காவல் கோட்டம் (புதிய பதிப்பு) (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Kaval Kottam

Kaval Kottam - காவல் கோட்டம் (புதிய பதிப்பு) (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சு. வெங்கடேசன் (Su.Venkatesan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765489
Pages : 1173
பதிப்பு : 5
Published Year : 2013
விலை : ரூ.770
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்
புரட்சிக் கதிர்கள் தமிழ்நாட்டில் காந்தி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்திய அரசு இலக்கியத்துக்கு வழங்கும் உயரிய விருதான சாகித்ய அகடாமி விருது பெற்ற நாவல். இது காகிதத்தில் பதிக்கப்பெற்ற வெறும் எழுத்துகள் கொண்ட தொடர் வரிசைகளின் அணிவகுப்பு அல்ல. ஒடுக்கப்பட்ட சமூகத்தின் உணர்வுகள் தாங்கிய வாழ்வியல் பெட்டகம். ஆதிகாலத்தில் கூடி வாழ்ந்துகொண்டிருந்த மனித இனம் மாபெரும் சமூகமாக உருவெடுத்த பிறகு பிரிவுகள் ஏற்பட்டன. தொழிலின் அடிப்படையில் சாதிகள் பிரிக்கப்பட்டன என்று சொல்லப்பட்டு வந்த காலத்தில் களவும் ஒரு தொழிலாகிப் போனதுதான் பரிதாபம். ஒடுக்கப்பட்ட சமுதாயமொன்று களவு செய்வதை தனது தொழிலாக்கிக்கொண்டது. அந்த சமுதாயத்தின் முன்னோர்கள் காட்டிய வழியில் அந்த இனத்தின் வகையறாக்கள் பிரிந்தன. அந்த வகையறாக்களைத்தான் சமூகம், குற்றப் பரம்பரைகள் என அடையாளம் காட்டியது. வடஇந்தியாவில் சுமார் 300 ஆண்டு காலமாக ‘டக்கி’கள் எனப்படும் குற்றப் பரம்பரை மிகப் பெரிய வழிப்பறிக் கொள்ளைக் கூட்டமாக நடமாடி வந்தது. அவர்களது வாழ்வியல் என்பது பிறரை ஏமாற்றி அவர்களது சொத்துக்களை கொள்ளையிடுவது, அந்தப் பணத்தைக் கொண்டு சுகபோகங்களை அ-னுபவிப்பது என்பதே! ஆனால், நூலாசிரியர் சு.வெங்கடேசன் ‘காவல் கோட்டம்’ என்ற இந்த நூலில் குறிப்பிடும் குற்றப் பரம்பரையினர் யாரையும் நம்பவைத்துக் கழுத்தறுத்தது கிடையாது. காவல் தொழில் பார்த்தவர்கள் ஆடுகளை கிடையில் இருந்து திருடும் கொள்ளைக் கூட்டமாக உருவானது பெரும் சோகம். இந்த குற்றப் பரம்பரையின் வரலாற்றில் எத்தனை வீரம்? எத்தனை சோகம்? எத்தனை நெகிழ்ச்சி? இதோ நம் தமிழகத்தில்... மண் மணக்கும் மதுரையில் நிலைகொண்டிருந்த ஒரு சமுதாயத்தின் வரலாறு இந்தக் காவல் கோட்டம். இதன் மூலம் மதுரையின் 600 ஆண்டு கால வரலாற்றைத் தரிசிக்கலாம். தமிழ்ச் சமுதாயத்தில் உழைக்கும் மக்கள் கூட்டம் ஒன்று ஏன் குற்றப் பரம்பரையாக உருவானது? அந்த மக்களின் வாழ்வியல் என்ன? இறுதியாக அந்த மக்கள் அடைந்த இழிப் பெயர் என்ன? கிறிஸ்துவ மிஷனரிகளின் வருகைகள் இந்த மக்களின் வாழ்வியலை எப்படி மாற்றின? ‘உரலு நகராம இருக்க அடிக் கல்லு; கை வலிக்காம இருக்க கத சொல்லு’ என இந்த மக்களின் வாழ்வியலை இவர்களது சொலவடைகள் கொண்டே சொல்லாட்சி புரிந்து சிலிர்க்க வைக்கிறார் சு.வெங்கடேசன். இதற்காக அவர் மேற்கொண்ட கள ஆய்வுகள், வாய்மொழிப் பதிவுகள் என ஒவ்வொன்றுக்கும் உயிர்ப்பு இருக்கிறது. ‘இரவெல்லாம் மழை பெய்ததால் எங்கும் தண்ணீர் தேங்கிக் கிடந்தது. பூமியால் நீரைக் குடித்து முடிக்க முடியவில்லை’ என ஆங்காங்கே அணிக்கு அணி சேர்க்கும் வார்த்தைக் குவியல்கள் காவல் கோட்டத்தை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துகின்றன. வரலாறுகள் வழிவழியாக வாய்மொழியாக சொல்லப்பட்டு வருபவை மாத்திரமல்ல. எனினும் குற்றப் பரம்பரையின் எஞ்சிய கடைசிக் கட்ட வாரிசுகள் தங்கள் பரம்பரையைப்பற்றி தாங்களே சொல்லும் கதைகள் சுவாரசியம் நிறைந்தவை. வீரமும், தீரமும் இந்த பரம்பரையின் சொத்தாக இருந்துள்ளதை காவல் கோட்டம் பதிவு செய்கிறது. நூல் ஆசிரியர் சு.வெங்கடேசனின் பத்தாண்டு கால உழைப்பு இந்த நூல். அவரது உழைப்பின் மேன்மை மகத்தானது. மறைக்கப்பட்ட வரலாற்றை மகத்தான முறையில் வெளிகொண்டு வந்தமைக்காக தமிழ்கூறும் நல்லுலகம் அவரது பெயரை என்றென்றும் உச்சரிக்கும் என்றால் அது மிகையாகாது. ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களின் பண்பாடுகள், கலாச்சாரங்கள் இயற்கையை ஒட்டி அமைந்திருந்தன என்பதை காவல் கோட்டத்தைப் படிக்கப் படிக்கத் தெரிந்துகொள்வீர்கள். கொம்பூதி புளியமரமும், நல்ல தண்ணீர்க் கிணறும், வெள்ளாடுகளின் சத்தமும் உங்கள் மனதைவிட்டு அகலாது என்பது திண்ணம். வாருங்கள் வரலாற்றில் பயணிப்போம்!

