-
"நானாவது ரெண்டு வரி சொல்லி புண்ணியம் தேடு கிறேன். நீ ஒரு நாளாவது, கிருஷ்ணா, ராமா என்று கடவுளை பேரைச் சொல்லி இருப்பாயா?" ''அப்பா! அம்மா உங்களை பேர் சொல்லிக் கூப்பிட றாங்க" என்று சத்தமாய் சொல்ல, அவளை அடிக்கக் கை ஓங்கியவரின் கையில் முத்தமிட்டு, "என்னை பத்தி ரொம்பக் கவலைப்படாதே ஜானு. பக்தி மனசுல இருந் தால் போதும். அதைச் சாப்பிடாமல் இருந்தோ, அஞ்சு வேளை குளிச்சு, ஐந்நூறு தடவை சுலோகம் சொல் லியோ நிரூபிக்கணும் என்று இல்லை. கண் முன்னால் இருக்கிற கஷ்டப்படும் மனிதர்களுக்கு உதவி செய்வது மிகப் பெரிய தர்மம், என்று நினைக்கிறேன்" என்று சொல்லும் போதே, 'அத்தை' என்ற ஆனந்தின் உற்சாகக் குரல் கேட்டது. 'ஆஹா, கரெக்டா சாப்பாட்டு நேரத்துக்கு வந்து விட் டார் உங்க ஆசை மருமகன். மணியை கடிகாரம் பார்க் காமலே சரி பண்ணிக் கொள்ளலாம். எட்டு..." "ஹாசினி, நீ பேசினது எனக்குக் கேட்டது. அதைப் பற்றி கவலைப்படும் ஆள் நான் இல்லை. இந்த ஒரு ஜாண் வயிற்றுக்குத்தானே சம்பாதிக்கிறோம். இதை எல்லாம் உங்க ஒல்லிகுச்சி பொண்ணுக்கு சொல்ல மாட்டீங்களா அத்தை?” ''அம்மா! அவன் எந்த வேலையா வந்தானோ அதை மட்டும் பார்த்துட்டுப் போகச் சொல்லுங்க. என் வாயைக் கிளறினால், நான் ஏடாகூடமா சொல்லிடுவேன்."
-
This book Vasantham Thedum Vaanavil is written by Amuthavalli Kalyanasundaram and published by Arunothayam.
இந்த நூல் வசந்தம் தேடும் வானவில், அமுதவல்லி கல்யாணசுந்தரம் அவர்களால் எழுதி அருணோதயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vasantham Thedum Vaanavil, வசந்தம் தேடும் வானவில், அமுதவல்லி கல்யாணசுந்தரம், Amuthavalli Kalyanasundaram, Novel, நாவல் , Amuthavalli Kalyanasundaram Novel,அமுதவல்லி கல்யாணசுந்தரம் நாவல்,அருணோதயம், Arunothayam, buy Amuthavalli Kalyanasundaram books, buy Arunothayam books online, buy Vasantham Thedum Vaanavil tamil book.
|