| |||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|||||
| |||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||
|
|
மற்ற சட்டம் வகை புத்தகங்கள் : |
பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் : |
You must be logged in to post a comment.
Jeeva Puthakalayam |
Information/Help |
Customer Care |
Follow us |
|
About Us Contact Us Terms and Conditions Tamil books blog Link to Us |
Frequently Asked Questions(FAQ) How to buy tamil books online? Tamil books online shopping - Top sellers Free Tamil E-Books for download Tamil books tags Tamil book news Tamil book Reviews Tamil book Release |
Help Desk: Customercare email : Write to us ccare@noolulagam.com Phone : Call us +91-7667-172-172 Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders Give Feedback |
![]() ![]()
|
இந்த புத்தகம் ஒலி புத்தகமாவும் கிடைகிறது.
ராஜிவ் கொலை வழக்கு – (ஒலிப் புத்தகம்)
நன்றி : http://www.luckylookonline.com
தினமலரில் முன்பெல்லாம் ராஜீவ் கொலைவழக்கு விசாரணையை நக்கலடித்து கார்ட்டூன் வரையப்படும். பீட்டர் வரைவார். பெரும்பாலும் ஒரே விஷயம்தான். வழக்கு விசாரணையின் போக்கைக் கண்டு வானில் இருந்து ராஜீவின் ஆவி தலையில் அடித்துக் கொள்ளும். நையாண்டி கார்ட்டூனாக இருந்தாலும், அவையெல்லாம் எவ்வளவு அர்த்தம் பொதிந்தது என்பதை இப்போது அறிய முடிகிறது. ராஜீவ் கொலைவழக்கை விசாரித்த சி.பி.ஐ.யின் தலைமைப் புலனாய்வு அதிகாரி – சி.பி.ஐ. (ஓய்வு) கே.ரகோத்தமன் ‘ராஜீவ் கொலை வழக்கு – மர்மம் விலகும் நேரம்’ என்ற பெயரில் புத்தகம் எழுதியிருக்கிறார். இதுவரை வெளிவராத, திடுக்கிடச் செய்யும் தகவல்கள் – ஆதாரங்களுடன் என்று அட்டையில் குறிப்பிடப்பட்டிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை.
’விடுதலைப்புலிகள் செய்தார்களா?’ என்றெல்லாம் கேள்விகளை எழுப்பி, ஆதாரங்களை அடுக்க முனையாமல் ‘அவர்கள்தான் செய்தார்கள், அப்புறம் என்னாச்சுன்னா…’ என்ற ரேஞ்சுக்கு ரகோத்தமன் அடித்து ஆடியிருக்கிறார். வெறுமனே தன் கூற்றாக சொல்லாமல், சி.பி.ஐ. வசமிருந்த ஆதாரங்களையும் சேர்த்து அச்சிட்டிருக்கிறார். கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களை இதுபோல புத்தகத்தில் ஓய்வுபெற்ற அதிகாரி வெளியிடலாமா? அதில் ஏதேனும் சட்டச்சிக்கல்கள் இருக்கிறதா என்று தெரியவில்லை.
புலனாய்வில் நடந்த குளறுபடிகள் பலவும் அதிர்ச்சியளிக்கக் கூடியவை. விசாரிக்க நினைத்தவர்களை விசாரிக்க முடியாமல் மேலதிகாரிகளால் புலனாய்வுப் பிரிவினரின் கைகள் கட்டப்பட்டிருந்ததை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறார். சி.பி.ஐ. வசம் இருந்த ஹரிபாபுவின் கேமிராவில் பதிவான போட்டோக்கள், இவர்கள் கைக்கு கிடைப்பதற்கு முன்னரே இந்துவில் வெளியான கூத்தையும் எழுதியிருக்கிறார். ரகோத்தமன் புத்தகம் முழுக்க சுட்டிக்காட்ட விரும்பும் விபரம் என்னவென்றால் இந்திய உளவு அமைப்புகளின் அலட்சியம்.
ராஜீவ் படுகொலையானதுமே பிரதமர் சந்திரசேகர் கேபினட் அமைப்பை கூட்டுகிறார். “யார் செய்தது?” என்று கேட்கிறார். கேபினட்டில் இருந்த சுப்பிரமணியசாமி உடனே விடுதலைப்புலிகள் தான் செய்திருப்பார்கள் என்று ஆணித்தரமாக அடித்துப் பேசுகிறார். ரா தலைவரோ ”I have a mole in LTTE. I am sumre it was not done by LTTE” என்கிறார். விடுதலைப்புலிகளுக்குள் ஊடுருவியிருப்பதாக அவர் குறிப்பிடும் இந்திய உளவாளி யார் தெரியுமா? கிட்டு.
ராஜீவை கொல்ல விடுதலைப்புலிகளுக்கு முக்கிய காரணமாக இருந்தது அமைதிப்படையின் நடவடிக்கைகள் என்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான். விடுதலைப்புலிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஐந்து லட்சரூபாய் அந்த தேர்தலில் நிதியாக கொடுத்தது யாருக்காவது தெரியுமா? படுகொலைக்கு சில வினாடிகள் முன்பாக சின்னசாந்தன் காங்கிரஸ் துண்டினை தோளில் போட்டுக்கொண்டு ராஜீவுக்கு கைகொடுத்ததாவது யாருக்காவது தெரியுமா? – விடுதலைப்புலிகளின் திட்டம் மிகத்துல்லியமானதும், யாராலும் சந்தேகிக்கப்பட முடியாததாகவும் இருந்திருக்கிறது. பத்மநாபா கொலைவழக்கின் போது நடந்த சம்பவங்களும் இன்ச்-பை-இன்ச் ஆக விவரிக்கப்பட்டிருக்கிறது. ஏனோ இவ்வழக்கையும் சேர்த்து விசாரிக்க சி.பி.ஐ. அனுமதிக்கப்படவில்லை.
நூலின் பத்தொன்பதாவது அத்தியாயம் தற்கால தமிழக அரசியலில் அணுகுண்டை வீசவல்லது. வைகோவை குறித்த அத்தியாயம். வைகோ கள்ளப்படகில் இலங்கைக்கு சென்று பிரபாகரனை சந்தித்துப் பேசியபோது எடுத்த வீடியோ காட்சிகள் குறித்து விரிவாக சொல்லப்படுகிறது. சிபிஐ அதிகாரிகள் அந்த காட்சிகளை முழுமையாக பார்த்திருக்கிறார்கள். வைகோ அவரது தலைவர் கலைஞரைப் பற்றிப் பேசும்போதெல்லாம் பிரபாகரன் பேச்சை சாமர்த்தியமாக மாற்றியதைப் பற்றியெல்லாம் விஸ்தாரமாக எழுதுகிறார் ரகோத்தமன். தமிழகத்தில் அத்தனை அரசியல்வாதிகளுக்கு இடையே வைகோவை மட்டுமே பிரபாகரன் முழுமையாக நம்பியதாகவும் சொல்கிறார். இப்படி இருக்கையில் இப்படுகொலை குறித்து வைகோவுக்கு முன்கூட்டியே தெரியாமல் இருக்குமா? என்று கேள்வியும் எழுப்புகிறார்.
