-
நீல வானத்திலிருந்து பூரண சந்திரன்
அமுதக் கிரணங்களைப் பொழிந்து கொண்டிருந்தான். பூவுலகம் மோகன நிலவிலே மூழ்கி
அமைதி குடிகொண்டு விளங்கியது. எதிரே எல்லையின்றிப் பறந்து கிடந்த வங்காளக்
குடாக் கடலில் சந்திரக் கிரணங்கள் இந்திர ஜாலவித்தை செய்து
கொண்டிருந்தன.கரையோரத்தில் சின்னஞ்சிறு அலைகள் அதிக ஓசை செய்து அமைதியைக்
குலைக்க விரும்பாதவை போல் இலேசான சப்தத்துடன் எழுந்து விழுந்து
கொண்டிருந்தன.
கடல் ஓரத்து வெண் மணலில் நாங்கள்
உட்கார்ந்திருந்தோம். ரசிகமணி ஸ்ரீ.டி.கே.சிதம்பரநாத முதலியார் அவர்களும்
இன்னும் இரு நண்பர்களும் நானும் இருந்தோம். வேறு மனிதர்களோ பிராணிகளோ
கண்ணுக்கெட்டிய தூரம் காணப்படவில்லை.
மாமல்லபுரத்துக் கடற்கரை. பன்னிரண்டு
வருஷங்களுக்கு முன்னால் நடந்த சம்பவம். ரஸிகமணி அவர்கள் வழக்கம்போல்
கவிதையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்.
'விதியின் எழுத்தைக் கிழித்தாச்சு ! - முன்பு விட்டகுறை வந்து தொட்டாச்சு !'
என்ற ஸ்ரீ கோபாலகிருஷ்ண பாரதியாரின் பாடல் வரிகளை அழுத்தந்திருத்தமாக எடுத்துரைத்தார்.
'முன்பு - விட்டகுறை வந்து தொட்டாச்சு!'
என்னும் வரி ஒரு சக்தி வாய்ந்த மந்திரத்தைப் போல் என்னை மதிமயங்கச்
செய்தது. அந்தக் கடற்கரை மணலில் அதே மாதிரி வெண்ணிலவில் இதற்கு முன்
எத்தனையோ தடவை நான் உட்கார்ந்திருந்தாகத் தோன்றியது. முந்தைய பிறவிகளில்
விட்ட குறைதான் இங்கே என்னைக் கொண்டு வந்து சேர்த்து இன்று இந்தக் கடற்கரை
ஓரத்திலே உட்காரச் செய்திருக்கிறது என்றும் தோன்றியது.
கடலிலே ஆயிரமாயிரம் படகுகளும்
கப்பல்களும் திடீரென்று காட்சி அளித்தன. கரையிலே கூட்டங் கூட்டமாக ஆடவரும்
பெண்டிரும் நடமாடிக் கொண்டிருந்தார்கள். சற்றுத் தூரத்தில் உச்சியில்
ரிஷபக் கொடிகளும் சிங்கக் கொடிகளும் உல்லாசமாகப் பறந்தன. இனிமை ததும்பிய
இசைக் கருவிகளிலிருந்து எழுந்த சங்கீதம் நாற்புறமும் சூழ்ந்து போதையை
உண்டாக்கிற்று. கண்ணுக்குத் தெரிந்த பாறைகளில் எல்லாம் சிற்பிகள் கையில்
கல்லுளியை வைத்துக் கொண்டு வேலை செய்தார்கள். எங்கேயோ யாரோ காலில் கட்டிய
சதங்கை ஒலிக்க நடனமாடிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது.
சிறிது நேரத்துகெல்லாம் அந்த அகக் காட்சிகள் தெளிவடைந்தன. உருவங்களும் முகங்களும் இனந்திரியுமாறு எதிரே தோன்றின.
-
This book Sivakamiyin Sabhatham (Part 1,2,3,4of 2 Book) is written by Kalki and published by Thirumagal Nilayam.
இந்த நூல் சிவகாமியின் சபதம் (4 பாகங்கள் கொண்ட 2 புத்தகங்கள் சேர்த்து), கல்கி அவர்களால் எழுதி திருமகள் நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sivakamiyin Sabhatham (Part 1,2,3,4of 2 Book), சிவகாமியின் சபதம் (4 பாகங்கள் கொண்ட 2 புத்தகங்கள் சேர்த்து), கல்கி, Kalki, Novel, நாவல் , Kalki Novel,கல்கி நாவல்,திருமகள் நிலையம், Thirumagal Nilayam, buy Kalki books, buy Thirumagal Nilayam books online, buy Sivakamiyin Sabhatham (Part 1,2,3,4of 2 Book) tamil book.
|