  • This book Kaval Kottam is written by Su.Venkatesan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் காவல் கோட்டம் (புதிய பதிப்பு) (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்), சு. வெங்கடேசன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kaval Kottam, காவல் கோட்டம் (புதிய பதிப்பு) (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்), சு. வெங்கடேசன், Su.Venkatesan, Novel, நாவல் , Su.Venkatesan Novel,சு. வெங்கடேசன் நாவல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Su.Venkatesan books, buy Vikatan Prasuram books online, buy Kaval Kottam tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

இலக்கியச் சுவடுகள் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Ilakiya Suvadugal

விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

வாழும் வள்ளுவம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

பிசிராந்தையார் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

கம்பன் புதிய பார்வை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

கொற்கை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Korkai

சிந்தா நதி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

குற்றாலக் குறிஞ்சி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Kuttrala Kuravanji

வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Vallalar Kanda Orumaipadu

ஆசிரியரின் (சு. வெங்கடேசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வைகை நதி நாகரிகம் (கீழடி குறித்த பதிவுகள்)

காவல் கோட்டம் (புதிய பதிப்பு) (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Kaval Kottam (New Edition) (Sahitya Akademi Award winning book)

வீரயுக நாயகன் வேள்பாரி (பாகம் 1, 2) - Veerayuga Nayagan Velpari (Pagam 1, 2)

ஆட்சித் தமிழ் ஓர் வரலாற்றுப் பார்வை

காவல் கோட்டம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) 2 பாகங்களை கொண்டது - Kaval Kottam ((Sagittarius Academy Award winning book) consists of 2 parts

கதைகளின் கதை

இந்தியில் மட்டும் பதில் சட்ட விரோதம்

சந்திரஹாசம் : முடிவில்லா யுத்தத்தின் கதை (தமிழ் கிராஃபிக் நாவல்) - Chandrahaasam : Mudivilla Yudhathin Kadhai (Tamil Graphic Naaval)

உ.வே.சா. . சமயம் கடந்த தமிழ்

அலங்காரப்ரியர்கள்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


உன்னில் தொலைந்த நெஞ்சம்

நவம்பர் நிலா

வுதரிங் ஹைட்ஸ் - Wuthering Heights

வர்மனின் வெண்மதி

சமுதாய வீதி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

கர்ண பரம்பரை

வேட்டை மான் - Vettai Maan

நெஞ்சோரக் கனவு

மலர்ந்த நேசப்பூவே

பனிப் பூவே..! - Pani Poovae..!

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழ்நாட்டின் கதை - Tamilnatin Kathai

ஃப்ளாஷ்பேக் சாமானியன் கடந்து வந்த பாதை

மறதி நோய் சுகமா? சுமையா? - Marathi Noi Sugama?sumaiya?

இளைஞனே ரிலாக்ஸ் ப்ளீஸ் - Ilaignane Relax Please

ஹாய் மதன் (பாகம் 4) - Hai Madhan(part 4)

மண்வாசம் மண் மணமும் மருத்துவ ரகசியங்களும் - Manvasam Mann Manamum Maruthuva Ragasiyangalum

எந்நாளும் லாபம் தரும் பொன்னான காய்கறிகள்! - Ennaalum Labam Tharum Ponnana Kaikarigal!

உஷார் உளவாளி - Ushar ulavaali

நெல் வறட்சியிலும் மகசூல் தரும் பாரம்பரிய நெல் ரகங்கள்! - Nel Varatchiyulum Mahasool tharum Parambariya Nel Ragangal!

ஆடத் தெரியாத கடவுள் - Aada Theriyatha Kadavul

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91