-
பகவான்
கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே, அவருக்குப் பணிவிடைகள் செய்து,
தேரோட்டி, பல்வேறு சேவைகள் புரிந்தவர், உத்தவர். இவர் தனது வாழ்நாளில்,
தனக்கென நன்மைகளோ வரங்களோ கண்ணனிடம் கேட்டதில்லை. துவாபர யுகத்தில், தமது
அவதாரப் பணியை முடித்துவிட்ட நிலையில், உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர், உத்தவரே,
இந்த அவதாரத்தில் பலர் என்னிடம் பல வரங்களும், நன்மைகளும்
பெற்றிருக்கின்றனர். ஆனால், நீங்கள் எதுவுமே கேட்டதில்லை. ஏதாவது
கேளுங்கள், தருகிறேன். உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே, எனது
அவதாரப் பணியை முடிக்க நினைக்கிறேன் என்றார். தனக்கென எதையும்
கேட்காவிட்டாலும், சிறு வயது முதலே கண்ணனின் செயல்களைக் கவனித்து வந்த
உத்தவருக்கு... சொல் ஒன்றும், செயல் ஒன்றுமாக இருந்த கண்ணனின் லீலைகள்,
புரியாத புதிராக இருந்தன. அவற்றுக்கான காரண, காரியங்களைத் தெரிந்துகொள்ள
விரும்பினார். பெருமானே! நீ வாழச் சொன்ன வழி வேறு; நீ வாழ்ந்து காட்டிய வழி
வேறு! நீ நடத்திய மகாபாரத நாடகத்தில்... நீ ஏற்ற பாத்திரத்தில், நீ
புரிந்த செயல்களில், எனக்குப் புரியாத விஷயங்கள் பல உண்டு.
அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய ஆவலாக இருக்கிறேன் நிறைவேற்றுவாயா?
என்றார் உத்தவர்.உத்தவரே! அன்று குரு÷க்ஷத்திரப் போரில் அர்ஜுனனுக்காக நான்
சொன்னது, பகவத் கீதை. இன்று உங்களுக்குத் தரும் பதில்கள், உத்தவ கீதை.
அதற்காகவே உங்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தைத் தந்தேன். தயங்காமல் கேளுங்கள்
என்றான் பரந்தாமன்
-
This book Uththava Geedhai is written by S. Sooriyamoorthy and published by Sri Indu Publications.
இந்த நூல் உத்தவ கீதை, எஸ். சூரியமூர்த்தி அவர்களால் எழுதி ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Uththava Geedhai, உத்தவ கீதை, எஸ். சூரியமூர்த்தி, S. Sooriyamoorthy, Aanmeegam, ஆன்மீகம் , S. Sooriyamoorthy Aanmeegam,எஸ். சூரியமூர்த்தி ஆன்மீகம்,ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ், Sri Indu Publications, buy S. Sooriyamoorthy books, buy Sri Indu Publications books online, buy Uththava Geedhai tamil book.
|