| |||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|||||
| |||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||
|
|
மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் : |
பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் : |
You must be logged in to post a comment.
Jeeva Puthakalayam |
Information/Help |
Customer Care |
Follow us |
|
About Us Contact Us Terms and Conditions Tamil books blog Link to Us |
Frequently Asked Questions(FAQ) How to buy tamil books online? Tamil books online shopping - Top sellers Free Tamil E-Books for download Tamil books tags Tamil book news Tamil book Reviews Tamil book Release |
Help Desk: Customercare email : Write to us ccare@noolulagam.com Phone : Call us +91-7667-172-172 Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders Give Feedback |
![]() ![]()
|
மார்பக புற்றுநோய்
மார்பகப் புற்றுநோய் இந்தியாவில் பெண்களிடம் கருப்பைப் புற்றுநோய்க்கு அடுத்தபடியாக அதிகமாக காணப்படும் ஒன்றாகும். 2001 ஆம் ஆண்டு இந்தியாவில் மொத்த பெண்களின் எண்ணிக்கையில் 503 மில்லியனில் 80 ஆயிரம் பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் ஒரு லட்சம் பெண்களில் 21 பேருக்கு இப்புற்றுநோய் பாதிக்கும் என்று அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் புள்ளி விவரம் தெரிவிக்கின்றது.
மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் :
1. மார்பகத்தில் கட்டி அல்லது அக்குளில் நெரிக்கட்டு ஏற்படுதல்.
2. மார்பக அமைப்பில் ஏற்படும் மாற்றம்.
3. மார்பக காம்புகளிலிருந்து இரத்தத்துடன் கலந்து கசிவு.
4. மார்பக காம்புகள் உள்ளிழுத்துக் கொள்ளுதல், மார்பகத் தோலில் ஏற்படும் சுருக்கம்.
மேற்கூறிய அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் உடனே தாமதிக்காமல் மருத்துவரை அணுகி அவருடைய ஆலோசனையின் பேரில் மார்பகத்தில் உள்ள கட்டி புற்றுநோய் கட்டியா அல்லது சாதாரண கட்டியா என்பதை அறிந்து தக்க சிகிச்சையை பெறலாம்.
மார்பக புற்றுநோய் ஏற்பட காரணங்கள்
1. சிறுவயதிலேயே பருவமடைதல் அல்லது மாதவிடாய் நிற்பதில் ஏற்படும் தாமதம்.
2. தாமதமாக குழந்தை பெற்று கொள்ளுதல்.
3. குடும்பத்தில் உறவினர்களுக்கு மார்பகப் புற்றுநோய் கண்டிருத்தல்.
மார்பகப் புற்று நோயிலிருந்து உங்களை காத்துக் கொள்ள வழிகள்
1. கொழுப்பு சத்து மிகுந்த உணவை தவிர்க்க வேண்டும்.
2. உடல் பருமன், அதிக எடையை தவிர்க்க வேண்டும்.
3. மாதவிடாயை மாற்றக்கூடிய மாத்திரைகளை அதிகமாக பயன்படுத்தாமல் இருத்தல்.
4. உங்கள் நெருங்கி உறவினர்கள் எவரேனும் மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் நீங்களும் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
பரிசோதனை முறைகள்
1. மாதமொருமுறை மார்பக சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
2. ஆண்டிற்கு ஒரு முறை மார்பகங்களை மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
3. மார்பக எக்ஸ்ரே (மெமோகிராபி) எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.
பெண்கள் தாமே செய்து கொள்ள எளிதான மார்பக சுய பரிசோதனை முறை விளக்கம்
1. இடுப்பளவிற்கு துணிகளை இறக்கிவிட்டு பின்பு நின்றோஅல்லது உட்கார்ந்தோ கண்ணாடி முன் மார்பகங்களை கவனிக்கவும். கைகளை இருபுறமும் தளர்த்தி வைத்துக் கொள்ளவும். மார்பகத்தின் அமைப்பிலோ அல்லது தோற்றத்திலோ மாற்றம் உள்ளதா என்று கவனிக்கவும்.
இதே முறையில் கைகளை தலைக்குமேல் உயர்த்தி மார்பகங்களில் மாற்றம் உள்ளதா அல்லது மார்பகக் காம்புகளில் கசிவு உள்ளதா என்று கவனிக்கவும்.
பிறகு படுத்த நிலையில் தோள் அடியில் ஒரு மெல்லிய தலையனை வைத்து வலது கையால் இடது மார்பகத்தின் மேல் உள்ள பகுதியை பரிசோதனை செய்யவும். கைவிரல்களை சேர்த்த நிலையில் வைத்துக்கொண்டு வட்ட வடிவ முறையில் லேசாக அழுத்தி கட்டி தெரிகிறதா என்று பரிசோதனை செய்யவும்.
அதே முறையில் மார்பகத்தில் உள்ள கீழ் பகுதியை முறையாகப் பரிசோதிக்கவும்.
பின்னர் மார்பகத்தில் வெளி கீழ் பகுதியை லேசாக அழுத்தி பரிசோதனை செய்து கீழிருந்து மார்பகக்காம்பை நோக்கி வரவும்.
