பாண்டிமாதேவி

பாண்டிமாதேவி

வகை: சரித்திர நாவல் (Sarithira Novel)
எழுத்தாளர்: நா. பார்த்தசாரதி (Na. Parthasarathy)
பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)
ISBN :
Pages : 568
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.350
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஜெகாதா குறுநாவல்கள் சுந்தரி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பாண்டி மாதேவி' என்னும் இந்த நாவலை எழுதுவதற்கு இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு அற்புதமான காலைப்போதில் கன்னியாகுமரிக் கடற்கரையில் வீற்றிருந்தேன். நீலத்திரைக் கடலின் அடி மூலையில் செஞ்ஞாயிறு கதிர் விரித்து மேலெழும் காட்சியின் மாட்சியில் எனது நெஞ்சும், நினைவும், புலன்களும் ஒன்றிப்போய்த் திளைத்திருந்த நேரம். நீலக்கண்ணாடிப் பாளங்கள் போல் அலை யெழும்பி மின்னி ஒசையிட்டுப் பரந்து தென்படும் கடலும், அதன் கரையும், காலை மேளமும் நாதசுவரமும், ஒலித்துக் கொண்டிருக்கும் குமரித் தெய்வத்தின் கோவிலும்-என் மனத்தில் பல்லாயிரம் எண்ணப் பூக்களை மலரச் செய்தன. இப்போது தென் கடலாக மாறிவிட்ட இந்த நீர்ப்பரப்பின் எங்கோ ஒரு பகுதியில் தமிழ் நாகரிகம் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வீறெய்திய நினைவு தோன்றிற்று. குமரித் தெய்வம் குன்றா அழகுடன் கன்னிமைக் கோலம் பூண்டு நின்று தவம் செய்யும் தென்பாண்டிச் சீமையின் வரலாற்று வனப்புக்கள் எல்லாம் நினைவில் வந்து நீளப் பூத்தன. 'தென்பாண்டிநாடு', ‘புறத்தாய நாடு’ - 'நாஞ்சில் நாடு’ என்றெல்லாம் குறிக்கப்படும் வளம் வாய்ந்த நாட்டின் சூழலை ஒரு வரலாற்று நாவலில் புனைந்து போற்ற வேண்டுமென்ற ஆவல் அன்று அந்தக் காலை நேரத்தில் கன்னியாகுமரிக் கடற்கரையில் என் மனத்தில் எழுந்தது. அதன்பின் சிறிது காலம் அந்த ஆவல் நெஞ்சினுள்ளேயே கனிந்து, கனிந்து ஒரு சிறிய தவமாகவே மாறிவிட்டது. அந்தத் தவத்தோடு பல நூல்களைப் படித்தேன். பலமுறை தென் பாண்டி நாட்டு ஊர்களில் சுற்றினேன். மேலைச் சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியிலும், மதுரைத் தமிழ்ச் சங்கத்திலும், படித்துக் கொண்டிருந்த காலங்களிலேயே எனக்கு வரலாற்று அழகுகளிலும், அவை தொடர்பான கற்பனைகளிலும் திளைக்கும் ஆர்வம் உண்டு. பின்பு இந்த ஆர்வம் வளர்ந்து பெரிதான காலத்தில் நண்பர்களும், பத்திரிகை ஆசிரியர்களும் இதை மேலும் வளர்த்தார்கள்.கன்னியாகுமரிக் கடற்கரையில் அன்று நான் கண்ட கனவுகள் நனவாகும்படி வாய்ப்பளித்து உற்சாகமூட்டியவர் கல்கி ஆசிரியர் திரு. சதாசிவம் அவர்கள் ஆவார். 'பாண்டிமாதேவி-என்னும் இந்த வரலாற்று நாவலைக் கல்கியில் ஒராண்டுக் காலம் வரை வெளி வரச் செய்து ஊக்க மூட்டியவர் அவர்தாம். பேராசிரியர் கல்கி அவர்கள் தம்முடைய மாபெரும் சரித்திர நாவல்களால் அழகு படுத்திய இதழ் கல்கி. அந்த இதழில் பாண்டிமாதேவியும் வெளியாகி அழகு படுத்தினாள் என்பதை நினைக்கும்போது எனக்குப் பெருமையாயிருக்கிறது.

  • இந்த நூல் பாண்டிமாதேவி, நா. பார்த்தசாரதி அவர்களால் எழுதி ஸ்ரீ செண்பகா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பாண்டிமாதேவி, நா. பார்த்தசாரதி, Na. Parthasarathy, Sarithira Novel, சரித்திர நாவல் , Na. Parthasarathy Sarithira Novel,நா. பார்த்தசாரதி சரித்திர நாவல்,ஸ்ரீ செண்பகா பதிப்பகம், Shri Senbaga Pathippagam, buy Na. Parthasarathy books, buy Shri Senbaga Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (நா. பார்த்தசாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மணிபல்லவம் - Manipallavam

பாரதியார் கவிதைகள்

மகாபாரதம் அறத்தின் குரல்

மணிபல்லவம் சரித்திர நாவல் - Manipallavam Sarithira Novel

சமுதாய வீதி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

நெஞ்சக்கனல்

நா.பா.வின் இலக்கியக் கதைகள்

மூவரைவென்றான்

நா.பா. வின் மொழியின் வழியே

சமுதாய வீதி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Samuthaya Veethi

மற்ற சரித்திர நாவல் வகை புத்தகங்கள் :


மகாபாரதம் பாகம் 1

கலைஞரின் ரோமாபுரிப் பாண்டியன்

சிவகாமியின் சபதம் 4 பாகங்கள் கொண்ட 2 புத்தகங்கள்

மறவர் சீமையின் விடுதலை வேங்கை மன்னர் சேதுபதி

தியாகவல்லபன் - Thyagavallaban

கடல் நிலா (பாகம் - 1 & 2)

சோழர் சரித்திரம்

நீர்ச்சுடர் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 23)

தமிழ் பேரரசன் ராஜேந்திரன்

நித்திலவல்லி - Nithilavalli

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழ் காதல்

பரிபாடல் - Paripadal

மவுண்ட் பேட்டன் பிரபு (பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து சுதந்திர இந்தியா வரை)

சித்தர்களின் அற்புத சித்திகள் - Siddarkalin Arputha Siddhikal

நகைச் சுவைக் கதைகள்

உயர்வுக்கு வழிகாட்டும் ஈசாப் கதைகள் 100 - Uyarvukku Vazhikaattum Aesop Kathaigal 100

ஆப்கானிஸ்தான் புரியாத போர்களின் தொடர் சங்கிலி நேற்றும் இன்றும்

அற்புதங்கள் நிகழ்த்தும் ஆயுர்வேதம்

திருக்குறள் அகராதி

கம்பர் கவி இன்பம் தொகுதி 1 - Kambar Kavi Inbam Thoguthi 1

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91