார் அவர். தமிழருவி மணியனிடம் எனக்குப் பிடித்தது இது போன்ற நல்லவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு, வெறும் எழுத்தில் அதைக் காட்டிவிட்டுப் போகாமல் சொந்த வாழ்க்கையிலும் அவர்களைப் பின்பற்றுவதுதான்.
தமிழருவி மணியன் காந்திய மக்கள் இயக்கம் என்ற கட்சி அரசியல் சாராத சமுதாய அமைப்பொன்றை நிறுவி நடத்தி வருகிறார். அதன் சார்பில் வரும் ஞாயிறு – 27.03.2011 அன்று- திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் ஒரு கருத்தரங்கம் ஏற்பாடாகியிருக்கிறது.
என்ன செய்யப் போகிறோம் நாங்கள் என்ற தலைப்பில் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் மக்களுக்காக என்ன செய்யப் போகிறார்கள் என்று விளக்க, எங்கே போகிறோம் நாம் என்ற தலைப்பில் வாக்காளர் சார்பில் திரு. பாரதி கிருஷ்ணகுமார் பேச இருக்கிறார்.
அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் ஒரே மேடையில் அமர்ந்து தங்கள் திட்டங்களை விளக்கப் போகிறார்களா?
ஆம்! உங்களைப் போலவே நானும் வெகு ஆர்வமாக இருக்கிறேன் பங்கு கொள்ள..
நன்றி : http://www.parisalkaaran.com/2011/03/blog-post_4544.html