அதே முறையில் மார்பகத்தின் வெளிமேல் பகுதியிலிருந்து மார்பகக்காம்பு வரை பரிசோதனையை தொடரவும்.
மார்பகப் பரிசோதனைக்குப் பிறகு அக்குளில் நெரிகட்டி உள்ளதா என்று பரிசோதிக்கவும். பின்னர் இதே முறையில் இடது கையால் வலது மார்பகத்தையும்அக்குள் பகுதியையும் பரிசோதனை செய்யவும்.
புற்றுநோயை விரட்டும் இந்திய உணவுகள்
புற்றுநோய் என்பது மெல்லக் கொல்லும் ஒருநோய். எந்த வகையிலும் அது மனிதர்களை தாக்கலாம். ஆரம்பநிலையிலேயே கண்டறியப்படும் புற்றுநோயை எளிதில் குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் சத்துநிறைந்த காய்கறிகளும் பழங்களுமே புற்றுநோயை எதிர்க்கும் தன்மை கொண்டவை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். புகையிலை, மிதமிஞ்சிய சூரிய ஒளி, பணிபுரியும் இடங்களில் வெளிப்படும் வேதிப்பொருட்கள், நச்சுவாயுக்கள் இவற்றையெல்லாம் புற்றுநோய் தோன்றுவதற்குரிய காரணங்களாக கூறமுடியும். இவற்றையெல்லாம் தவிர்த்து வாழ்வதே புற்றுநோயில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்வதற்குரிய எளிய வழியாகும். இவற்றையன்றி நாம் உட்கொள்ளும் சில உணவு வகைகளும் புற்றுநோய் எதிர்ப்புத்தன்மை கொண்டுள்ளன.
மஞ்சளும் இஞ்சியும்
மஞ்சளும், இஞ்சியும் உணவிற்கு சுவையைக் கூட்டுபவை மட்டுமல்ல. இவற்றை சுவையுள்ள மருந்துகள் என்றே கூறலாம். இவற்றில் உள்ள வேதிப்பொருள் சோதனைக்குழாயில் உள்ள புற்றுநோய் செல்களைக்கூட விரைவாக அழித்துவிடும் ஆற்றல் உடையது. மஞ்சளும் இஞ்சியும் மாத்திரை வடிவில் கிடைக்கிறது. அவையல்லாம் சோம்பேறிகளுக்கானவை. மஞ்சளையும் இஞ்சியையும் மருந்துப்பெட்டியில் வைக்கவேண்டாம். சமையலறையில் வைத்திருங்கள் என்கின்றனர் மருத்துவர்கள்
கிரீன் டீயின் வேதிப்பொருட்கள்
பச்சைத்தேயிலையில் EPIGALLOCATECHIN GALLATE (EGCG) மற்றும் CATECHINS ஆகிய வேதிப்பொருட்கள் உள்ளன. இவை புற்று நோய் செல்களின் பரம எதிரிகள். நாளொன்றுக்கு ஏறத்தாழ 1.9 லிட்டர் பச்சை தேயிலை குடிப்பதில்கூட தவறில்லை. தேயிலையை பக்குவப்படுத்தி கருப்புத்தேயிலை தயாரிக்கும்போது பயனுள்ள வேதிப்பொருளான CATECHINS ஐ இழக்கப்படுகிறது. எனவே பச்சைத்தேயிலையையே அதிகமாக குடிப்பது நலம் பயக்கும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.
புற்றுநோயை குறைக்கும் வைட்டமின் டி
மார்பக புற்றுநோய், குடல் புற்றுநோய் இவற்றை எதிர்த்து போரிடுவதில் வைட்டமின் டி பெரும்பங்காற்றுகிறது. கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் ஆயுட்காலத்தை நீட்டிப்பதிலும் வைட்டமின் டி யின் பங்கு அளப்பரியது. முட்டைகள், புற ஊதாக்கதிர்களால் செறிவூட்டப்பட்ட காளான், சூரிய ஒளி இவற்றில் ஏராளமான வைட்டமின் டி உள்ளது. கேட்பிஷ், சல்மான் உள்ளிட்ட மீன் வகைகள் வைட்டமின் டி ஐ வாரி வழங்கக்கூடியவை.
பசுமையான காய்கறிகள், கொட்டைகள், பட்டாணி, பயறுவகைகள் இவற்றிலெல்லாம் அதிக அளவில் ஃபோலேட்டுகள் உள்ளன. பி காம்ப்ளக்ஸ் குடும்பத்தைச்சேர்ந்த ஃபோலிக் ஆசிட், வைட்டமின் பி 9 இவை அடங்கிய ஃபோலேட்டுகள் புற்றுநோயைத் தடுப்பதில்லை. மாறாக, ஃபோலேட்டுகள் இல்லாத உணவை எடுத்துக் கொள்பவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர்.
