-
ஈகோ _ இந்த வார்த்தையை பலரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பயன்படுத்துகிறோம். யாராவது ஒருவர், சக மனிதரை மதிக்காமல் போனாலோ, தான் என்ற எண்ணத்துடன் கௌரவ மிகுதியில் செயல்களைச் செய்யும்போதோ, மற்றவரால் ‘ஈகோயிஸ்டிக்’ என்றும், ‘அவருக்கு உள்ள ஈகோவைப் பாரேன்!’ என்றும் அடையாளம் காட்டப்படுகிறார். ஈகோ என்பதை, பெரும்பாலும் நெகட்டிவ்வான பொருளிலேயே பயன்படுத்துகிறோம். ஆனால், ‘ஈகோ’ என்ற ஒன்று இருப்பதால்தான் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்விலும் சில முன்னேற்றங்கள் சாத்தியமாகின்றது என்பதை உதாரணங்களுடன் மெய்ப்பிக்கிறார் நூலாசிரியர் அஞ்சனா சென். ஈகோ என்பதை சூப்பர்மேன் கதாபாத்திரம் அணியும் ஆடையாக உருவகப்படுத்தி, ஒவ்வொருவரும் எப்படி அந்த ஆடையை அணிந்து, இந்த உலகை நோக்குகிறோம் என்பதை உளவியல் நோக்கில் காட்டியிருக்கும் பாங்கு, இந்த நூலின் தனிச் சிறப்பு. நெகட்டிவ்வான விஷயங்களை எவ்வாறு பாஸிட்டிவ்வாக மாற்றி வெற்றி நடை போடுவது என்ற வெற்றி சூட்சுமத்தை, ஈகோ என்ற குணத்தையே வைத்து நூலாசிரியர் காட்டுவது, நல்ல தீர்வினை வாசகர் மனத்துள் ஏற்படுத்தும். ஆங்கிலத்தில் விற்பனையில் சாதனை படைத்த 'கெட் தி ஈகோ அட்வான்டேஜ்' என்ற நூலின் எளிமையான தமிழாக்கம் இது.
-
This book Ego Varama?Saabama? is written by Anjana Sen and published by Vikatan Prasuram.
இந்த நூல் ஈகோ _ வரமா? சாபமா?, அஞ்சனா சென் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ego Varama?Saabama?, ஈகோ _ வரமா? சாபமா?, அஞ்சனா சென், Anjana Sen, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Anjana Sen Suya Munnetram,அஞ்சனா சென் சுய முன்னேற்றம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Anjana Sen books, buy Vikatan Prasuram books online, buy Ego Varama?Saabama? tamil book.
|