-
சூரியன்:
ஒருவரின் ஜாதகத்தில் சூரியனால் தோஷம் ஏற்பட்டால், சூரிய தசை மற்றும்
சூரிய புக்தி காலத்திலும் ஞாயிறன்றும் விரதம் இருந்து, வீட்டுப்
பூஜையறையில் சூரிய பகவானின் திருவுருவப் படத்துக்குச் செந்தாமரை மலர்களால்
ஆன மாலையை அணிவித்து, கோதுமையினால் இனிப்பு செய்து நைவேத்தியம் செய்து,
சூரிய காயத்ரி பாராயணம் செய்தால் தோஷம் நிவர்த்தி ஆகும்.
சந்திரன்:
சந்திரனால் தோஷம் ஏற்பட்டால், சந்திர தசை மற்றும் சந்திர புக்தியில்
திங்கட்கிழமை விரதம் இருந்து அம்பிகையின் திருவுருவப் படத்துக்கு வெள்ளை
அரளி மலர்ச் சரம் சாத்தி, பால் அன்னம் நைவேத்தியம் செய்து, சந்திர
காயத்ரியைப் பாராயணம் செய்து வந்தால் தோஷம் நிவர்த்தியாகும்.
செவ்வாய்
செவ்வாயால் தோஷம் ஏற்பட்டால், செவ்வாய் தசை மற்றும் புக்தி காலங்களில்
செவ்வாய்தோறும் விரதம் இருந்து, செவ்வாய் பகவானுக்குச் செண்பக மலரால்
அர்ச்சனை செய்து, வெண் பொங்கலும் துவரையும் நைவேத்தியம் செய்து, செவ்வாய்
காயத்ரியைப் பாராயணம் செய்து, முருகப்பெருமானை வணங்கி வர செவ்வாய் தோஷம்
நிவர்த்தி ஆகும்.
புதன்:
புதனால் தோஷம் ஏற்பட்டால், புதன் தசை, புதன் புக்தி காலங்களில்,
புதன்கிழமை விரதமிருந்து, வெண் காந்தள் மலர் தூவி, புளி சாதம் படைத்து,
புதனின் காயத்ரி மந்திரத்தை 24 முறை பாராயணம் செய்து ஸ்ரீமகா விஷ்ணுவை
வழிபட புத பகவானின் பரிபூரண அருளும், சிறந்த அறிவும், கல்வியும்
பெறுவார்கள்.
-
This book Navagiragangalum Avattrirkuriya Dhosha Parikaarangalum is written by Pathippaga Veliyeedu and published by Manimegalai Prasuram.
இந்த நூல் நவக்கிரகங்களும் அவற்றிற்குரிய தோஷப் பரிகாரங்களும், பதிப்பக வெளியீடு அவர்களால் எழுதி மணிமேகலை பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Navagiragangalum Avattrirkuriya Dhosha Parikaarangalum, நவக்கிரகங்களும் அவற்றிற்குரிய தோஷப் பரிகாரங்களும், பதிப்பக வெளியீடு, Pathippaga Veliyeedu, Jothidam, ஜோதிடம் , Pathippaga Veliyeedu Jothidam,பதிப்பக வெளியீடு ஜோதிடம்,மணிமேகலை பிரசுரம், Manimegalai Prasuram, buy Pathippaga Veliyeedu books, buy Manimegalai Prasuram books online, buy Navagiragangalum Avattrirkuriya Dhosha Parikaarangalum tamil book.
|