-
பொதுவாக மருத்துவம் என்ற சொல் மருந்தின் துணைகொண்டு பிணி தீர்த்தல்,நோய் அகற்றல் என்ற பொருளிலேயே வழங்கப்படுகிறது. எந்த முறை மருந்துவமானாலும், அது அலோபதியாக இருப்பினும் மருந்துகளை அடிப்படையாகக் கொண்டே மருத்துவம் செய்யப்பட்டு வந்திருக்கிறது. மருத்துவர் நோயாளியைச் சோதித்து, நோய் இன்னது என்று கண்டறிந்த பின்னர் அந்த நோயினைத் தீர்க்க கூடிய மருந்தினை அளிப்பார். இங்கு நோயாளி செய்ய வேண்டியது தெல்லாம் அம்மருந்தினை உட்கொள்ள வேண்டியது தான்,நோயை தீர்க்க வேண்டிய பொறுப்பு மருந்தைச் சார்ந்தது. இதற்குமேல் நோயாளி செய்யக் கூடியதோ, செய்ய வேண்டியதோ எதுவுமில்லை.மருந்தின்றியும் கட்டுப்படுத்தக்கூடிய நோய்களின் பட்டியலில் உயர் இரத்த அழுத்தமும் இடம் பெறுகிறது.முற்றிவிட்ட நிலையிலே உள்ள உயர் இரத்த அழுத்தக்காரர்களையும் அபாயகரமான இரத்த அழுத்த முற்றவர்களையும் வேறு சில நோயகளினால் இரத்த அழுத்தம் உயரப் பெற்றவர்களையும் தவிர்த்து விட்டு. மிகப்பெரும்பான்மையானவர்களைப் பாதித்திருக்கின்ற எளியவகை உயர் இரத்த அழுத்தமுடையவர்களை மருந்தின்றியே குணப்படுத்த முடியும் என்று இயற்கை மருத்துவர்கள் மட்டுமின்றி ஆங்கில மருத்துவம் கற்றுத் தேர்ந்தவர்களும் மேல்நாட்டு மருத்துவர்களும் சொல்லாலும் செயலாலும் நிரூபித்து வருகின்றனர்.
-
இந்த நூல் இரத்த அழுத்தத்திற்கு இயற்கை வைத்தியம், டாக்டர்.கே.ஆர். சுந்தரம் அவர்களால் எழுதி கீதாஞ்சலி பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இரத்த அழுத்தத்திற்கு இயற்கை வைத்தியம், டாக்டர்.கே.ஆர். சுந்தரம், Dr.K.R. Sundaram , Maruthuvam, மருத்துவம் , Dr.K.R. Sundaram Maruthuvam,டாக்டர்.கே.ஆர். சுந்தரம் மருத்துவம்,கீதாஞ்சலி பிரசுரம், Geethaanjali Prasuram, buy Dr.K.R. Sundaram books, buy Geethaanjali Prasuram books online, buy tamil book.
|