-
நாடகத்துக்கு முன்னோடி கூத்து என்றால், திரைப்படத்துக்கு முன்னோடி நாடகம். அந்த நாடகம் வழி வந்தவர்களே பிற்காலத்தில் தமிழ்த் திரையுலகின் முன்னோடிகளாகினர். நாடகம் வழி வந்ததால் ஆரம்பக் காலங்களில் தமிழ்த் திரைப்படங்களில் பாடல்கள் நிறைந்திருந்தன. அந்தப் பாடல்களையும் கதாபாத்திரங்களே பாடி, நடிக்கவேண்டி இருந்ததால் நாடக அனுபவம் நிறைந்தவர்களுக்கு வாய்ப்புகள் குவியத் தொடங்கின. நாடகத்தில் நடித்த அனுபவத்தோடு திரைப்படங்களில் நடிக்கும்போது நீண்ட வசனங்கள் கொண்ட காட்சிகளிலும் அவர்களால் சோடைபோகாமல் மிளிர முடிந்தது.
இப்போதெல்லாம் எடுக்கப்படுகிற படங்கள் கதாநாயகர்களை மையப்படுத்தியே எடுக்கப்படுகின்றன. ஆனால், ஆரம்பகாலப் படங்களில் குணச்சித்திர நடிகர்களுக்கும் நகைச்சுவை நடிகர்களுக்கும் எதிர்மறைப் பாத்திரங்களுக்கும்கூட கதாநாயகர்களுக்கு இணையான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கதைக் களன்கள் அமைக்கப்பட்டன. அதற்குக் காரணம் முன்பு சொன்னதுபோல தமிழ்த் திரைப்படம் நாடகம் வழி வந்தது. ஒரு திரைப்படம் வெற்றிபெற கதையோடு கதாபாத்திரங்களாக நடிக்கும் நடிகர்களின் ஆளுமையும் முக்கியமானதாக இருக்கிறது.
அப்படி இன்றைய தமிழ்த் திரைப்படங்களுக்கு முன்னோடியாக திகழ்கின்ற, அன்றைய கருப்பு&வெள்ளைக் காலப் படங்களின் ஆளுமைகளைப் பற்றியதுதான் இந்நூல். இது முழுக்கமுழுக்க நாடகம்&திரைப்படம், திரைப்படம்&நாடகம் என்று தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் பற்றியது.
சரி, நாம் ஏன் அவர்களைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்? அவர்களை தெரிந்துகொள்வதால்தான் நமக்கு என்ன பயன்? ஆளுமை என்றால் என்ன? என்றெல்லாம் பல கேள்விகள் உங்கள் முன் எழலாம்! அதில் தவறில்லை. ஆனால், இந்த நூலை முதலில் வாசிக்க வேண்டியது நீங்கள்தான். இதை சொல்லக் காரணம் இது ஆளுமைகளைப் பற்றியது. எப்போது ஒருவன் கேள்வி கேட்கத் தொடங்குகிறானோ, அப்போதே அவன் சிந்திக்கத் தொடங்குகிறான். சிந்திக்கத் தொடங்குகிறவன் வாழ்வின் வெற்றியை நோக்கிப் பயணிக்கிறான். எனவே, உங்கள் வாழ்க்கை வெற்றிக்கு, உங்கள் ஆளுமைத் திறன் வளர்ச்சிக்கு, வெற்றிபெற்ற ஆளுமைகளைப் பற்றிய இந்நூல் ஒரு கிரியாசக்தியாக, முன்னுதாரணமாக திகழும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் தேவையில்லை.
கொத்தமங்கலம் சீனுவிலிருந்து, பி.யு.சி., டி.ஆர்.ராஜகுமாரி, எம்.ஆர்.ராதா, சந்திரபாபு, டி.எஸ்.பாலையா என்று முத்தான பதினெட்டு திரைச்சுடர்களைப் பற்றிய இந்நூல், ஆளுமையாக திகழ விரும்புகிற ஒவ்வொருவரது கையிலும் தவழவேண்டிய பொக்கிஷம்.
-
This book Thiraichudargal is written by Aranthai Maniyan and published by Vikatan Prasuram.
இந்த நூல் திரைச்சுடர்கள், அறந்தை மணியன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thiraichudargal, திரைச்சுடர்கள், அறந்தை மணியன், Aranthai Maniyan, Cinima, சினிமா , Aranthai Maniyan Cinima,அறந்தை மணியன் சினிமா,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Aranthai Maniyan books, buy Vikatan Prasuram books online, buy Thiraichudargal tamil book.
|