மே 21க்கு முன்பாக சிவராசன் தன் குழுவுக்கு கொடுங்கையூரில் கொடுத்த மாட்டுக்கறி விருந்துக்கு வெள்ளுடையில் வந்து சென்றவர் வைகோவின் தம்பி ரவிச்சந்திரன் என்று புத்தகம் ஆணித்தரமாக அடித்துச் சொல்கிறது. இதற்குப் பிறகே ஸ்ரீபெரும்புதூரில் அதே தேதியில் நடக்கவிருந்த கலைஞரின் கூட்டம் ரத்தானதாகவும் தெரிவிக்கிறது. வெள்ளுடையில் வந்து சென்றவரும், சிவராசனும் “அடுத்த சி.எம். வைகோதான்!” என்று பேசிக்கொண்டதாக சின்னசாந்தன் வாக்குமூலமும் கொடுத்திருக்கிறார்.
முன்னதாக இந்திய-இலங்கை உடன்பாட்டை வேண்டாவெறுப்பாக ஏற்றுக்கொண்ட பிரபாகரனை குறித்து, பொதுக்கூட்டம் ஒன்றில் ‘Prabhakaran thought of committing suicide’ என்று வைகோ பேசியதை முன்வைத்து, ராஜீவ் கொலைவழக்கில் வைகோ ஒரு சாட்சியாகவே சேர்க்கப்பட்டிருக்கிறார். 250வது சாட்சியான அவர் நீதிமன்றத்தில் வீடியோவில் இருப்பது நான்தான். ஆனால் குரல் மட்டும் என்னுடையதல்ல என்று பல்டி அடித்திருக்கிறார். பின்னர் தடய அறிவியல் துறையினர் வீடியோவைப் பரிசோதித்து, குரல் வைகோவுடையதுதான் என்று உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் இதுபற்றியெல்லாம் மேம்போக்கான விசாரணையே நடந்தது என்று ரகோத்தமன் வருந்துகிறார். மரகதம் சந்திரசேகரை தவிர்த்து மீதி எல்லோருமே இன்றும் உயிருடன் இருப்பதால், அந்த விசாரணையை இப்போதும் மேற்கொள்ள முடியும் என்று ‘பகீர்’ தகவலையும் கொடுக்கிறார்.
இப்படியாக அதிரடியான தகவல்களுடனேயே சுவாரஸ்யமான க்ரைம் நாவலைப்போல நூல் எழுதப்பட்டிருக்கிறது. ராஜீவ் கொலைவழக்கு என்ற இந்த க்ரைம் நூலிலும் கூட உருக்கமான இரண்டு காதல் கதைகள் உண்டு. ஒன்று ராஜீவோடு மரணமடைந்த போட்டோகிராபர் ஹரிபாபுவின் காதல். மற்றொன்று நளினி முருகன் மீது வைத்திருந்த தெய்வீக காதல்.
ராஜீவ் கொலைவழக்கின் மர்மங்கள் விலகுகிறதோ இல்லையோ, பல மர்ம மனிதர்களின் முகமூடி கிழிகிறது!
கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம்!
ஆம்.
புத்தகக் கண்காட்சி என்ற திருவிழாவைப்பற்றி பேசத் தொடங்கியதில் இருந்தே பேசப்பட்ட புத்தகம் ராஜிவ் கொலை. திருவிழாவின் முதல் நாள் சும்மா ஒரு நடை நடந்து விட்டு வரலாம் என்று போனேன். நடந்தேன். ஆனால் சும்மா வரவில்லை. அந்த எழவை வாங்கித் தொலைத்து விட்டேன். அந்தப் புத்தகமும் என்னை சும்மா விடவில்லை. நாட்டின் மிகப் பெரிய எழவுச் செய்தி தாங்கிய புத்தகம் என்பதாலும் அதை சமன் செய்ய ஒரு இனமே சவங்களானதும் சமீபத்திய பேச்சுகள்.
சுதந்திர இந்தியாவின் மிகப் பெரிய படுகொலைகளாக மூன்றைச் சொல்கிறார்கள்.
1.மோகன் தாஸ்
2.இந்திரா
3.ராஜிவ்
மூன்றிலுமே காந்தி என்ற பெயர் இணைந்திருப்பது ஒரு தற்செயல்.
இதில் காந்தியைக் கொன்றவன் கையில் பொய்ப்பச்சைக் குத்திய விசயம் எல்லாம் ஒரு மணிநேரத்தில் புலப்பட்டு பொல பொலப் புட்டாகிப் போனது. போலவே இந்திராவின் படுகொலைக்கான காரணமும் செய்தவனையும் நாடறியும்.
ஆனால் ராஜிவ் கொலை இன்று வரை மர்மம் தான். என்னதான் புலிகளைக் குறிவைத்துச் சொன்னாலும் ‘துன்பியல்’என்பதோடு நின்று போனது,அதாவது அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை.
இந்தப் புத்தகம் மிக விரிவாகவே மர்மங்களைப் பற்றி பேசி இருக்கிறது.
சிவராசனும் சுபாவும் தணுவும் நம்மிடமே ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் தண்ணீரோ,முகவரியோ அல்லது தியேட்டரில் பக்கத்துச் சீட்டில் அமர்ந்து படமோ பார்த்திருக்கக் கூடுமோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.
சின்ன சாந்தன் பிரபாகரனுக்கு எழுதப்பட்டதாக ஆதாரத்துடன் இருக்கும் அந்தக் கடிதம் மிக முக்கியமாக படிக்க வேண்டிய ஒன்று.
இந்தியா என்ற மிகப் பெரிய நாட்டின் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்களின் அலட்சியங்களைப் படிக்கும் பொழுது, நம் போன்ற கடைநிலை பிரஜைகள் எந்த வித லட்சியமும் அற்ற, அரசு இயந்திரத்திடம் எதையுமே எதிர்பார்க்காத ஒரு வாழ்கையை வாழ்வதே சிறந்தது என்ற எண்ணம் ஏற்படுகிறது. அல்லது கஞ்சா கருப்பு சுப்ரமணியபுரத்தில் சொல்வது போல் ‘இவெங்களுக்கு மத்தில வாழ்வதே பெரிய விசயம்’ என்பதை ஊர்ஜிதப் படுத்துகிறது இப் புத்தகம்.
நாட்டின் மிக முக்கிய ரா அமைப்பின் முக்கியமான பதவியில் இருந்த குப்தாஜி சொல்கிறார்.. ‘எனக்கு விடுதலைப் புலிகளிலேயே உளவாளி இருக்கிறார். அவர் சொல்லி விட்டார் ராஜிவ் கொலைக்கும் புலிகளுக்கும் சம்பந்தம் இல்லை என்று..ஆகவே நீங்கள் வேறு கோணத்தில் கேஸை நடத்துங்கள் என்று’.
அனைவருக்கும் ஆச்சர்யம் ப்ளஸ் குப்தாவின் திறமையை எண்ணி எண்ணி வியந்தும் போனார்களாம்.. அங்கேயே ஆள் வைத்திருப்பது என்றால் சும்மாவா.. அந்த வியப்பு ஒரு நொடிதான்.
