-
சிலப்பதிகாரம் பற்றிய ஆராய்ச்சி நூல்களில் மிக முக்கியமானது பேராசிரியர் வெ.சு.சுப்பிரமணிய ஆச்சாரியார் எழுதிய இந்நூல் ஆகும். இவர் பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் தமிழ்ப் பேராசிரியர். சிலப்பதிகாரத்தை அணு அணுவாக ஆராய்ந்து இந்த நூலை எழுதியுள்ளார். சிலப்பதிகாரம், ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றா? இந்நூலில் பெருங்காவியத்துக்குரிய இலக்கணங்கள் அமைந்து இருக்கின்றனவா? இதனை இயற்றியவர் இளங்கோவடிகளா? அவர் சேரன் செங்குட்டுவனின் தம்பியா? இந்த நூல் சங்க காலத்தைச் சேர்ந்த நூலா… இப்படி பல கேள்விகளை எழுப்பி தமது ஆராய்ச்சி மூலம் பல கேள்விகளை எழுப்பி தமது ஆராய்ச்சி மூலம் பல உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறார் நூலாசிரியர். தன் வாதத்துக்கு வலுவூட்ட, பழம் பெரும் நூல்களில் இருந்து ஆதாரங்களை எடுத்துக்காட்டுகிறார். சிந்தனைக்கு விருந்தளிக்கும் நூல். ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் பயனளிக்கக் கூடிய நூல். நன்றி: தினத்தந்தி, 24/4/2013.
-
This book Silappathikaara aaraaichi is written by Prof. V. Su. Subramania Acharya and published by Sekar Pathippagam.
இந்த நூல் சிலப்பதிகார ஆராய்ச்சி, பேராசிரியர் வெ.சு.சுப்பிரமணிய ஆச்சாரியார் அவர்களால் எழுதி சேகர் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Silappathikaara aaraaichi, சிலப்பதிகார ஆராய்ச்சி, பேராசிரியர் வெ.சு.சுப்பிரமணிய ஆச்சாரியார், Prof. V. Su. Subramania Acharya, Varalaru, வரலாறு , Prof. V. Su. Subramania Acharya Varalaru,பேராசிரியர் வெ.சு.சுப்பிரமணிய ஆச்சாரியார் வரலாறு,சேகர் பதிப்பகம், Sekar Pathippagam, buy Prof. V. Su. Subramania Acharya books, buy Sekar Pathippagam books online, buy Silappathikaara aaraaichi tamil book.
|