-
‘நல்லவர்களுக்குக் காலமில்லை’ என்று கூறுவார்கள். எல்லாக் காலங்களிலும் சந்தர்ப்ப வாதிகளே பெரும்பாலும் வெற்றிபெறுகிறார்கள். பொய்கள் உலா வருகிறபோது உண்மைகள் ஓரமாக நின்று வேடிக்கைப் பார்க்கின்றன.
pavalar varadharajanமிகச் சிறந்த மேடைப் பாடகராகவும், கவிஞராகவும், நாடகாசிரியர் மற்றும் நடிகராகவும் பன்முகம் கொண்ட பாவலர் வரதராசனை காலம் மறந்து விட்டது என்பது பெரும் சோகம்தான்.
“வாழ்ந்தாருக்கும், வாழ்வோருக்கும் மார டிக்கும் புலவர்கள் வாழும் இந்நாளில் வாழ முடியாமல் மாண்டுபோன ஒரு மக்கள் கவிஞரைப் பற்றி, வாழ முடியாது போராடிக் கொண்டிருக்கும் சங்கை வேலவன் ஒரு புத்தகத்தை எழுதி பதிப்பித் துள்ளதை, வாழ முடியாது போராடிக் கொண் டிருக்கும் கோடிக்கணக்கான பாரதபுத்திரர்கள் சார்பில் பாராட்டியே தீர வேண்டும்” என்று தோழர் அறந்தை நாராயணன் பாராட்டியுள்ளார்.
மதுரை மாவட்டம் பெரியகுளம் வட்டத்தில் உள்ள பண்ணைபுரமே தோழர் வரதராசனின் கிராமமாகும். இராமசாமி கங்காணி இவரது தந்தையார்; சின்னத் தாயம்மாள் இவரது தாயார். அது ஒரு நடுத்தர விவசாயக் குடும்பம்.
இவரது ஊருக்கு அருகில் உள்ள சங்கராபுரம் வேலுச்சாமி என்ற சங்கை வேலவன் ‘படைப் பாளிகளின் பார்வையில் பாவலர் வரதராசன்’ என்ற இந்த நூலைத் தொகுத்துள்ளார்.
இந்த நூலில் பாவலரோடு தொடர்புடைய தலைவர்களும், அறிஞர்களும், எழுத்தாளர்களும், உடன்பிறந்தோரும் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர். தோழர்கள் எம். கல்யாண சுந்தரம், ஐ.மாயாண்டி பாரதி, கே.டி.கே. தங்கமணி, என்.இராமகிருஷ்ணன், எஸ்.தோதாத்ரி, ஆர்.நல்லகண்ணு, கலைஞர் மு.கருணாநிதி, த.ஜெயகாந்தன், ஆர்.டி.பாஸ்கர், இளையராஜா, கங்கை அமரன், திலகவதி ஐபிஎஸ், கே.ஜீவபாரதி ஆகியோர் பாவலரைப் பற்றிய தங்கள் கருத்து களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
-
இந்த நூல் பாவலர் வரதராசன் மேடை இசை முழக்கம், சங்கை வேலவன் அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பாவலர் வரதராசன் மேடை இசை முழக்கம், சங்கை வேலவன், Sangai Velavan, Iyal-Isai-Nadakam, இயல்-இசை-நாடகம் , Sangai Velavan Iyal-Isai-Nadakam,சங்கை வேலவன் இயல்-இசை-நாடகம்,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy Sangai Velavan books, buy Paavai Publications books online, buy tamil book.
|