கூட்டத்தில் தன் கட்டுச் சோத்தை அவிழ்த்திருக்கிறார் குப்தா..அது
“ஆம். கிட்டுதான் என் உளவாளி” . அனைவரும் எழுந்து நின்று திரும்பி சிரித்திருக்கக் கூடும். நாகரீகம் கருதி அதை நூலாசிரியர் சிரித்தார்கள் என்று சொல்லி விட்டு விட்டார்.
ரா’அமைப்பின் லட்சணத்திற்கு கொஞ்சமும் சோடை போகவில்லை நம்ம ராஜேந்திரன் போன்ற இன்ஸ்பெக்டர்கள். மாலை போட வேண்டிய ஆட்கள் லிஸ்ட்டை பிட்டுப் பேப்பரில் எழுதி வைத்து அதை முடிந்தவரை கசக்கி வேறு வைத்திருந்திருக்கிறார். ஒரு மிகமுக்கிய மனிதரின் வாழ்வில் நிறையபேரின் அலட்சியங்கள் விளையாடி இருப்பது அந்த நிகழ்வைப் படிக்கும் பொழுது தெரிகிறது.
இன்னுமொரு திரும்பிச் சிரிக்க வேண்டிய செய்தி. ராஜிவ் விசாகப் பட்டணத்தில் இருந்து புறப்பட வேண்டிய விமானம் 4:30. ஆனால் அது ஏதோ கோளாறு காரணமாக 6 மணிக்கு புறப்பட்டு இருக்கிறது. இது எதுவுமே தெரியாமல் விரைப்பாக தேவுடு காத்துக்கொண்டிருந்திருக்கிறார்கள் 5:30ல் இருந்து கிட்டத் தட்ட அனைத்து அதிகாரிகளும் சென்னையில்.
ஆனால் மிஸ்டர் சிவராசன் கூலாக தன் பாக்கெட் டயரியில் 4:30 என்று இருந்த நேரத்தை அடித்து 6 என்று எழுதி விட்டு, நேரத்தை விரயமாக்காமல் இருந்திருக்கிறார். தகவல் தொழில் அவர்களுக்கு நுட்பமாக இருந்திருக்கிறது. நம் அதிகாரிகள் அதை தொழிலுக்குக்கான தகவலுக்குக் கூடப் பயன்படுத்தவில்லை. வேதனை.
காதல். ஆக்கவும் அழிக்கவும் செய்யும். எதை வேண்டுமானாலும் செய்யும். ஆம். முருகன் என்ற நபரின் காதல் வார்த்தைகள் மட்டுமே நளினி என்றப் பெண்ணை அடிமையாக்கி, அவர் சொன்ன எல்லாவிதத்திலும் துணை புரிந்து இந்தப் படுகொலைக்கான மிக முக்கிய காரணியாக செயல்படுத்தி இருக்கிறது. நடுவில் முருகன் இல்லை என்றானவுடன், எதையும் செய்யமுடியாது என்று நளினி மறுத்தவுடன் மீண்டும் காதலையும் முருகனையும் இயக்கி, திட்டம் செயல்படுத்தப் பட்டது மிகக் குறிப்பிடத் தக்கது. இயக்குனர் மணிரத்தினம் பாணியிலான இயக்கம் அது. காதல் மூலம் வன்முறை.
இப்படி நிறைய நிகழ்வுகள் போய்க்கொண்டே இருக்கிறது.
ஹரிபாபுவின் கேமரா ஆங்கிளில் தான் கேஸே துவங்குகிறது. துலக்கப்படுகிறது. (ஹரிபாபுவின் அம்மா கையில் இருந்து டீக்கடைக்கு அனுப்பட்ட நூறு ரூபாய் நோட்டை நோட்டம் விட்ட சிபிஐக்கு ஒரு சபாஷ்.)
இடம் பெற்றிருக்கும் கடிதங்களையும், சொல்லப்பட்ட சம்பங்களையும், பங்கு கொண்ட மனிதர்களையும் படித்ததில் இருந்து…
இந்தப் பத்தியின் தலைப்புதான்..ஆம் அநியாயம் செய்துவிட்டது கிழக்குப் பதிப்பகம். யாரைப் பார்த்தாலும் ஒருவித பதட்டமும் சந்தேகமும் வருகிறது இந்த மூன்று நாட்களாக. சக மனிதர்கள் ஏதாவது சகஜமாகப் பேசினாலும் பயமாகவே இருக்கிறது. ஏனெனில் இந்தப் படுகொலை அவ்வளவு சகஜமாக நிகழ்த்தப் பட்டிருக்கிறது. அதனால்தான் சகமனித மீதான நம்பிக்கையைக் குறைத்துவிட்டு அநியாயம் செய்துவிட்டது கிழக்கு பதிப்பகம்.
இன்னும் நிறைய விசயங்கள் எழுதிக் கொண்டே போகலாம் இந்த புத்தகத்தின் பாதிப்பில் இருந்து…
ஒரே ஒரு முக்கிய பாதிப்பு… இந்தியா என்ற தேசம் அலட்சியத்தை மட்டுமே லட்சியமாகக் கொண்ட நாடு. இங்கே ரி ஆக்ஷன்கள் மட்டுமே நிகழ்த்தப் படுகின்றன. ப்ரோ ஆக்ஷன்களுக்கு இடமில்லை.
முடிந்தால் படியுங்கள் என்றெல்லாம் சொல்லாமல் நிச்சயமாகப் படியுங்கள் என்றே சொல்லத் தோன்றுகிறது.
அக்டோபரில் பேசி, ஜனவரியில் நாள் குறித்து மே மாதத்தில் முடித்த திட்டம் போலவே மிக வேகமாக நகர்கிறது புத்தகப் பக்கங்களும்.
ராஜிவ்..இந்தியாவை பதினைந்து வருடங்கள் பின்னோக்கி இழுக்கப்பட்ட மரணம் என்றே தோன்றுகிறது. அவர்தான் கம்ப்யூட்டர் புரட்சியைக் கொண்டுவந்தவர். அவர் இறந்த அன்று உபயோகித்த மடிக்கணினி இந்தியச் சந்தைக்கு வந்த ஆண்டு 2003. பத்து வருடம் முன்னோக்கி வாழ்ந்த ஒரு தலைவரின் இழப்பு நாட்டின் முன்னேற்ற இழப்பு என்பது என் தனிப்பட்டக் கருத்து.
புத்தகத்தில் சிலருக்கு முரண்பாடான விமர்சனங்கள் இருந்தாலும் என்ன நடந்தது என்பதைப் படிக்கும் பொழுது கொஞ்சம் ஆத்திரமும் நிறைய ஆதங்கமும் ஏற்படுவது நிச்சயம்..
“என்னுடைய சென்னைப் பயணத்தில் ஸ்ரீபெரும்புதூரைச் சேர்க்கவில்லையே நீங்கள்..சேர்த்துவிடுங்கள் நான் அவசியம் அங்கு போக வேண்டும்”
சிரித்துக்கொண்டே ராஜிவ் தன் செக்கரட்டரிக்கு எழுதிய கடைசிக் குறிப்பாம் அது.
பாவமாக இருக்கிறதா? ஹும்.