பச்சை காய்கறிகள் பழங்கள்
அடர்த்தியான பச்சைநிற காய்கறிகளில் பீட்டா கரோட்டீன் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் உள்ளன. இவை புற்றுநோயை தொடக்கநிலையிலேயே தடுத்து நிறுத்தும் தன்மையுடைய வலிமையான ஆன்டிஆன்ஸிடென்ட்ஸ் ஆகும். மேலும் இத்தகைய காய்கறிகளில் ஃபோலேட்டுகளும் அடங்கியுள்ளன. இந்த வகையான காய்கறிகளின் பசுமையான இலைகளும், சிவந்த வேர்ப்பாகமும் மிகுந்த பயனளிக்கவல்லவை.
முட்டைக்கோஸ் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு எதிரெதிர் இலைகொண்ட காய்கறிகளுக்கு புற்றுநோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகம். DINDOLYLMETHANE, SULFORAPHANE, SELENIUM ஆகிய வேதிப்பொருட்கள் இந்தவகையான காய்கறிகளில் அடங்கியுள்ளன. இவற்றை மென்று சுவைத்து சாப்பிடுவதால் கூடுதல் பலன் கிட்டும். நாம் வழக்கமாக இந்த வகை காய்கறிகளை வேகவைத்தே சாப்பிடுகிறோம். நுண்ணிய துண்டுகளாக்கி மென்று தின்பது பலனளிக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள்.
மாதுளம்பழம், ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி போன்ற கனிகள் புற்றுநோயை தடுக்கும் வேதிப்பொருட்களைக் கொண்டுள்ளன. இந்த வேதிப்பொருட்கள் உடல் பாகங்களில் கட்டிகள் வளருவதை தடுக்கும் ஆற்றல் உடையவை. உச்சரிக்க இயலாத கனிகளின் பெயர்களை எண்ணி குழப்பமடையத் தேவையில்லை. அந்தந்த பருவங்களில் கிடைக்கக்கூடிய கனிகளை சீராக உண்டு வருவதால் புற்றுநோய் எதிர்ப்பு சக்தியை நமது உடல் பெறும் என்கிறார்கள் உணவியல் வல்லுநர்கள்.
கருப்பு சாக்லேட்
சாக்லேட்டில் உள்ள கோக்கோ, சர்க்கரை இவற்றின் கலவை விகிதம் குறைந்தது 70 சதவீதமாக இருக்குமாயின் சாக்லேட் உடலுக்கு நல்லது. கோக்கோவின் அளவு கூடும்போது சாக்லேட் கருமை நிறமாகவும் கசப்பானதாகவும் இருக்கும். இந்த நிலையில் சாக்லேட்டில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ் மற்றும் மருத்துவக்குணமுள்ள பாலிபினோல்ஸ் ஆகியவை செயல்படக்கூடிய நிலையில் இருக்கும். கோக்கோவில் உள்ள கேட்சின்ஸ் என்னும் வேதிப்பொருள் தேயிலையிலும் காணப்படுகிறது. தென் அமெரிக்கர்களின் உணவுப்பழக்கத்தை ஆராய்ந்தபின் இதய நோய்கள், மாரடைப்பு, புற்றுநோய் இவற்றையெல்லாம் கேட்சின்ஸ் வேதிப்பொருளால் தடுத்து நிறுத்தப்படுவதாக வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர்.
சிவப்பு ஒயின்
சிறிய அளவில் எடுத்துக்கொள்ளப்படும் சிவப்பு ஒயினுக்கு புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலும், இதயத்தை வலுப்படுத்தும் ஆற்றலும் உண்டு.திராட்சைப்பழத்தின் தோலில் இருந்து பெறப்படும் RESVERATROL என்னும் வேதிப்பொருள் சிவப்பு ஒயினில் அடர்ந்து காணப்படுகிறது. நாளும் சிறிதளவு சிவப்பு ஒயின் சாப்பிடுவதை வல்லுநர்கள் ஆதரிக்கிறார்கள். இந்த பத்துவகையான உணவுப்பொருட்களையும் கலந்து கொழுப்பு இல்லாத யோகார்ட்டுடன் கலந்து சாப்பிடுவது நாவிற்கு மட்டும் ருசியானது அல்ல. நோயற்ற வாழ்விற்கும் சுவை கூட்டவல்லது என்பது வல்லுநர்களின் கருத்து.
புற்றுநோயின் தொடக்கமே உடம்பில் உள்ள டி என் ஏ எனப்படும் மரபணுக்கள் சேதமடைவதுதான். பருப்பு வகைகளும் கொட்டைகளும் ஏராளமான நார்ச்சத்தை பெற்றுள்ளன. குடலில் ஏற்படும் புற்றுநோய்களைத் தடுப்பதில் நார்ச்சத்து பெரும் பங்கு வகிக்கின்றது. மாட்டுக்கறியையும், பன்றிக்கறியையும் தின்று தீர்க்கும் மேல் நாட்டவர்கள் நார்ச்சத்துள்ள பருப்பு வகைகளையும் கொட்டைகளையும் சுவையாக சமைப்பது எப்படி என்பதை இந்தியர்களின் சமையலறைகளில் இருந்துதான் கற்றுக்கொள்ளவேண்டும்.