-
’ திடீரென்று நாம் எல்லோரும் சிறுவர்களாக மாறி நம் பள்ளி நாள்களுக்குப் போனால் எவ்வளவு நன்றாக இருக்கும் ? ’ என்று சொல்லி ஏங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதற்கு ‘ டைம் மெஷின் ‘ வேண்டும். அல்லது ஏதாவது மாயாஜாலம் நடக்கவேண்டும். இரண்டும் இல்லாமல் அதை சாத்தியமாக்கியிருக்கிறது இந்த நாவல்.
சிறிமி பூர்வாவைக் கடந்த காலத்துக்கு அழைத்துப் போகிறார் ஸ்வாமி தாத்தா. அவளுடன் நாமும் பயணம் செய்கிறோம். எதிர்பாராத ஒரு பயணம். பன்னிரண்டு ஆழ்வார்களையும், சிலிர்ப்பூட்டும் சம்பவங்களையும் பூர்வாவுடன் சேர்ந்து நேரில் பார்க்கிறோம்.
பன்னிரு ஆழ்வார்கள் யார் ? அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் ? அவர்கள் எப்படி ‘ ஆழ்வார்கள் ‘ எனப் பெயர் பெற்றார்கள் ? அவர்களுடைய பெருமைகள் என்ன ? ஒவ்வோரு கேள்விக்குமான பதிலையும் குழந்தைகள் கூட புரிந்துகொள்ளூம் வகையில் மிக எளிமையாகச் சொல்லப்பட்ட அற்புதமான நாவல்.
‘ மேஜிக்கல் ரியலிசம் ‘ என்று சொல்லப்படும் மாயாஜால யதார்த்தவாதக் கதைகள் தமிழுக்குப் புதிதல்ல. ஆனால், சிறுமி பூர்வா, ஸ்வாமி தாத்தா, ஆழ்வார்கள், பறக்கும் கம்பளம், பிரசன்னமாகும் மகாவிஷ்ணு, அற்புதமான திகைப் பூட்டும் சம்பவங்கள்....என விரிகிற இந்தக் களம் மிகப் புதிது.
-
This book Poorva is written by Lakshmi Devnath and published by Kizhakku Pathippagam.
இந்த நூல் பூர்வா, லஷ்மி தேவ்நாத் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Poorva, பூர்வா, லஷ்மி தேவ்நாத், Lakshmi Devnath , Pothu, பொது , Lakshmi Devnath Pothu,லஷ்மி தேவ்நாத் பொது,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Lakshmi Devnath books, buy Kizhakku Pathippagam books online, buy Poorva tamil book.
|
மாதம் மார்கழி. ஆழ்வார்களின் பாடல்களில் பலரும் மதி மயங்கியிருக்கும் காலம்.
இந்த ஆண்டு நான் ‘மேற்பார்வை’ பார்த்த புத்தகங்களில் ஒன்று ‘பூர்வா’ என்ற மாய யதார்த்த நாவல். ஆழ்வார்கள் கதைதான். ஆனால் அதையே சிறுவர்கள் ரசிக்கும்படியாக மாற்றியுள்ளார் லக்ஷ்மி தேவநாத்.
ஸ்வாமி தாத்தா என்ற ஒரு கிழவர் சாமி, கோயில், வேதாந்தம் என்று ஏதோ சொல்லி கழுத்தை அறுக்கப்போகிறாரோ என்று பயப்படுகிறாள் பூர்வா என்ற சிறுமி. ஆனால் ஸ்வாமி தாத்தாவோ சிறு குழந்தைகளையும் கவரக்கூடிய சுவாரசியமான மனிதர். அவர் வெறுமனே கதை சொல்லவில்லை. பூர்வாவை ஆழ்வார்களில் அற்புத உலகத்துக்குள் அழைத்துச் சென்றுவிடுகிறார்.
ஸ்வாமி தாத்தாவுடன் சேர்ந்து பூர்வாவும் முதலாழ்வார்கள் ஓர் அறைக்குள் ஒண்டிக்கொண்டு ஒளி விளக்காக ஸ்ரீமன் நாராயணனைத் தரிசிப்பதைப் பார்க்கிறாள். பெரியாழ்வார் பல்லாண்டு பல்லாண்டு என்று எம்பெருமானுக்குத் திருக்காப்பு இடுவதைப் பார்க்கிறாள். ஆண்டாள் திருமாலுக்கு வைத்த மாலையை அள்ளி அணிவதையும் மாலையே மணாளன் ஆக்கிக்கொள்வதையும் பார்க்கிறாள்.
விப்ரநாராயணர் ஜெயிலில் மாட்டிக்கொள்வதைக் கண்டு பதைபதைக்கிறாள். குலசேகரர் பாம்புக் குடத்தில் கைவிடுவதைக் கண்டு திகைத்துப்போகிறாள். பாணர், திருமங்கை, நம்மாழ்வார், மதுரகவி என்று அனைவர் வாழ்விலும் நடப்பதை அருகருகே இருந்து கவனிக்கிறாள். அவள்மூலம் நமக்கும் அனைத்து விஷயங்களும் தெரியவருகின்றன.
ஆங்கிலத்தில் எழுதப்பட்டு நல்ல பாராட்டைப் பெற்ற நூலை பத்மா நாராயணன் இயல்பான தமிழில் மொழிபெயர்த்துள்ளார். சொல்லப்போனால் தமிழில்தான் இயல்பாக வருகிறது. ஆழ்வார் பாசுரங்களின் சுவையே தமிழில் இருந்தால்தானே சரியாகக் கிடைக்கும்?
குழந்தைகளுக்கு ரசிக்கும்படிக் கதை சொல்ல விரும்புபவர்கள் தாராளமாக இந்தப் புத்தகத்தைக் கையில் எடுக்கலாம். சொல்லப்போனால், உங்கள் குழந்தைகளையே இந்தப் புத்தகத்தை நேரடியாகப் படிக்குமாறு தூண்டுங்கள். நிச்சயம் ரசிப்பார்கள்.
நன்றி : http://thoughtsintamil.blogspot.com/2009/12/blog-post_20.html