புத்தகம் : ராஜிவ் கொலைவழக்கு, மர்மம் விலகும் நேரம்
பதிப்பகம் : கிழக்கு
ஆசிரியர் : ராகவ.. ஸாரி, ரகோத்தமன்
விலை : அதிகாரிகளின் அலட்சியமும் ராஜிவின் உயிரும்
ஆம்.. இந்தப் புத்தகத்தில் இருந்து இன்னுமொரு அலட்சியம்.
இந்திரா காந்திக்கு உளவுத்துறை ஒரு செய்தி அனுப்பியதாம். ‘சீக்கியர்களால் உங்களுக்கு ஆபத்து இருக்கிறது. உங்கள் காவலர்களை மாற்றி விடுங்கள்’ உடனே மாற்றவும் செய்தாராம். கடுப்பான ஒரு ஒரு சீக்கிய அதிகாரி, “எங்களை அவமானப் படுத்தி விட்டீர்கள் மிஸ்டர் எஸ்.பி.சவான்”என்றதும் ஏதோ மாமியார் மருமகள் சண்டை போல் அதை பாவித்து மிஸ்டர் எஸ்.பி.சவான் உடனே ‘மீண்டும் சீக்கிய காவலர்களையே நியமியுங்கள்’ என்று உத்தரவிட்டாராம். அதன் பிறகு நடந்தது வரலாறு.
நன்றி : http://www.narsim.in/2010/01/blog-post_07.html
ராஜிவ் கொலை தமிழகத்தையே உலுக்கிய ஒரு நிகழ்வு. அதன் விளைவு, அடுத்த 19 ஆண்டுகள் கழித்தும்கூட இலங்கைப் பிரச்னையில் இந்தியாவின் நிலைப்பாட்டை ஒரு குறிப்பிட்ட திசையில் செலுத்தியது.
ராஜிவ் கொலையைப் புலனாய்வு செய்த சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவராக இருந்தவர் டி.ஆர்.கார்த்திகேயன் (ஐ.பி.எஸ்) என்ற தமிழர். தலைமைப் புலனாய்வு அதிகாரியாக இருந்தவர் அப்போது டி.எஸ்.பி ரேங்கில் இருந்த சிபிஐ அதிகாரி கே.ரகோத்தமன் என்ற தமிழர்.
கார்த்திகேயன் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். அதைப் படித்து நான் எழுதிய பதிவு இங்கே. ஒருமுறை புது தில்லியில் கார்த்திகேயனை அவரது வீட்டில் சந்தித்து நானும் சத்யாவும் பேசிக்கொண்டிருந்தோம். கொலை எப்படித் துப்பறியப்பட்டது முதற்கொண்டு பல விஷயங்களைப் பற்றிப் பேசினோம். இந்தப் புத்தகத்தின் தமிழாக்க உரிமையைக் கேட்டோம். அதற்குள் அவர் கலைஞன் பதிப்பகத்துக்கு அந்த உரிமையைத் தந்திருந்தார். சில மாதங்கள் கழித்து நண்பர் (கிழக்கின் எழுத்தாளர்) சந்திரமௌளியின் மொழிபெயர்ப்பில் அந்தப் புத்தகம் தமிழில் கலைஞன் வெளியீடாக வெளியானது.
ராஜிவ் கொலை பற்றி எழுதப்பட்ட மற்றொரு புத்தகம் சுப்ரமணியம் சுவாமியுடையது. அதன் தமிழாக்கம் சுதாங்கனால் செய்யப்பட்டு அல்லயன்ஸ் வெளியீடாக வந்தது. அந்தப் புத்தகத்தைப் பற்றி நான் எழுதிய பதிவுகள் இங்கே + இங்கே. சமீபத்தில் (ஜூன்/ஜூலை 2009) சுப்ரமணியம் சுவாமியுடன் பேசும்போது அவர் இந்தக் கொலை தொடர்பாகப் பல யூகங்களைச் சொன்னார். அவை பொதுவில் எழுத முடியாதவை. அவரே வேண்டுமானால் அதைப்பற்றி எழுதலாம்.
சந்திரமௌளி மூலமாகத்தான் ரகோத்தமன் அறிமுகமானார். இரண்டு வருடங்களுக்கு முன்னால் என்று நினைக்கிறேன். அப்போது அவர், ராஜிவ் கொலை பற்றி ஒரு குறுந்தகடு வெளியிட்டிருந்தார். புத்தகம் எழுதமுடியுமா என்று கேட்டிருந்தேன். அதைப்பற்றி மேலோட்டமாகப் பேசியிருப்போம். ஆனால் அப்போது எதுவும் நடக்கவில்லை. (ஏன் என்று பின்னர்தான் காரணம் தெரிந்தது.) அடுத்து ரகோத்தமனிடம் பேசியது ஜூன் 2009-ல்தான்.
அலுவலகம் வந்திருந்தவர் ராஜிவ் கொலை வழக்கு பற்றி நிறையப் பேசினார். மடைதிறந்த வெள்ளம் போலப் பேசினார். நான், சத்யா, பிரசன்னா அறையில் இருந்தோம். கார்த்திகேயனின் புத்தகம் பற்றியும் பேசினார். அதில் பல தகவல்கள் இல்லை என்றார். சில முரண்பாடுகள் இருந்தன என்றார். ஒரு புலனாய்வு அதிகாரியாக, களத்தில் இருந்து பார்த்தவராக, அவருக்குப் பல விஷயங்கள் தெரிந்திருந்தன. அப்போதுதான் அவர் ஏன் ஒரு புத்தகத்தை எழுதக்கூடாது என்று கேட்டோம். அவரிடம் அனைத்து ஆவணங்களும் இருந்தன. விரல் நுனியில் தகவல்கள் இருந்தன. எந்த நாள், எந்த நேரம், எந்த இடத்தில் யாரைக் கைது செய்தார் என்று பட்டென்று சொன்னார்.
கடைசியில் புத்தகம் எழுதுவதாக ஒப்புக்கொண்டார். கடுமையாக உழைத்தார். எங்கள் அலுவலக எடிட்டோரியலைச் சேர்ந்த எடிட்டர்கள், ரகோத்தமனின் சிந்தனை எழுத்தாக மாற உதவினர். ரகோத்தமனின் தலையில் சிதறிக்கிடந்த பல தகவல்களையும் ஒழுங்குசெய்து, நேராக்கி, எளிமையாகப் புரியும்வண்ணம் சீர்செய்யவேண்டியிருந்தது. கடைசி நேரம் வரை எடிட்டர்கள் புத்தகத்தைப் படித்து, பல மாற்றங்களைச் சொல்லிக்கொண்டிருந்தனர். ஒவ்வொரு வெர்ஷனுக்கும் பிறகு ரகோத்தமனுக்குப் புதிதாக சில விஷயங்கள் தோன்றும். அதைச் சேர்ப்பார். கடைசியில் ஒரு கட்டத்தில் இது திருப்தியாக உள்ளது என்று அவர் முடிவெடுத்தார். சில சென்சிடிவான விஷயங்கள் இருந்தன. அவையெல்லாம் கண்டிப்பாக இடம் பெறவேண்டும் என்றார். என்ன பிரச்னை என்றாலும் தான் சமாளித்துக்கொள்வதாகக் கூறினார். வார்த்தைகள் சரியாக வரவேண்டுமே, சொல்லும்போது தொனி சரியாக இருக்கவேண்டுமே என்று நிறைய கவனம் எடுத்துக்கொள்ளவேண்டியிருந்தது.
