-
இன்று காலை என்றும் போல்
இன்றும் வழிபாட்டை துவங்கினேன், எனது அருமை மகன் (சிறுவன்) என்னுடைய
வழிபாட்டை நிறுத்தி என்னிடம் ஒரு கேள்வியைய் கேட்டனன்
அப்பா! கடவுள்னா யாருப்பா?
சற்று
திகைத்தவனாய் பதில் அளித்தேன்(எனக்கு தெரிந்த பதிலை) கடவுள்னா
நம்மையெல்லாம் படைத்தவர், இவ்வுலகிலுள்ள எல்லா உயிர்களையும் மற்றும்
சூரியன்,சந்திரன், கோள்கள், அண்ட சராசரங்கள் அனைத்தையும் படைத்து
கத்துக்கொண்டிருப்பவர்-தன்பா கடவுள்
அப்படியா! அப்படின்னா கடவுள் எப்படி இருப்பாரு? நம்மளை மாதிரி இருப்பாரா? பெருசா இருப்பாரா? குட்டிய இருப்பாரா? அழகா இருப்பாரா?
நான் சிந்தித்துகொண்டிருக்கையில்
அப்பா, நீங்க ‘அருட்பெருஞ்ஜோதின்னு’ –
திருவிளக்கை(தீபத்தை) வழிபடுரிங்க, அம்மா – எல்லா
சாமியையும்(சிவன்,பார்வதி,பெருமாள், முருகன் விநாயகர்னு) வழிபடுறாங்க,
ஸ்கூல்ல என் நண்பர்கள் பற்பல கடவுள வழிபடுறாங்க? அப்ப இந்த மாதிரி எத்தனை
எத்தனை கடவுள்ப்பா உலகத்துல இருக்காங்க? எத்தனை எத்தனை கடவுள்னு? நான்
சிந்திதுகொண்டிருக்கையில்...[சாதிக்கு ஒரு கடவுள், சமயத்தில் பல கடவுள்,
வெவ்வேறுவகை மதங்களில் பல கடவுள்கள், கிராமத்திற்கு ஒரு கடவுள்,
நாட்டிற்க்கு ஒரு கடவுள்...]
சிறுவன் நான் குழம்பிய நிலையை
பார்த்துவிட்டு - சரிப்பா, நீ வணங்குற கடவுளான “‘அருட்பெருஞ்ஜோதியை” நீ
பார்த்திருக்கயா? அவர் எப்படி இருப்பாரு? அழகா இருப்பாரா? அவருக்கு எத்தனை
கை,கால், தலை இருக்கும்? நம்மள மாதிரி இருப்பாரா?
-
இந்த நூல் என்ன கூட்டிட்டு போங்கப்பா (சிறுவர் சிறுகதைகள்), மு.அப்பாஸ் மந்திரி அவர்களால் எழுதி தமிழ்மணி நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , என்ன கூட்டிட்டு போங்கப்பா (சிறுவர் சிறுகதைகள்), மு.அப்பாஸ் மந்திரி, Mu.Appaas Mandhiri, Kathaigal - Tamil story, கதைகள் , Mu.Appaas Mandhiri Kathaigal - Tamil story,மு.அப்பாஸ் மந்திரி கதைகள்,தமிழ்மணி நிலையம், Tamilmani Nilayam, buy Mu.Appaas Mandhiri books, buy Tamilmani Nilayam books online, buy tamil book.
|