-
அன்னை தெரசா, அறிஞர் அண்ணா, ஆபிரகாம் லிங்கன், இந்திரா காந்தி,
திலகர்,பாரதியார், அலெக்சாண்டர், ஜவகர்லால் நேரு, சுபாஷ் சந்திர போஸ், எம்.
ஜி. ஆர், விக்டோரியா மகாராணி,ராஜாஜி,சார்லி சாப்ளின், விவேகானந்தர்,
டாக்டர் இராதாகிருஷ்ணன், பெர்னாட் ஷா, ஜான் கென்னடி, ஜோசப் ஸ்டாலின்,
வல்லபாய் பட்டேல், மகாத்மா காந்தி, தமிழ்த் தென்றல் திரு . வி. க. டாக்டர்
முத்துலட்சுமி ரெட்டி, காயிதே மில்லத், நாமக்கல் கவிஞர், தந்தை பெரியார்,
வ. உ. சிதம்பரனார், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்,மாவீரர் புரூஸ்லீ, சிவாஜி
கணேசன், பாரத ரத்னா அப்துல் கலாம்.ஆகியோர்களைப் பற்றி நான் படித்து
பிரமித்த, உயர்ந்தவர்களின் வாழ்வில் நடந்த சம்பவங்களின் கோர்வையே இந்நூல்.
"எந்த நூல் நமக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்து உறுதியையும் தந்து நம்மையே
நாம் உணர்ந்து செயலாற்றுமாறு பிடர் பிடித்து உந்து கிறதோ அந்த நூலே மேலான
நூலாகும். "எந்த நூல் நம்மை ஒரு புத்துலகிற்கு உயர்த்தி, புது எண்ணத்தைப்
புகுத்தி, புது மனிதனாக்கி, புது செயலாற்றச் செய்கிறதோ அந்த நூலே மேலான
நூலாகும்" என்று தன்னம்பிக்கை எழுத்தின் முன்னோடி அறிஞர் அப்துற்-றஹீம்
அவர்கள் கூறியது போல, இந்த நூல் வாசிப்பதின் மூலம் உங்களுக்குள் நல்லவை
உதயமாக ஒரு ஊக்குவிப்பாக இருக்கும் என நம்புகிறேன். இவ்வாறு
'உயர்ந்தவர்களின் இளமைக்காலம்' என்ற இந்நூலின் ஆசிரியர் சபீதா ஜோசப் தமது
முன்னுரையில் கூறியிருக்கிறார்.
-
இந்த நூல் உயர்ந்தவர்களின் இளமைக் காலம், சபீதா ஜோசப் அவர்களால் எழுதி நேஷனல் பப்ளிஷர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , உயர்ந்தவர்களின் இளமைக் காலம், சபீதா ஜோசப், Sabitha Joseph, Manavargalukkaga, மாணவருக்காக , Sabitha Joseph Manavargalukkaga,சபீதா ஜோசப் மாணவருக்காக,நேஷனல் பப்ளிஷர்ஸ், National Publishers, buy Sabitha Joseph books, buy National Publishers books online, buy tamil book.
|