அவரிடம் அனைத்து விசாரணை கமிஷன் ஆவணங்கள், வாக்குமூலங்கள், கடிதங்கள், துண்டு துணுக்குகள் என்று ஏகப்பட்ட தகவல்கள் இருந்தன. குவிந்துகிடந்த ஆவணங்களிலிருந்து சிலவற்றை மட்டும் புத்தகத்தில் சேர்ப்பது என்ற முடிவுக்கு வந்தோம். சில கடிதங்கள், விடுதலைப் புலிகள் பயன்படுத்திய வயர்லெஸ் சங்கேத சமிக்ஞைகள், சில படங்கள் போன்றவை.
கடைசியாக புத்தகம் அச்சாகி வந்துவிட்டது. கடைகளுக்கு அடுத்த ஓரிரு நாள்களில் செல்லும். திங்கள் முதலே சில கடைகளில் கிடைத்துவிடலாம்.
படிப்பவர்கள் யாருமே புத்தகத்தைக் கீழே வைக்கமுடியாது என்று என்னால் அடித்துச் சொல்லமுடியும். புத்தகத்தில் அதிர்ச்சிகரமான விஷயங்கள் உள்ளனவா, இதனால் தமிழகத்தில் சர்ச்சைகள் ஏற்படுமா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. படிப்பவர்கள் தாங்களே முடிவு செய்துகொள்ளட்டும்.
நன்றி : http://thoughtsintamil.blogspot.com/2009/12/blog-post_10.html
ராஜீவ் காந்தி கொலை: விடை தெரியாத வினாக்கள் ! விடுபடாத புதிர்கள் !!
தமிழன் எக்ஸ்பிரஸ் வார ஏடு 1997 ஆண்டு நவம்பர் 19ம் தேதியிட்ட இதழில் யாருக்காக ராஜீவ் கொலை செய்யப்பட்டார்? விடை தெரியாத திடுக்கிடும் கேள்விகள்…. என்று சுதாங்கன் எழுப்பிய கேள்விகளுக்கு இது வரை விடை கிடைக்கவில்லை. தமிழன் எக்ஸ்ப்ரஸில் வெளி வந்த கட்டுரை இதோ:
நாடு முழுவதும் இன்று ஜெயின் கமிஷன் மீதே கவனம் செலுத்துகிறது. அதே சமயம் பூந்தமல்லியில் ராஜீவ் கொலை வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைகள் முடிந்து விட்டன. இந்த நீதிமன்றத்தின் நீதிபதி, ‘வழக்கின் தீர்ப்பு 1998 ம் ஆண்டு ஜனவரி 28 அன்று வழங்கப்படும்’ என்று அறிவித்திருக்கிறார். ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 26 பேரும், தேசத்தின் குடிமக்களும் இந்தத் தீர்ப்பை எதிர்நோக்கி ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த வழக்கில் குற்றவாளிகளின் சார்பில் எதிர்தரப்பு வாதம், 50 நாட்கள் நடைபெற்றது. ரகசியமாக நடந்த இந்த வாதங்களின் பல முக்கியப் பகுதிகள் தமிழன் எக்ஸ்பிரஸுக்குக் கிடைத்தன. சொல்லப்படாத பல பின்னணிக் கதைகளை வாசகர்கள் முன் கொண்டு வருகிறோம். குற்றம் சுமத்தப்பட்டவர்கள், ராஜீவ் கொலையை விசாரித்த விசேஷ புலனாய்வுத் துறை அதிகாரிகள், அரசு வழக்கறிஞர்கள் ஆகியோர் முன்னிலையில் தமிழக போலீஸின் பாதுகாப்புடன் எதிர்தரப்பு வாதம் நடந்தது. 1993 ம் ஆண்டு தொடங்கிய இந்த வழக்கு, 50 மாதங்கள் நடந்தது. 288 சாட்சியங்கள், 3000 அரசுத்தரப்பு ஆவணங்கள், 1000 எதிர்தரப்பு ஆதாரங்கள் ஆகிய அனைத்தும் நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டன. எதிர்தரப்பு வாதத்தில் எழுந்த பல கேள்விகளுக்கு விடையில்லை.
சிறப்பு புலனாய்வுத் துறையின் இந்த விசாரணைகள், அதிகாரத்திலுள்ளவர்களின் அன்பைப் பெறும் வகையில் தான் நடந்தது என்று சந்தேகப்பட வைக்கிறது. ராஜீவ் கொலை ஒரு வி.ஐ.பி.யின் மரணம் மட்டும் அல்ல; தேசத்தை சிதறச் செய்யும் மிகப் பெரிய சதி. பல அந்நிய சக்திகள் இந்தப் பரந்த தேசத்தைக் கட்டியாள நினைக்கும் தந்திரம். அதனாலேயே இந்த வழக்கிலுள்ள பல திடுக்கிடும் சம்பவங்கள், விசாரணையின் ஓட்டைகள் ஆகியன நமக்குத் தெரிய வேண்டியது மிக முக்கியம்.
இந்த விசாரணையில் எதிர்தரப்பு வாதங்களைத் தொடக்கி வைத்தவர் மூத்த வழக்கறிஞரான துரைசாமி. ஆழ்ந்து கவனித்துக் கொண்டிருந்த அந்த நீதிமன்ற அறையில் விசேஷ புலனாய்வுத் துறையின் ‘முன் ஜோடிப்பு கதைகளை’ போட்டு உடைத்தாராம் துரைசாமி. அதேபோல் எதிர்தரப்பு வழக்கறிஞர் ராமதாஸும் தன் 11 நாட்கள் வாதத்தில் குற்றப் பத்திரிகையில் புனையப்பட்டுள்ள பல கற்பனைக் கதைகளை சாட்சியங்களோடு வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார்.
இந்த எதிர்தரப்பு வாதங்களின் க்ளைமாக்ஸாக அமைந்தது வழக்கறிஞர் சந்திரசேகரின்
இப்படி ஐம்பது நாட்கள் நடந்த எதிர்தரப்பு வாதங்கள் பல கேள்விகளை எழுப்பியிருக்கின்றன. இதோ அந்த விடை கிடைக்காத
கேள்விகள்: கடும்வாதம். ஆதார பூர்வமாகவும், உணர்ச்சிகரமாகவும் பேசிய சந்திரசேகர், விசேஷ புலனாய்வுத்துறை ஏற்கனவே முடிவு செய்து தங்கள் முடிவுகளுக்கு ஏற்ப வழக்கை ஜோடித்ததாக கடுமையாகக் குற்றம் சாட்டினார். ‘நான் கேட்கிற சாட்சியங்களை புலனாய்வுத்துறை காட்டிவிட்டால் என் கட்சிக்காரர்கள் தாங்கள் குற்றம் செய்ததாக தாங்களே முன்வந்து ஒப்புக் கொள்வார்கள்’ என்று கூட சவால் விட்டார்.
