ஈரோடு: புத்தக திருவிழாவை முன்னிட்டு, ஈரோட்டில், 60 வகையான பல்சுவை புத்தகங்கள் வெளியிடப்பட்டன. ஈரோட்டில் புத்தக திருவிழா நடக்கிறது. இதையொட்டி நூல்கள் வெளியிடும் விழா, ஈரோட்டில் நேற்று நடந்தது.அழிவின் விளிம்பில் அந்தமான், பனை விடிலி, சிறகின் நிழல், விடுதலை வேள்வியில் மதுரை, அறிவியல் விருந்து, நண்டு சொன்ன நகைச்சுவை கதைகள், ஒளியாய் இருக்க வருவாயாக, பளிச்சினு பற்களுக்கு ஒரு மாற்றம், கடல் அடி, பசுமை அரசியல், சுற்றுச்சூழல் பயில்வுகள், வாடகைத் தொட்டில், மறைத்துப் பேச என்ன இருக்கு, யாதும் ஊரே யாவரும் கேளீர், என்பன உள்ளிட்ட, 60 புத்தகங்கள் வெளியிடப்பட்டன. தமிழக அரசு முதன்மை செயலாளர் இறையன்பு வெளியிட்டார். ஈரோடு எஸ்.பி., சிவக்குமார் பெற்றுக் கொண்டார். மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு புத்தக திருவிழாவை முன்னிட்டு 60 புத்தகங்கள் வெளியீடு
No Comments Thursday 10 Aug 2017 | செய்திகள், புத்தக வெளியீடு (Book Release) |
ஏனைய செய்திகள்