-
பிரதோஷம் என்பது என்ன ? பிரதோஷம் என்பது பாவங்களை தொலைத்துக் கொண்டு
மோட்ஷத்தை அடைய செய்யப்படும் வழிபாடு ஆகும். பிரதோஷம் அதாவது பிரதி +
தோஷம் என இரு வார்த்தைகளைக் கொண்டது. பிரதி என்பது ஒவ்வொன்றும் எனவும்,
தோஷம் என்பது பாபத்தையும் குறிக்கும். ஆகவே பிரதோஷம் என்பது ஒவ்வொரு
பாபத்தையும் தொலைத்துக் கொள்ளும் வழிபாடு ஆகும்.
பிரதோஷம் என்பதை எப்போது செய்யலாம்? ஒவ்வொரு மாதமும் சுக்ல மற்றும்
கிருஷ்ண பக்ஷத்தில் வரும் திரியோதசியன்று சாயங்காலத்தில், சிவபெருமான்
ஆனந்தநடனமாடும் நேரத்தில் அவரை வணங்கினால் நம் வேண்டுதல்களுக்கு பலன்
கிட்டும் என்பது நம்பிக்கை. அந்த நேரத்தில்தான் நந்தி தேவரின் இரண்டு
கொம்புகளுக்கு இடையே உள்ள பகுதியில் சிவபெருமான் நடனம் ஆடுவதாக ஐதீகம்
உள்ளது. அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு இடைப்பட்ட காலத்தில் 13 ஆம் திதியன்று
வருவது பிரதோஷ தினம்.
பிரதோஷ தினத்தன்று சாயங்கால வேளையில் ஏன் சிவ வழிபாடு செய்ய வேண்டும்?
அன்று சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியை வணங்கித் துதித்தால் வாழ்வின்
அனைத்து வளமும் பெருகுமாம். அதுமட்டும் அல்ல அன்றுதான் சாயங்காலத்தில்
அனைத்து தேவர்களும், தெய்வங்களும் பூமிக்கு வந்து சிவபெருமானை வணங்கித்
துதிக்கின்றார்களாம். அப்போது நாமும் ஆலயத்துக்கு சென்று சிவ வழிபாடு
செய்யும்போது அங்கு கண்களுக்கு புலப்படாமல் அனைத்து இடங்களிலும்
நிறைந்துள்ள தெய்வங்களின் ஆசிகளும் அங்கு செல்லும் ஒருவருக்கும்
கிடைக்கின்றது. தொடர்ந்து 120 பிரதோஷ தினங்கள் எவர் ஒருவர் சிவ வழிபாடு
செய்வாரோ அவருக்கு மீண்டும் பிறவாமை எனும் பலன் கிட்டுமாம்.
-
இந்த நூல் சகல வளமும் பெற பிரதோஷ வழிபாடு, பதிப்பகத்தார் அவர்களால் எழுதி மகேஸ்வரி ஆப்செட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சகல வளமும் பெற பிரதோஷ வழிபாடு, பதிப்பகத்தார், Pathippagathar , Aanmeegam, ஆன்மீகம் , Pathippagathar Aanmeegam,பதிப்பகத்தார் ஆன்மீகம்,மகேஸ்வரி ஆப்செட், Maheswari Offset, buy Pathippagathar books, buy Maheswari Offset books online, buy tamil book.
|