1. 1991 ம் வருடம் மே மாதம் 21 ம் தேதி டெல்லியிலிருந்து தேர்தல் பிரச்சாரத்திற்குக் கிளம்பினார் ராஜீவ் காந்தி. அவர் ஒரிசா, ஆந்திரா வழியாக சென்னை வந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிகழ்ச்சி நிரலில் இல்லாத ஸ்ரீபெரும்புதூரில் நள்ளிரவுக் கூட்டத்தில் கலந்துகொள்ள அவர் எப்படி ஒப்புக் கொண்டார்?
2. ஸ்ரீபெரும்புதூருக்கு ராஜீவை எப்படியாவது வரவழைத்துவிட வேண்டும் என்று எங்காவது திட்டம் தீட்டப்பட்டதா?
3. புவனேஷ்வர், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் ராஜீவ் பிரச்சாரத்திற்கு சென்றபோது அவருடன் இருந்தவர் பாதுகாப்பு அதிகாரி ஓ.பி. சாகர். ஆனால் அவர் சென்னைக்கு ராஜீவுடன் வரவில்லை ஏன்?
4. பல்கேரிய நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சிப் பத்திரிகையாளர்கள் ராஜீவ்காந்தியின் சுற்றுப் பயணத்தில் உடன் வந்தார்கள்.
அவர்களுடைய வேலை, ராஜீவ் பிரச்சாரத்தை வீடியோவில் பதிவு செய்வது. ஒரிஸாவிலும், ஆந்திராவிலும் ராஜீவ் செய்த முதல்கட்ட சுற்றுப் பயணத்தில் கலந்துகொண்ட அவர்கள், ராஜீவ் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டங்களுக்கு செல்லவில்லை. அவர்கள் பயணம் செய்த விசேஷ விமானத்தின் பைலட்டுடன் விசாகப்பட்டினத்தில் ஒரு ஆடம்பர ஹோட்டலில் தங்கியிருந்தார்கள். அப்படியானால் அவர்கள் உடன் வந்த காரணம் என்ன?
5. ராஜீவ் கிளம்புகிற விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. உடனே விமான நிலையத்திலிருந்து சர்க்யூட் ஹவுஸுக்குத் திரும்பினார் ராஜீவ். கோளாறு சரிசெய்யப்பட்டுவிட்டது என்கிற தகவல் அப்போதைய ஆந்திர முதல்வர் விஜயபாஸ்கர ரெட்டி மூலமாக கிடைத்தவுடன் விமான நிலையம் திரும்பினார் ராஜீவ். இந்தக் குழப்பத்தில் இந்த இரண்டு பல்கேரிய நாட்டு பத்திரிகையாளர்கள், பாதுகாப்பு அதிகாரி சாகரை தங்கள் காரில் ஏற்றிக் கொண்டு தாமதமாக விமான நிலையத்துக்கு வந்தார்கள். இதனால் ராஜீவுடன் விமானத்தில் பயணம் செய்ய சாகரால் முடியவில்லை. அனுபவம் மிக்க அந்தப் பாதுகாப்பு அதிகாரியை ராஜீவுடன் போகவிடாமல் செய்தது ஏன்?
6. சென்னையில் ராஜீவின் பாதுகாப்பு அதிகாரியாக செல்லவேண்டிய பி.சி.குப்தா, சென்னை விமான நிலையத்தில் ராஜீவுக்காக காத்திருந்தார். அதே விமானத்தில் வந்திருக்க வேண்டிய சாகரிடமிருந்து கைத்துப்பாக்கியை அவர் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் சாகர் வராததால் கைத்துப்பாக்கி இல்லாமலேயே குப்தா, ராஜீவுடன் செல்ல நேர்ந்தது. இதற்கு ஏதாவது உள்நோக்கம் உண்டா?
7. ராஜீவ் மீனம்பாக்கத்திலிருந்து கிளம்பியவுடன் ராமாவரம் தோட்டம் அருகே
பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் இரண்டு பெண்கள் அவர் காரில் ஏறினார்கள். அவர்களுடைய அடையாளங்கள் சோதனைக்குள்ளானதா? இன்றுவரை அவர்களை ஏன் விசேஷப் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை?
8. யார் அந்த பல்கேரியர்கள்? அவர்கள் எங்கு சென்றார்கள்?
9. யார் அந்த இரண்டு அயல்நாட்டு பெண் பத்திரிகையாளர்கள்? அவர்கள் எங்கு சென்றார்கள்?
10. அந்த இரண்டு பத்திரிகையாளர்களும் ராஜீவை பேட்டி கண்டார்கள். ஆனால் தா. பாண்டியனும், மரகதம் சந்திரசேகரும் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது தெரியாது என்றார்கள். இவர்கள் எதை மறைக்க முயலுகிறார்கள்? ஏன்?
11. தான் கொலை செய்யப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, பாகிஸ்தான் ஜனாதிபதி ஜியா-உல்-ஹக்கை கொன்றது சி.ஐ.ஏ.தான் என்றார் ராஜீவ். அவர் ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்? அவரை சொல்லத் தூண்டிய காரணம் என்ன? தனக்கெதிராகவும் இப்படி ஒரு திட்டம் இருக்கலாம் என்பது அவருக்கு முன்கூட்டியே தெரியுமா?
12. 1991 ஜுலை மாதம் அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் எஸ்.பி. சவான், எல்.டி.டி.ஈ.யைத் தவிர வேறு சில சர்வதேச நிறுவனங்களும், பலம் வாய்ந்த வெளிநாட்டு சக்திகளும் ராஜீவ் கொலையின் பின்னணியில் இருக்கிறார்கள் என்றார்.
13. உள்துறை அமைச்சர் அப்படி சொல்லக்காரணம் என்ன என்பதை விசேஷ புலனாய்வுத்துறை ஏன் விசாரிக்கவில்லை?
14. வளைகுடா போரின்போது அமெரிக்க விமானங்களுக்கு இந்தியா எரிபொருள் கொடுத்து உதவியது. இந்த உதவியைச் செய்த சந்திரசேகர் அரசைக் கடுமையாகக் கண்டித்தார் ராஜீவ் காந்தி. அமெரிக்காவிற்கு இதனால் ராஜீவ் மீது ஏற்பட்ட கோபத்தையும், இந்தக் கொலையின் பின்னணியில் சி.ஐ.ஏ.வுக்கு பங்கு உண்டா என்பதையும் ஏன் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை?
15. பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் அராபத், ‘ராஜீவ் உயிருக்கு ஆபத்து இருக்கிறது’ என்று அன்றைய பிரதமர் சந்திரசேகரிடம் தெரிவித்தார். ‘அவருக்கு இந்தத் தகவல் எங்கிருந்து கிடைத்தது? யார் மூலமாக ராஜீவுக்கு மிரட்டல்?’ என்பதை ஏன் புலனாய்வுத் துறை
விசாரிக்கவில்லை?
16. மேற்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் கொலைக்கான திட்டம் தீட்டப்பட்டிருந்தால் மட்டுமே அரபாத்திற்கு இந்தப் பின்னணி தெரிய வாய்ப்புண்டு.
17. மரகதம் சந்திரசேகர் ராஜீவ் காந்தியுடன் கூட்டம் நடந்த இடத்திற்கு வந்தார். அவருடைய மகள் லதா பிரியகுமார் தன் கணவருடனும் வழக்கறிஞர் மகேந்திரனுடனும் அரக்கோணத்திலிருந்து வந்தார். அவரது மகன் லலித் சந்திரசேகர் மனைவி வினோதினியுடன் எங்கிருந்து வந்தார் என்பதை விளக்கவேயில்லை. வினோதினி இலங்கையைச் சேர்ந்த ஜூனியஸ் ஜெயவர்த்தனாவின் மகள் என்பது தெரிந்தும் அவரை ஏன் விசாரிக்கவில்லை? சம்பவ இடத்தில் அந்தக் குடும்பத்தினர் இருந்தும் அவர்களை ஏன் விசாரிக்கவில்லை?
18. சிவராசனின் தாயாரும், வினோதினியின் தந்தையும் சிங்களவர்கள் தான். சம்பவ இடத்தில் அவர்கள் இருந்தார்கள். அவர்கள் இலங்கை ஜனாதிபதி பிரேமதாஸாவின் தூதுவர்களாக இருக்க வாய்ப்புண்டு. இந்திய அமைதிப்படை விவகாரத்தில் பிரேமதாஸாவுக்கு ராஜீவ் மீது கோபம் உண்டு. அந்தக் கோணத்தில் ஏன் விசாரணை செய்யப்படவில்லை?
19. விடுதலைப் புலிகள், இலங்கை அரசு இரண்டுக்கும் ஒரு விஷயத்தில் ஒற்றுமை உண்டு. இந்திய அமைதிப் படை இலங்கையில் நுழையக் காரணமாக இருந்த ராஜீவ் மீது இரு தரப்பினருக்கும் கோபமுண்டு. இந்த விஷயத்தில் எதிர்தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர் விசேஷப் புலனாய்வுத் துறைக்கு ஒரு சவால் விட்டார். ‘வினோதினியின் பூர்வீகம் என்ன? அவரும், அவர் குடும்பத்தினரும் அப்பாவிகள் என்பதை நிரூபித்தால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருமே தானாகவே தங்கள் குற்றத்தை ஒப்புக் கொள்வார்கள் என்றார். இறுதிவரை அவர் சவால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் விசாரிக்கப்படவும் இல்லை.
20. காமினி திசநாயகா, அத்துலத்முதலி, விக்கிரமசிங்கே இவர்கள் எல்லாம் இலங்கையின் முக்கிய அரசியல்வாதிகள். இவர்கள் கொலை செய்யப்பட்ட போது அந்தப் பழி இலங்கை அதிபர் பிரேமதாஸாவின் மீது சுமத்தப்பட்டது. ராஜீவ் விஷயத்தில் ஏன் அந்தக் கோணத்தில் விசாரணை இல்லை?
21. சிவராசன், தனு, சுபா ஆகியோர் ஒரு அந்நிய சக்தியின் தூண்டுதலால் ஏன் இந்தக்
கொலையை செய்திருக்கக் கூடாது? அந்த மூவரும் யாழ்ப்பாணத் தமிழர்கள் என்பதால் மட்டுமே அவர்களைப் புலிகளுடன் தொடர்புபடுத்தி விசாரணையை முடித்துவிட்டார்களா?
22. புலிகளையும், அதன் தலைவர் பிரபாகரனையும் சம்பந்தப்படுத்த என்ன பலத்த ஆதாரம் புலனாய்வுத் துறையிடம் உள்ளது?
23. பிரபாகனும், சிவராசனும் ரேடியோ மூலம் பேசியதை விசேஷப் புலனாய்வுத் துறை கேட்டதாகச் சொல்லப்படுவது ஏன் ஒரு கற்பனையான ஆதாரமாக இருக்கக்கூடாது?
24. ‘விசேஷ’ இலட்சியமுள்ள அரசியல்வாதிகள், ஏன் அவரது காங்கிரஸ் தோழர்களே கூட தங்கள் வளர்ச்சிக்கு ராஜீவ் தடையாக இருக்கிறார் என்பதால் கூலிப்படையினரை ஏவிவிட்டு ஏன் இந்தக் காரியத்தை செய்திருக்கக்கூடாது?
25. பல்வேறு நாட்டு ஆயுத வியாபாரிகள், பிரதமர் என்கிற முறையில் ராஜீவுடன் தொடர்பு வைத்திருந்தார்கள். கூலிப்படைகள் மூலமாக அவர்கள் ஏன் இந்தக் காரியத்தை செய்திருக்கக்கூடாது?
26. மறுபடியும் அமைதிப்படை தங்கள் நாட்டில் நுழையலாம் என்கிற எண்ணத்தில்
இந்தியாவுக்கு வலுவான தலைவர் இருக்கக்கூடாது என்று இலங்கை அரசு ஏன் நினைத்திருக்கக்கூடாது?
27. மூன்றாவது உலக நாடுகளின் தலைவர்களை அப்புறப்படுத்துவதில் சி.ஐ.ஏ. வுக்கு அதிக அக்கறை உண்டு. அந்த எண்ணம் ராஜீவ் விஷயத்தில் இருந்ததா?
29. வாழப்பாடி ஏற்றுக் கொள்ளவில்லை. மூப்பனார் அக்கறை காட்டவில்லை. ஆனால் மரகதம் சந்திரசேகர் மட்டும் டெல்லி சென்று ஏன் ஸ்ரீபெரும்புதூருக்கு வரவேண்டும் என்று ராஜீவை வற்புறுத்தினார்? தன்னை அறியாமல் சிக்கி ராஜீவ் மரணப்படுக்கையில் விழக் காரணமாகி விட்டாரா?28. புலிகளின் ‘இந்துத்துவா’ அபிமானம், இலங்கைத் தமிழர்களுக்கு உண்டான இந்து வெறி இரண்டையும் பயன்படுத்தி ஆர். எஸ்.எஸ். பிஜேபி இலங்கைத் தமிழர்கள் மூலமாக ஏன் இந்தக் காரியத்தை செய்திருக்கக்கூடாது? அவர்கள் ஆட்சியைப் பிடிக்க தடையாக இருக்கும் ஒரே தலைவர் ராஜீவ் தான். மகாத்மாவைக் கொன்றவர்கள் ஏன் ராஜீவைக் கொன்றிருக்கக்கூடாது?
30. யார் இந்த பொட்டு அம்மான்? இப்படி ஒரு நபர் இருக்கிறாரா? அம்மான் ஒரு மூத்த தலைவர். ஒரு போரில் இறந்துவிட்டார். பொட்டு மட்டுமே உள்ளார் என்கிறது எல்.டி.டி.ஈ. வட்டாரம். உயிருடன் இல்லாத ஒரு நபரை எப்படி இரண்டாவது குற்றவாளியாக புலனாய்வுத்துறை முத்திரை குத்தியது?
31. பத்மநாபா கொலை வழக்கையும், இந்த வழக்கையும் ஒப்பிட்டால் பல உண்மைகள் வெளிவருகின்றன.
தமிழ்நாடு காவல்துறையின் ‘க்யூ’ பிராஞ்ச், பத்மநாபா வழக்கை விசாரித்தது.விசேஷப் புலனாய்வுத்துறை, ராஜீவ் கொலை வழக்கை விசாரணை செய்தது. இரண்டு விசாரணை அமைப்புகளும் சதி நடந்த இடம் யாழ்ப்பாணம் என்கின்றன. பத்மநாபா வழக்கில் குற்றவாளிகளில் சிவராசன். ராஜீவ் வழக்கில் அவர் முக்கிய குற்றவாளி. அப்படியானால் ராஜீவ் கொலையில் குற்றவாளியாகக் கருதப்பட்ட பிரபாகரன் பத்மநாபா வழக்கில் ஏன் குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை? ஆகவே பிரபாகரன் பெயரை நுழைப்பது அரசியல் முடிவே தவிர விசாரணையினால் கிடைத்த தெளிவே அல்ல. கடும் உள்நோக்கத்துடன் வழக்கிற்கு உயிர்கொடுக்க புலனாய்வுத்துறை செய்த முயற்சி இது.
32. விமான நிலையத்தில் ராஜீவை சந்தித்தார் கவிஞர் காசி. ஆனந்தன். அவர் பிரபாகரனிடமிருந்து ராஜீவுக்கு கொண்டு வந்த தகவல் என்ன? ‘ஈழ விடுதலைக்கு ராஜீவின் உதவி தேவை’ என்று பிரபாகரன் காசி ஆனந்தன் மூலமாக வேண்டுகோள் விடுத்திருந்தால் ஏன் அவரை பிரபாகரன் கொலை செய்ய வேண்டும்?
33. இந்தியா மற்றும் தமிழகத்தில் தான் தனக்கு அனுதாபமும், ஆதரவும் கிடைக்கும் என்பது பிரபாகரனுக்கு தெரியும். அப்படியிருக்கும்போது இந்த மக்களின் வெறுப்பை சம்பாதிக்கிற தவறைச் செய்து, நாட்டைவிட்டே துரத்தப்பட்டு தடை செய்யப்படுகிற அளவுக்கான முட்டாள் தனத்தையா பிரபாகரன் செய்தார்?
34. லதா கண்ணன், ராஜீவ் காந்தியை நிறுத்தி கவிதை படித்தார். அதுவே பக்கத்திலிருந்த தனு என்கிற மனிதகுண்டு வெடிக்கக் காரணமாக இருந்தது. ஏன் அவர் பெயர் குற்றவாளிப் பட்டியலில் இல்லை? லதா கண்ணனை பயன்படுத்தித்தான் தனு உள்ளே வந்தார். இறந்து போன ஹரிபாபு குற்றவாளி என்றால் லதா கண்ணனை ஏன் சேர்க்கவில்லை? காங்கிரஸ் மற்றும் அதன் தொண்டர்களின் மீது புலனாய்வுத் துறைக்கு ஏன் இத்தனை பரிவு?
35. ஸ்ரீபெம்புதூருக்கு செல்லும் முன் இரண்டு தெருமுனைக் கூட்டங்களில் பேசினார் ராஜீவ். அந்தக் கூட்டங்களில் மேடை வரை உடன் வந்தார் வாழப்பாடி ராமமூர்த்தி. ஸ்ரீபெரும்புதூரில் மட்டும் ஏன் தொலை தூரம் தள்ளிப்போனார்?
36. அப்பாவிப் பொதுமக்கள், பாதுகாப்பு அதிகாரிகள் பலர் ராஜீவுடன் உயிரிழந்தார்கள். ஆனால் காங்கிரஸ் தொண்டர் ஒருவருக்கும் இலேசான காயம் கூட இல்லையே. அது ஏன்?
37. தனு, சுபா, சிவராசன் மூவரையும் ஸ்ரீபெரும்புதூருக்கு அழைத்து வந்தவர் லதா பிரியகுமார் என்று கருதப்படுகிறது. குறிப்பாக பெண்கள் பகுதிக்கு அழைத்து வந்து லதா கண்ணனிடம் அவர்களுக்கு உதவும்படி சொன்னார். அவர் மீது ஏன் குற்றம் சுமத்தப்பட வில்லை?
38. பிரபாகரன், சிவராசன் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட பழைய படத்தை வைத்துக் கொண்டு பிரபாகரனுக்கு இதில் தொடர்பு உண்டு என்று எப்படிச் சொல்லலாம்?
39. தனு, சுபா, சிவராசன் மூவரும் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, மேற்கத்திய, ஐரோப்பா, இந்தியா கூலிப்படையின் கையாட்களாக ஏன் ஆகியிருக்கக்கூடாது?
40. மார்கரெட் ஆல்வாவின் வேண்டுகோளுக்கிணங்கத்தான் சிவராசனுக்கு பெங்களூரில் வீட்டை வாடகைக்குக் கொடுத்ததாக ரெங்கநாதன் வாக்குமூலம் அளித்தார். இதில் உண்மை உண்டா என்பதை விசாரித்தார்களா?
41. சந்திரா சுவாமி, சுப்பிரமணிய சுவாமி, சந்திரசேகர், ஆயுத விற்பனையாளர் கசோகி மூவருக்
42. புலிகள் இந்தக் கொலையை செய்ததின் மூலம் அவர்களுக்குக் கிடைத்த
ஆதாயம்என்ன? அமெரிக்கா போன்ற மிகப் பெரிய வல்லரசுகள், சி.ஐ.ஏ. மூலமாக,
ஏராளமான ஆயுத உதவிகளும் செய்து இந்தக் காரியத்தை செய்ய வைத்தார்களா?கும் இந்த வழக்கில் ஏதாவது தொடர்பு உண்டா என்கிற கோணத்தில் விசாரணை நடந்ததா?
தீர்ப்பு விரைவில் வெளிவரப் போகிறது. குறிப்பாக ஜெயின் கமிஷனின் இடைக்கால அறிக்கையைத் தொடர்ந்து சட்ட வல்லுநர்கள் இந்தத் தீர்ப்பை 43. யாரோ சிலரைப் பிடித்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ.யும், விசேஷ புலனாய்வுத் துறையும் எதற்கு?
துறை விசாரித்ததா, அல்லது வெறும் விசாரணை அறிக்கை தயார் செய்ததா?’ என்கிற பில்லியன் டாலர் கேள்விக்கான விடை நிச்சயம் ஒவ்வொரு இந்தியனுக்கும் தெரியவேண்டும். அன்று எழுப்பப் பட்ட பல கேள்விகளில் ஒன்றுக்காவது இது வரை பதில் கிடைக்கவில்லையே? அது ஏன்?.ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இப்படி பல கேள்விகள் சிறப்பு புலனாய்வுத் துறையின் விசாரணையைப் பற்றி எழுந்திருக்கிறது. கேள்விகள் எல்லாம் உண்மைகள் ஆகிவிடாது. ஆனால் பல சந்தேகங்கள் களையப்படாவிட்டால் உண்மைக் குற்றவாளிகள் பலம் வாய்ந்த சக்திகளுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு விடுவார்கள்.
நன்றி : http://tamilleader.in/news/921-2011-09-25-05-13-55.html